ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்: 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச்சண்டையில் 2 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.

Last Updated : Mar 5, 2019, 10:23 AM IST
ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்: 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை title=

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச்சண்டையில் 2 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் டிரால் பகுதியில் தீவிரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு நேற்று ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, அந்த பகுதியில் பாதுகாப்பு படையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது, அங்கு ஒரு பகுதியில் மறைந்து இருந்த தீவிரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.  இதையடுத்து பாதுகாப்பு படையினர் பதில் தாக்குதல் நடத்தினர். இதில், 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டிரால் பகுதியில் இணையதள சேவை முடக்கப்பட்டுள்ளது. 

 

 

Trending News