மதுபோதையில் தாயிடம் தகராறு - அண்ணனை கொன்று புதைத்த இளைஞர்

கேரளாவில் மதுபோதையில் அடிக்கடி தாயிடம் தகராறில் ஈடுபட்ட அண்ணனை கழுத்தை நெரித்து கொலை செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார். 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Mar 25, 2022, 04:08 PM IST
  • மதுபோதையில் அடிக்கடி தாயிடம் தகராறில் ஈடுபட்டதாக தகவல்
  • சொந்த அண்ணனை கொன்று புதைத்த சகோதரர் கைது
  • தாய் உதவியுடன் வீட்டு அருகிலேயே உடலை புதைத்த சம்பவம்
மதுபோதையில் தாயிடம் தகராறு - அண்ணனை கொன்று புதைத்த இளைஞர் title=

கேரள மாநிலம் திருச்சூர் பகுதியை சேர்ந்தவர் பாபு(26). கட்டட தொழிலாளியான இவர் தனது தாய் மற்றும் தம்பி ஷாபு(23) ஆகியோருடன் வசித்து வந்தார். இந்நிலையில் கடந்த சில நாட்களாக பாபுவை காணவில்லை என அவரது தயார் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த திருச்சூர் போலீசார் பாபுவை தீவிரமாக தேடி வந்தனர். 

இதனிடையே பாபுவின் வீட்டுக்கு செல்லும் வழியில் நிலத்தில் கை ஒன்று வெளியே தெரிவதை அப்பகுதி மக்கள் பார்த்துள்ளனர். இதுதொடர்பாக அவர்கள் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் அப்பகுதியை தோண்டினர். அப்போது உள்ளே இளைஞரின் உடல் இருந்தது. பின்னர் உடலை மீட்டு பார்த்தபோது தான் அது பாபுவின் உடல் என்பது தெரியவந்தது. 

உடலை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீசார் பாபுவின் மரணம் குறித்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது பாபுவின் சகோதரர் மற்றும் தாய் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் பாபுவை கொலை செய்தததை அவரது சகோதரர் ஒப்புக்கொண்டார். 

மேலும் படிக்க | கேரளாவை உலுக்கிய ஜிஷா கொலை வழக்கு; குற்றவாளிக்கு தூக்கு தண்டனை!

தனது சகோதரர் பாபு அடிக்கடி குடித்துவிட்டு வந்து தாயிடம் தகராறில் ஈடுபடுவார் என்றும், சம்பவத்தன்றும் மதுபோதையில் தாயிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக ஹாபு தெரிவித்துள்ளார். அப்போது ஆத்திரத்தில் அண்ணனை அடித்து கீழே தள்ளி கழுத்தை நெரித்து கொலை செய்ததாக தெரிவித்தார். இந்த சம்பவம் யாருக்கும் தெரியக்கூடாது என வீட்டின் அருகிலேயே தனது தாயின் உதவியுடன் குழி தோண்டி உடலை புதைத்ததாக அவர் வாக்குமூலம் அளித்துள்ளார். 

இதைத்தொடர்ந்து அவரை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர். மேலும் ஷாபுக்கு உதவிய அவரது தாய் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருவதால் அவர் குணமடைந்ததும் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என திருச்சூர் போலீசார் தெரிவித்துள்ளனர். 

மேலும் படிக்க | கேரளாவில் ஆர்எஸ்எஸ் ஊழியர் மர்மமான முறையில் கொலை!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News