சந்திரபாபு நாயுடு, மகன் நாரா லோகேஷ் மற்றும் பல TDP தலைவர்கள் வீட்டுக் காவல்!!

YSR காங்கிரஸ் கட்சிக்கு எதிராக பேரணி நடத்த முயன்ற தெலுங்கு தேசக் கட்சி தலைவர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர்!!

Last Updated : Sep 11, 2019, 09:42 AM IST
சந்திரபாபு நாயுடு, மகன் நாரா லோகேஷ் மற்றும் பல TDP தலைவர்கள் வீட்டுக் காவல்!! title=

YSR காங்கிரஸ் கட்சிக்கு எதிராக பேரணி நடத்த முயன்ற தெலுங்கு தேசக் கட்சி தலைவர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர்!!

ஆந்திரா மாநிலத்தில் முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி ஆட்சி நடைபெற்றுவருகிறது. இந்நிலையில், ஓய்.எஸ்.ஆர் காங்கிரஸ் அரசியல் வன்முறையில் ஈடுபடுவதாக புகார் தெரிவித்து இன்று அவர்களுக்கு எதிராக உண்ணாவிரதம் போராட்டம் மற்றும் பேரணி நடத்த தெலுங்கு தேசம் கட்சி அழைப்பு விடுத்திருந்தது. 

இந்த போராட்ட அறிவிப்பால் குண்டூர் மாவட்டத்தில் பதற்றமான சூழல் ஏற்பட்டது. முக்கிய பகுதிகளில் போலீசார் குவிக்கப்பட்டனர். மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தெலுங்குதேசம் கட்சியின் பல்வேறு தலைவர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

தெலுங்குதேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு, அவரது மகன் நர லோகேஷ் ஆகியோரும் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் வெளியில் எங்கும் செல்ல முடியாதபடி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சந்திரபாபு நாயுடுவின் வீட்டை நோக்கி சென்ற கட்சித் தொண்டர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். பின்னர் அவர்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டனர்.

அத்துடன் நரசராவ்பேட்டா, சட்டனபள்ளி, பல்நாடு மற்றும் குராஜாலா உள்ளிட்ட இடங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

 

Trending News