காஷ்மீர் சென்ற எதிர்கட்சி தலைவர்கள் திருப்பி அனுப்பபட்டனர்!

காஷ்மீர் சென்ற காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி உள்பட 11 தலைவர்களும் ஸ்ரீநகர் விமான நிலையத்திலேயே தடுத்து நிறுத்தப்பட்டு திருப்பி அனுப்பபட்டனர்.

Last Updated : Aug 24, 2019, 04:31 PM IST
காஷ்மீர் சென்ற எதிர்கட்சி தலைவர்கள் திருப்பி அனுப்பபட்டனர்! title=

காஷ்மீர் சென்ற காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி உள்பட 11 தலைவர்களும் ஸ்ரீநகர் விமான நிலையத்திலேயே தடுத்து நிறுத்தப்பட்டு திருப்பி அனுப்பபட்டனர்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு அளிக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்த்தை திரும்ப பெரும் சட்ட பிரிவினை ஆளும் பாஜக அரசு ரத்து செய்ததை அடுத்து, ஜம்மு காஷ்மீர் நிலவரத்தை நேரில் அறியவும், காஷ்மீர் மக்களுடன் உரையாடவும் காங்கிரஸ், திமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், ராஷ்ட்ரீய ஜனதா தளம், தேசியவாத காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் பிரதிநிதிகள் இன்று ஜம்மு-காஷ்மீருக்கு சென்றனர்.

டி.ராஜா, சீதாராம் யெச்சூரி, குலாம் நபி ஆசாத், ஆனந்த் சர்மா, கே.சி.வேணுகோபால், ஷரத் யாதவ், தினேஷ் த்ரிவேதி, திருச்சி சிவா, மஜீத் மேமன், மனோஜ் ஜா, குபேந்திரா ரெட்டி ஆகியோர் இந்தக் குழுவில் இருந்தனர்.

இந்நிலையில் ஸ்ரீநகர் விமான நிலையத்திலேயே இவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டு டெல்லிக்கு திருப்பியனுப்பி வைக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதற்கு முன்னதாக குலாம் நபி ஆசாத் இரண்டு முறை காஷ்மீர் சென்று விமான நிலையத்தோடு திருப்பி அனுப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

முன்னதாக இன்று காலையிலேயே ஜம்மு காஷ்மீர் செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் பதிவிடப்பட்ட ட்வீட்டில், "ஜம்மு - காஷ்மீர் மக்களை தீவிரவாத தாக்குதல்கள், எல்லை தாண்டிய பயங்கரவாத தாக்குதல்களில் இருந்து காப்பாற்ற அரசாங்கம் முயன்று கொண்டிருக்கும் வேளையில் அரசியல் தலைவர்களின் திடீர் வருகை மக்களுக்கு அசவுகரியத்தை ஏற்படுத்தும்" என்று தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Trending News