பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடிக்கும் கெஜ்ரிவாலுக்கு ஸ்டாலின் வாழ்த்து..!

டெல்லியில் அமோக வெற்றிபெற்று மீண்டும் ஆட்சியமைக்கும் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும், ஆம் ஆத்மி கட்சிக்கும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்!!

Last Updated : Feb 11, 2020, 02:22 PM IST
பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடிக்கும் கெஜ்ரிவாலுக்கு ஸ்டாலின் வாழ்த்து..! title=

டெல்லியில் அமோக வெற்றிபெற்று மீண்டும் ஆட்சியமைக்கும் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும், ஆம் ஆத்மி கட்சிக்கும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்!!

கடந்த 8 ஆம் தேதி, ஓட்டுப்பதிவு நடந்த டில்லி சட்டசபையில் மீண்டும் ஆம்ஆத்மி ஆட்சியை பிடிக்கும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் கூறப்பட்டுள்ள நிலையில் இன்று (11 ஆம் தேதி) காலை ஓட்டு எண்ணிக்கை துவங்கியது. AAP தொடர்ந்து முன்னணியில் இருப்பதால், தற்போதைய முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால், மீண்டும் முதல்வராகிறார். தொடர்ந்து, 3-வது முறையாக முதல்வராகும் அரவிந்த் கெஜ்ரிவால் ஹாட்ரிக் சாதனை படைக்கிறார். 

இந்நிலையில், டில்லி சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்க உள்ள கெஜ்ரிவாலுக்கு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். மதவாத அரசியலை முறியடித்து வளர்ச்சிக்கான அரசியலே வெற்றிபெறும் என்பது இதன் மூலம் நிலைநாட்டப்பட்டுள்ளதாக, ட்விட்டர் பதிவில் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். நாட்டின் நன்மைக்காக மாநிலங்களின் விருப்பங்களும் கூட்டாட்சி முறை உரிமைகளும் வலுப்படுத்தப்பட வேண்டும் என்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ளார் ட்விட்டர் பதிவில்.. டெல்லியில் மீண்டும் ஒரு பெரிய ஆணைப்படி அரசாங்கத்தை அமைப்பதற்காக @ArvindKejriwal மற்றும் @AamAadmiParty-க்கு வாழ்த்துக்கள்..!

வளர்ச்சி வகுப்புவாத அரசியலைத் தூண்டுகிறது என்பதற்கு இது தெளிவான நிரூபணம். கூட்டாட்சி உரிமைகள் மற்றும் பிராந்திய அபிலாஷைகள் நம் நாட்டின் நலனில் பலப்படுத்தப்பட வேண்டும்" என அவர் குறிப்பிட்டுள்ளார்.  

 

Trending News