NRC-யை குடியுரிமை திருத்த மசோதாவுடன் இணைப்பது தவறு - அமித் ஷா!

பான்-இந்தியா என்.ஆர்.சி விரைவில் அமல்படுத்தப்படும், குடியுரிமை திருத்த மசோதாவுடன் அதை இணைக்க வேண்டாம் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்!!

Last Updated : Dec 10, 2019, 11:33 AM IST
NRC-யை குடியுரிமை திருத்த மசோதாவுடன் இணைப்பது தவறு - அமித் ஷா!  title=

பான்-இந்தியா என்.ஆர்.சி விரைவில் அமல்படுத்தப்படும், குடியுரிமை திருத்த மசோதாவுடன் அதை இணைக்க வேண்டாம் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்!!

டெல்லி: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா திங்கள்கிழமை (டிசம்பர் 9) மக்களவையில், பாஜக தலைமையிலான அரசாங்கம் இந்தியா முழுவதும் தேசிய குடிமக்கள் பதிவேட்டை (NRC) விரைவில் செயல்படுத்த உறுதிபூண்டுள்ளது என்றும், NRC-யை குடியுரிமை திருத்தத்துடன் இணைப்பது தவறு என்றும் கூறினார். குடியுரிமை (திருத்த) மசோதாவைப் போலவே NRC-யும் பாராளுமன்றத்தில் விளக்கப்படும் என்று உள்துறை அமைச்சர் வலியுறுத்தினார்.

குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை மக்களவையில் அமித் ஷா நேற்று தாக்கல் செய்தார். இதை அடுத்து இந்த மசோதா மீது விவாதம் நடைபெற்றது. இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பேசிய காங்கிரஸ் மக்களவைக் குழு தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, இந்த மசோதா சிறுபான்மையினரை குறவைத்து கொண்டு வரப்படுவதாகவும், இது அரசியல் சாசனத்திற்கு எதிரானது என்றும் குறிப்பிட்டார். இந்த மசோதாவில் இஸ்லாமியர்கள் சேர்க்கப்படாதது ஏன் எனவும் அவர் கேள்வி எழுப்பினார். இந்த மசோதா நிறைவேற்றப்படுவதை அனுமதிக்க முடியாது என்று கூறி காங்கிரஸ் உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். 

காங்கிரஸ் உறுப்பினர்களுக்கு பதில் அளித்த அமித் ஷா, இந்த சட்டத் திருத்தம் 0.001 சதவீதம் அளவுக்குக் கூட இந்திய சிறுபான்மையினருக்கு எதிரானது அல்ல என குறிப்பிட்டார். பாகிஸ்தான், ஆப்கனிஸ்தான், பங்களாதேஷ் ஆகிய நாடுகளில் உள்ள சிறுபான்மையினரான இந்துக்கள், சீக்கியர்கள், பார்சிக்கள், புத்தர்கள், கிறிஸ்தவர்கள் ஆகியோர் மத ரீதியிலான துன்புறுத்தலுக்கு உள்ளாவதால், அவர்களுக்கு குடியுரிமை அளிக்கும் நோக்கிலேயே இந்த மசோதா கொண்டு வரப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். 

இந்தியாவில் உள்ள சிறுபான்மையினரை குறிவைத்து இந்த மசோதா தாக்கல் செய்யப்படுவதாகக் கூறப்படுவதில் எந்த உண்மையும் இல்லை என தெரிவித்த அமித் ஷா, பிரதமராக இருந்த இந்திரா காந்தி, 1971 ஆம் ஆண்டு பங்களாதேஷைச் சேர்ந்த அகதிகளுக்கு இந்தியாவில் குடியுரிமை வழங்கியதாகவும் குறிப்பிட்டார். 

இந்நிலையில், இந்தியா முழுவதும் தேசிய குடிமக்கள் பதிவேட்டை (NRC) விரைவில் செயல்படுத்த உறுதிபூண்டுள்ளது என்றும், NRC-யை குடியுரிமை திருத்தத்துடன் இணைப்பது தவறு என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்....... "குடியுரிமை (திருத்தம்) மசோதாவை தேசிய குடிமக்களின் பதிவு (NRC) உடன் இணைக்க வேண்டிய அவசியமில்லை. நான் அதை [NRC] பாராளுமன்றத்தில் CAB போலவே விளக்குகிறேன். மீதமுள்ள உறுதி, NRC விரைவில் கொண்டு வரப்படும்," ஷா கூறினார். 

டிசம்பர் 2 ஆம் தேதி, ஜார்க்கண்டில் நடந்த தேர்தல் பேரணியில் ஷா, 2024 மக்களவைத் தேர்தலுக்கு முன்னர் NRC இந்தியாவில் செயல்படுத்தப்படும் என்றும், ஊடுருவியவர்கள் அனைவரும் நாட்டிலிருந்து வெளியேற்றப்படுவார்கள் என்றும் கூறினார். மதத்தைப் பொருட்படுத்தாமல் இந்தியாவின் அனைத்து குடிமக்களும் NRC பட்டியலில் இடம் பெறுவார்கள் என்றும் ஷா கூறியிருந்தார். மேலும், NRC மற்றும் குடியுரிமை திருத்த மசோதா இரண்டு வெவ்வேறு விஷயங்கள் என்றும் குறிப்பிட்டார்.

"சில மதங்கள் அதிலிருந்து விலக்கப்படும் என்று கூறும் எந்தவொரு ஏற்பாடும் NRC-க்கு இல்லை. மதத்தைப் பொருட்படுத்தாமல் இந்தியாவின் அனைத்து குடிமக்களும் NRC பட்டியலில் இடம் பெறுவார்கள். NRC குடியுரிமை திருத்த மசோதாவிலிருந்து வேறுபட்டது" என்று மாநிலங்களவையில் அமித் ஷா கூறியுள்ளார்.  

 

Trending News