ஒடிசாவில் நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை!

ஒடிசாவில் நக்சலைட் தேடுதல் வேட்டையின் போது பாதுகாப்பு படையினரால் நக்சலைட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.  

Last Updated : Dec 15, 2017, 01:22 PM IST
ஒடிசாவில் நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை! title=

சமீப காலமாக பாதுகாப்பு படையினருக்கும் நக்சலைட்டுகளுக்கும் இடையே தொடர் மோதல் ஏற்ப்பட்டு வருகிறது.

அதில் ஒரு பகுதியாக தற்போது, ஒடிசாவில் உள்ள லுஷபானி வனப்பகுதியில் பாதுகாப்பு படையினர் நக்சலைட்டு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது மால்கங்காரி சித்ரகொண்டாவில் பகுதியில் நக்சலைட்டுகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. 

பாதுகாப்பு படையினர் நக்சலைட்டுகள் பதுங்கி இருந்த இடத்திற்கு சென்றனர். அப்போது பாதுகாப்பு படையினர் மீது நக்சலைட்டுகள் திடீரென தாக்குதல் நடத்தினர். பாதுகாப்பு படையினரும் பதில் தாக்குதல் நடத்தினர். இதில் நக்சலைட்டுகல் கொல்லப்பட்டனர், சீருடை அணிந்து இருந்த நக்சலைட்டுகள் உடல்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. 

மேலும், அவர்களிடம் இருந்து துப்பாக்கிகள்,ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 

 

Trending News