பணியில் உள்ளவர்களுக்கு Good News! சம்பள உயர்வு 10% கிடைக்கும் என தகவல்!

இந்தியாவில் உள்ள நிறுவனங்கள் ஊழியர்களின் சராசரி சம்பளத்தை 10 சதவிகிதம் அதிகரிக்கலாம் என்பது தொடர்பாக தகவல் வெளியாகியுள்ளது.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Jan 16, 2023, 06:30 PM IST
  • உலகம் முழுவதும் பொருளாதார மந்தநிலை குறித்து பேசப்படுகிறது.
  • பர்பார்மஸ் பே எனப்படுன் திறமையின் அடிப்படையிலான சம்பளம்.
  • இந்தியாவில் உள்ள நிறுவனங்கள் ஊழியர்களின் சராசரி சம்பளத்தை 10 சதவிகிதம் அதிகரிக்கலாம்.
பணியில் உள்ளவர்களுக்கு Good News! சம்பள உயர்வு 10% கிடைக்கும் என தகவல்! title=

Salary Hike 2023: அலுவகத்தில் கடுமையாக உழைக்கும் நீங்கள், உங்களது, மதிப்பீட்டிற்காகக் காத்திருக்கிறீர்கள் என்றால், இந்த செய்தி உங்களுக்குத் தான். இந்த முறை இந்தியாவில் உள்ள நிறுவனங்கள் ஊழியர்களின் சம்பளத்தை சராசரியாக 9.8 அதாவது சுமார் 10 சதவிகிதம் அதிகரிக்கலாம் என கூறப்படுகிறது. இது கடந்த 2022ஆம் ஆண்டை விட சற்று அதிகமாகும். 2022 ஆம் ஆண்டில், இந்த எண்ணிக்கை 9.4 சதவீதமாக இருந்தது.

பர்பார்மஸ் பே எனப்படுன் திறமையின் அடிப்படையிலான சம்பளம்

சமீபத்திய Korn Ferry கணக்கெடுப்பின்படி, சிறப்பாகச் செயல்படும் ஊழியர்களுக்கு இந்த அதிகரிப்பு அதிகமாக இருக்கும். பல்வேறு திறமை மேலாண்மை படிகள் (Performance Pay) மற்றும் இழப்பீட்டுத் திட்டங்கள் மூலம் திறமைகளைத் தக்கவைத்துக்கொள்வதில் நிறுவனங்கள் கவனம் செலுத்துகின்றன.

2020-ல் 6.8 சதவீதமாக இருந்த சம்பள உயர்வு

சுமார் 800,000 ஊழியர்களைக் கொண்ட சுமார் 818 நிறுவனங்களை இந்த ஆய்வு உள்ளடக்கியது. இந்த கணக்கெடுப்பின்படி, 2023 ஆம் ஆண்டில், இந்தியாவில் சம்பளம் 9.8 சதவீதம் அதிகரிக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட 2020 ஆம் ஆண்டில், சம்பள உயர்வு 6.8 சதவீதத்திற்கும் குறைவாக இருந்தது, ஆனால் தற்போதைய வளர்ச்சி போக்கின் வலுவான மற்றும் சிறந்த சூழ்நிலையை பிரதிபலிக்கிறது.

மேலும் படிக்க | 7th Pay Commission: பட்ஜெட்டுக்குப் பிறகு ஊழியர்களுக்கு 18 மாத டிஏ நிலுவைத் தொகை?

தொழில்நுட்பத் துறைகளின் வளர்ச்சி

தொழில்நுட்பத்தில் 10 சதவீதத்திற்கும் அதிகமான வளர்ச்சி எதிர்பார்க்கப்படுகிறது. டிஜிட்டல் திறனை வளர்ப்பதில் இந்தியாவின் வளர்ந்து வரும் கவனத்திற்கு ஏற்ப, வாழ்க்கை அறிவியல் மற்றும் சுகாதாரம் மற்றும் உயர் தொழில்நுட்பத் துறைகளின் வளர்ச்சி முறையே 10.2 சதவீதம் மற்றும் 10.4 சதவீதமாக இருக்கும் என்று கணக்கெடுப்பு கணித்துள்ளது.

மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி

உலகம் முழுவதும் மந்தநிலை மற்றும் பொருளாதார மந்தநிலை குறித்து பேசப்படுகிறது, ஆனால் இந்தியப் பொருளாதாரத்தின் சூழலில், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி)  ஆறு சதவீத வளர்ச்சியை எதிர்பார்க்கலாம் என்று கோர்ன் ஃபெரியின் தலைவர் மற்றும் பிராந்திய நிர்வாக இயக்குநர் நவ்நீத் சிங் கூறினார்.  சிங் மேலும் கூறுகையில், தனிப்பட்ட திறமையாளர்களுக்கான சம்பள உயர்வு 15 சதவீதம் முதல் 30 சதவீதம் வரை கூட இருக்கலாம் என்றார்.

துறை ரீதியாக எதிர்பார்க்கப்படும் வளர்ச்சி விகிதம்

வேறு சில துறைகளுக்கு, இந்த ஊதிய உயர்வு சேவைத் துறைக்கு 9.8 சதவீதமாகவும், வாகனங்களுக்கு 9 சதவீதமாகவும், ரசாயனங்களுக்கு 9.6 சதவீதமாகவும், நுகர்வோர் பொருட்களுக்கு 9.8 சதவீதமாகவும், சில்லறை விற்பனையில் 9 சதவீதமாகவும் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க |  7th Pay Commission: HRA விதிகளில் மாற்றம்! இனி இவர்களுக்கு அலவன்ஸ்கள் கிடையாது!

மேலும் படிக்க | உங்கள் பான், ஆதார் கார்டுடன் இணைக்கப்பட்டுவிட்டதா என்பதை கண்டறிவது எப்படி?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News