துஷ்ட சக்திகள் காரணமாக பாஜக தலைவர்கள் ஒவ்வொருவராக இறந்து வருகிறார்கள்: பிரக்யா

எதிர்கட்சிகள் பாஜகவிற்கு எதிராக துஷ்ட சக்திகளை ஏவிவிட்டுள்ளனர். அதனால் தான் பாஜக தலைவர்கள் மரணமடைந்து வருகின்றனர். இதை மகராஜ் எனக்கு சொல்லியிருக்கிறார் என போபாலின் பாஜக மக்களவை உறுப்பினர் பிரக்யா கூறியுள்ளார்.

Written by - Shiva Murugesan | Last Updated : Aug 26, 2019, 03:56 PM IST
துஷ்ட சக்திகள் காரணமாக பாஜக தலைவர்கள் ஒவ்வொருவராக இறந்து வருகிறார்கள்: பிரக்யா title=

புதுடில்லி: பாஜக மீது எதிர்க்கட்சிகள் தீய சக்திகளை பயன்படுத்துகிறார்கள் என்று சந்தேகம் இருப்பதாகவும், இந்த விஷயத்தில், கவனமாக இருக்க வேண்டும் என்றும் பாஜக எம்.பி. சாத்வி பிரக்யா சிங் தாக்கூர் கூறியுள்ளார்.

போபாலைச் சேர்ந்த பாஜக எம்.பி. சாத்வி பிரக்யா சிங் தாக்கூர் தொடர்ந்து சர்ச்சை கருத்துக்களை கூறி விமர்சனத்திற்கு உள்ளாகி வரும், அவர் மீண்டும் ஒரு அறிக்கை காரணமாக விவாதத்திற்கு உள்ளாகி உள்ளார். முன்னாள் நிதியமைச்சர் அருண் ஜெட்லி மற்றும் மத்திய பிரதேச முன்னாள் முதல்வருமான பாபுலால் கவுரின் அஞ்சலி கூட்டத்திற்கு சென்ற எம்.பி., சாத்வி பிரக்யா தாகூர், எதிர்க்கட்சிகள் தீய சக்திகளை பயன்படுத்துகிறார்கள் என்று சந்தேகம் இருப்பதாகவும், இந்த விஷயத்தில், கவனமாக இருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

போபாலில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியது,, “தேர்தல் சமயத்தில் கொடிய சக்தி பாஜகவின் கடின உழைப்பு, தகுதி மற்றும் கட்சியைக் கையாளும் முக்கிய தலைவர்களை பாதிக்கும், அவர்களுக்கு ஆழ்ந்த தீங்கு விளைவிக்கும் என்று பாபா என்னிடம் கூறியிருந்தார். இதை தீய சக்திகளை எதிர்க் கட்சிகள் பயன்படுத்துகின்றன. எனவே கவனமாக இருங்கள் என்றும் பாப தெரிவித்தார் என்றும் சாத்வி கூறினார். ஆனால் கூட்ட நெரிசல் காரணமாக, நான் அவற்றைக் கேட்டு பிறகு மறந்துவிட்டேன். உண்மையில் கட்சியின் உயர்மட்ட தலைவர்கள் பாபுலால் கவுர், அருண் ஜெட்லி ஜி மற்றும் சுஷ்மா ஸ்வராஜ் ஜி ஆகியோர் மரணமடைந்து வருகின்றனர். இதைப் பார்க்கும்போது, ​​மகாராஜ் சொன்னது உண்மை என்று தோன்றுகிறது..

Trending News