7 மாநிலங்களில் 51 தொகுதிகளில் 5ம் கட்ட வாக்குப்பதிவு தொடக்கம்!!

மக்களவைத் தேர்தலில் ஐந்தாம்கட்டமாக, 51 தொகுதிகளில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது!!

Last Updated : May 6, 2019, 07:55 AM IST

Trending Photos

7 மாநிலங்களில் 51 தொகுதிகளில் 5ம் கட்ட வாக்குப்பதிவு தொடக்கம்!! title=

மக்களவைத் தேர்தலில் ஐந்தாம்கட்டமாக, 51 தொகுதிகளில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது!!

இந்தியா முழுவதும் மக்களவை தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நான்கு கட்ட தேர்தல் முடிவடைந்த நிலையில் இன்று 7 மாநிலங்களில் 51 தொகுதிகளில் 5ம் கட்ட வாக்குப்பதிவு நடை பெற்று வருகிறது. 

உத்தரப் பிரதேசத்தில் 14 தொகுதிகள், ராஜஸ்தானில் 12 தொகுதிகள், மத்தியப்பிரதேசம் மற்றும் மேற்குவங்கத்தில் தலா 7 தொகுதிகள், பீகாரில் 5 தொகுதிகள், ஜார்க்கண்டில் 4 தொகுதிகள், காஷ்மீரில் 2 தொகுதிகளில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.

இத்தேர்தலில் ராகுல்காந்தி, சோனியா காந்தி, ராஜ்நாத்சிங், ஸ்மிரிதி இரானி உள்ளிட்ட 674 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். வாக்குப்பதிவுக்காக சுமார் 94 ஆயிரம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இத்தேர்தலில் சுமார் எட்டு கோடியே 75 வாக்காளர்கள் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்வார்கள்.

ரமலான் மாதம் தொடங்குவதை முன்னிட்டு 5 ஆம் கட்டத் தேர்தலில் காலை 5 மணிக்கே வாக்களிக்க அனுமதிக்க வேண்டும் என்று கோரிய மனுவை தேர்தல் ஆணையம் ஏற்க மறுத்துவிட்டது. வாக்குப்பதிவு இயந்திரங்களை சாவடிகளுக்கு கொண்டு செல்வது, மாதிரி வாக்குப்பதிவு, பாதுகாப்பு போன்ற காரணங்களை தேர்தல் ஆணையம் சுட்டிக் காட்டியுள்ளது. இதனால் வழக்கம் போல் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.

இந்த தேர்தலுடன் மொத்தம் 424 தொகுதிகளுக்கான வாக்குப் பதிவு நிறைவு பெற இருப்பது குறிப்பிடத்தக்கது.

 

Trending News