Hemant Soren: ஹேமந்த் சோரன் கைது...? அடுத்த ஜார்க்கண்ட் முதலமைச்சர் இவரா?

Hemant Soren ED Issue: ஜார்க்கண்ட் முதல்வர் பதவியை ஹேமந்த் சோரன் ராஜினாமா செய்ததாக கூறப்படும் நிலையில், அவர் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Written by - Sudharsan G | Last Updated : Jan 31, 2024, 09:49 PM IST
  • ஹேமந்த் சோரனை அமலாக்கத்துறை இன்று விசாரணை மேற்கொண்டது.
  • சுமார் 7 மணிநேரம் இந்த விசாரணை நடைபெற்றது.
  • சம்பாய் சோரன் முதல்வராக பதவியேற்பார் என தகவல்
Hemant Soren: ஹேமந்த் சோரன் கைது...? அடுத்த ஜார்க்கண்ட் முதலமைச்சர் இவரா? title=

Hemant Soren ED Issue: ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் தலைவர் ஹேமந்த் தனது முதல்வர் பதவியை தற்போது ராஜினாமா செய்தார். ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணனிடம் தனது ராஜினாமா கடிதத்தை அளித்தார். அவரின் ராஜினாமா கடிதத்தை ஆளுநரும் ஏற்றார். தொடர்ந்து, அமலாகத்துறையால் ஹேமந்த் சோரன் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். அமலாக்கத்துறையால் ஒரு மாநில முதலமைச்சர் கைது செய்யப்படுவது இதுவே முதல் முறையாகும். 

பண மோசடி, நிலக்கரி சுரங்க உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் அவர் மீது பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்குகளின்கீழ் இவருக்கு அமலாக்கத்துறை பல முறை சம்மன் அனுப்பியது. அந்த வகையில், ஹேமந்த் சோரன் இல்லத்தில் அமலாக்கத்துறை இன்று விசாரணை மேற்கொண்டது. இந்த விசாரணை சுமார் 7 மணிநேரத்திற்கும் மேலாக நீடித்தது. இந்த விசாரணைக்கு பிறகு, முதலமைச்சர் ஹேமந்த் அவரின் ராஜினாமாவை அளித்தார். 

தொடர்ந்து, ஹேமந்த் சோரனுடன் ஆளுநரை சந்திக்க சென்ற சம்பாய் சோரன் ஜார்க்கண்ட் முதலமைச்சராக தேர்வு செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக, சம்பாய் சோரன் சட்டப்பேரவை தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஜார்க்கண்ட் மாநில போக்குவரத்து துறை, பட்டியல் மற்றும் பழங்குடியின துறை அமைச்சராகவும் சம்பாய் சோரன் பொறுப்பு வகித்தார்.

மேலும் படிக்க | Budget 2024: இந்த மானியங்கள் கண்டிப்பாக உயரும்... அடித்துக்கூறும் நிபுணர்கள்

நேற்று இரவு நடைபெற்ற எம்எல்ஏ கூட்டத்தில், ஹேமந்த் சோரன் அரசுக்கு ஆதரவான எம்எல்ஏக்கள் இரண்டு வெற்று காகிதங்களில் கையெழுத்திட்டதாக கூறப்படுகிறது. ஒரு காகிதத்தில் ஹேமந்தின் மனைவி கல்பனா சோரனுக்கு ஆதரவாகவும், மற்றொன்றில் சம்பாய் சோரனுக்கு ஆதரவாகவும் கையெழுத்திடப்பட்டதாக கூறப்படுகிறது. 

அதை தொடர்ந்து, சம்பாய் சோரன் சட்டமன்றக் கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், அவர் முதலமைச்சராக பொறுப்பேற்பார் என கூறப்படுகிறது. இவர் ஜார்க்கண்டை தனி மாநிலமாக அறிவிக்கக் கோரி கடுமையாக போராடியதால் இவரை 'ஜார்க்கண்ட் புலி' என மக்களால் போற்றப்படுகிறார். 

ஹேமந்த் சோரனுடன் ராஜ்பவனில் இருந்த ஜேஎம்எம் தலைவர் ஆலம் கிரி ஆலம் ஊடகங்களிடம் பேசினார். அப்போது,"ஜேஎம்எம்-காங்கிரஸ்-ஆர்ஜேடி கூட்டணி சார்பில் சமர்ப்பித்த ஆவணத்தை ஆய்வு செய்த பின்னரே அழைப்பு விடுக்கப்படும் என்று ஆளுநர் கூறினார். ஜேஎம்எம் கட்சிக்கு 47 எம்எல்ஏக்கள் ஆதரவு இருக்கிறது. அதில் 43 எம்எல்ஏக்கள் ராஜ்பவனில் இருந்தனர்" என்றார்.

மேலும் படிக்க | ஞானவாபி மசூதி: இந்துக்கள் வழிபாடு செய்ய அனுமதி... நீதிமன்ற உத்தரவின் முழு விவரம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News