அதிர்ச்சி கொடுத்த RBI! ரெப்போ விகிதம் 0.35% உயர்வு; இனி EMI அதிகரிக்கும்!

RBI Repo Rate: புத்தாண்டுக்கு முன் சாமானியர்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் வகையில் RBI மீண்டும் ரெப்போ விகிதத்தை 35 அடிப்படை புள்ளிகள் உயர்த்தியுள்ளது.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Dec 7, 2022, 11:37 AM IST
  • ரெப்போ விகிதத்தை அதிகரிப்பதன் நேரடி விளைவு வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு அளிக்கும் கடனில் காணலாம்.
  • ரிசர்வ் வங்கி கடந்த மே மாதம் முதல் ஐந்து முறை ரெப்போ விகிதத்தை 2.25 சதவீதம் உயர்த்தியுள்ளது.
அதிர்ச்சி கொடுத்த RBI! ரெப்போ விகிதம் 0.35% உயர்வு; இனி  EMI அதிகரிக்கும்! title=

இந்திய ரிசர்வ் வங்கி: மூன்று நாட்களாக நடந்து வந்த இந்திய ரிசர்வ் வங்கியின் (ஆர்பிஐ) நிதிநிலை மறுஆய்வுக் கொள்கையின் கூட்டம் இன்று நிறைவடைந்தது. கூட்டத்திற்குப் பிறகு, புத்தாண்டிற்கு முன்னதாக, சாமானியர்களுக்கு அதிர்ச்சியை அளித்த RBI, ரெப்போ விகிதத்தை 35 அடிப்படை புள்ளிகள் உயர்த்தியுள்ளது. ரெப்போ விகிதத்தின் உயர்வு,  வட்டி விகிதத்தை பாதிக்கும் மற்றும் உங்கள் EMI அதிகரிக்கும். இதன் மூலம் ரெப்போ விகிதம் 6.25 சதவீதமாக உயர்ந்துள்ளது. முன்னதாக செப்டம்பர் 30 ஆம் தேதி, மத்திய வங்கி ரெப்போ விகிதத்தை 5.90 சதவீதமாக உயர்த்தியது. பண மதிப்பாய்வு கொள்கையை அறிவித்த மத்திய வங்கியின் ஆளுநர், பணவீக்கம் இன்னும் கவலைக்குரிய விஷயமாகவே உள்ளது என்றார்.

மே மாதத்தில் இருந்து 2.25 சதவீதம் அதிகரித்துள்ள  ரெப்போ விகிதம்

ரிசர்வ் வங்கி கடந்த மே மாதம் முதல் ஐந்து முறை ரெப்போ விகிதத்தை 2.25 சதவீதம் உயர்த்தியுள்ளது. முன்னதாக, எம்பிசியின் பரிந்துரையின் அடிப்படையில், ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை மே 4ஆம் தேதி 0.4 சதவீதமும், ஜூன் 8ஆம் தேதி 0.5 சதவீதமும், ஆகஸ்ட் 5ஆம் தேதி 0.5 சதவீதமும், செப்டம்பர் 30ஆம் தேதி 0.5 சதவீதமும் உயர்த்தியது. மே மாதம், மத்திய வங்கியில் இருந்து திடீரென வட்டி விகிதம் 0.40 சதவீதம் உயர்த்தப்பட்டது. ரெப்போ விகித உயர்வு வீட்டுக் கடன், கார் கடன் மற்றும் தனிநபர் கடன் ஆகியவற்றின் இஎம்ஐ தொகையை பாதிக்கும். 2023 நிதியாண்டில் சில்லறை பணவீக்க விகிதம் 6.7 சதவீதமாக ரிசர்வ் வங்கியால் தக்கவைக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | என்ஆர்ஐ வட்டி விகிதங்களை அதிகரித்தது எஸ்பிஐ! சூப்பர் வட்டி விகிதம் & கால்குலேட்டர்

வாடிக்கையாளர்களுக்குக் கிடைக்கும் கடன்கள் விலை அதிகமாகும்

ரெப்போ விகிதத்தை அதிகரிப்பதன் நேரடி விளைவு வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு அளிக்கும் கடனில் காணலாம். இதனால் கடன் வாங்கும் செலவு அதிகரிக்கும். வங்கிகளில் பணம் அதிக விலைக்கு வந்தால், கடனுக்கான வட்டி விகிதமும் அதிகரிக்கும். வங்கிகள் இந்த பாதிப்பை வாடிக்கையாளர்களுக்கு அனுப்பும். செவ்வாயன்று, உலக வங்கி நடப்பு 2022-23 நிதியாண்டிற்கான நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) வளர்ச்சி கணிப்பை 6.5 சதவீதத்தில் இருந்து 6.9 சதவீதமாக உயர்த்தியுள்ளது.

ரெப்போ விகிதம் என்றால் என்ன?

ரெப்போ ரேட் என்பது ரிசர்வ் வங்கியால் எந்த வங்கிக்கும் கடன் கொடுப்பதற்கான வட்டி விகிதமாகும். இதன் அடிப்படையில் வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு கடன் வழங்குகின்றன. இது தவிர, ரிவர்ஸ் ரெப்போ ரேட் என்பது வங்கிகளின் டெபாசிட்டுகளுக்கு ரிசர்வ் வங்கி அளிக்கும் வட்டி விகிதமாகும். ரிசர்வ் வங்கியின் ரெப்போ விகிதத்தை அதிகரிப்பதால், வங்கிகளின் சுமை அதிகரித்து, வங்கிகள் வட்டி விகிதத்தை அதிகரிப்பதன் மூலம் வாடிக்கையாளர்களுக்கு அந்த சுமையை கொடுக்கின்றன.

மேலும் படிக்க | ரகசிய காவல் நிலையங்களை உலகம் முழுவதும் வைத்துள்ள சீனா! கண்டிக்கும் கனடா

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News