நிஜாமுதீன் மார்க்காஸ் வழக்கு: 816 வெளிநாட்டு தப்லீஜி ஜமாதிகளுக்கு நோட்டீஸ்

இந்த வெளிநாட்டு தப்லிகி ஜமாதிகள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் வசிக்கின்றனர்.

Last Updated : May 23, 2020, 08:50 AM IST
நிஜாமுதீன் மார்க்காஸ் வழக்கு: 816 வெளிநாட்டு தப்லீஜி ஜமாதிகளுக்கு நோட்டீஸ் title=

நிஜாமுதீன் மார்க்கஸ் வழக்கில் டெல்லி காவல்துறையின் குற்றப்பிரிவு 816 வெளிநாட்டு தப்லீகி ஜமாதிகளுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. கேள்விக்கு ஒத்துழைக்க சிஆர்பிசியின் பிரிவு 41 ஏ இன் கீழ் மே 21 அன்று நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

இந்த வெளிநாட்டு தப்லிகி ஜமாதிகள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் வசிக்கின்றனர்.

முன்னதாக இதே பிரிவின் கீழ் சில வெளிநாட்டு ஜமாதிகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு, அவர்கள் விசாரிக்கப்பட்டனர். எல்.ஓ.சி (லுக் அவுட் சுற்றறிக்கை) வெளியிடப்பட்ட 1900 ஜமாதிகள் விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.

மௌலானா சாத் மற்றும் மீதமுள்ள குற்றம் சாட்டப்பட்டவர்களின் பாஸ்போர்ட்டுகள் குறித்தும் குற்றப்பிரிவு நடவடிக்கை எடுத்து வருகிறது.

முன்னதாக நிஜாமுதீன் மசூதியில் கடந்த மார்ச்சில் நடத்தப்பட்ட மத மாநாட்டில் வெளிநாடுகளில் இருந்தும், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்தும் இஸ்லாமிய மத போதகா்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். டெல்லி அரசின் தடை உத்தரவை மீறி நடைபெற்ற இந்த மாநாட்டில் பங்கேற்றுவிட்டு பயணித்தவர்களால் நாடு முழுவதும் ஆயிரக்கணக்கானவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த மாநாட்டில் கலந்து கொள்ள வந்த சுமார் ஆயிரம் வெளிநாட்டவா்கள் டெல்லி அண்டை மாநிலங்களில் உள்ள மசூதிகளில் மதப் பிரசாரம் செய்யச் சென்றனர். இந்த மசூதியில் கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, டெல்லி காவல்துறை மசூதிக்கு சீல் வைத்தது.

இந்நிலையில், தற்போது நிஜாமுதீன் மார்க்கஸ் வழக்கில் டெல்லி காவல்துறையின் குற்றப்பிரிவு 816 வெளிநாட்டு தப்லீகி ஜமாதிகளுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. கேள்விக்கு ஒத்துழைக்க சிஆர்பிசியின் பிரிவு 41 ஏ இன் கீழ் மே 21 அன்று நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

Trending News