‘கடவுள் உங்களை ஆசீர்வதிப்பார்’ நிதீஷ் குமாருக்கு பிரசாந்த் கிஷோர் வாழ்த்து!

முதல்வர் பதவியைத் தக்கவைத்தமைக்கு நன்றி மற்றும் கடவுள் உங்களை ஆசீர்வதிப்பார் JD(U)-ல் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட பின்னர் பிரசாந்த் கிஷோர் நிதீஷ் குமாருக்கு வாழ்த்து!!

Last Updated : Jan 29, 2020, 06:51 PM IST
‘கடவுள் உங்களை ஆசீர்வதிப்பார்’ நிதீஷ் குமாருக்கு பிரசாந்த் கிஷோர் வாழ்த்து! title=

முதல்வர் பதவியைத் தக்கவைத்தமைக்கு நன்றி மற்றும் கடவுள் உங்களை ஆசீர்வதிப்பார் JD(U)-ல் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட பின்னர் பிரசாந்த் கிஷோர் நிதீஷ் குமாருக்கு வாழ்த்து!!

ஜே.டி.யுவில் இருந்து வெளியேற்றப்பட்ட சில நிமிடங்களுக்குப் பிறகு, பிரஷாந்த் கிஷோர் புதன்கிழமை (ஜனவரி 29) JD(U) தலைவர் நிதீஷ் குமாரிடம் ஒரு ட்வீட்டை வெளியிட்டார், பீகார் முதலமைச்சரை 'தக்கவைத்துக் கொள்ள' தனது முன்னாள் சகாவுக்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். 

"நன்றி நிதீஷ் குமார். பீகார் முதல்வரின் நாற்காலியைத் தக்க வைத்துக் கொள்ள எனது வாழ்த்துக்கள். கடவுள் உங்களை ஆசீர்வதிப்பார்" என்று கிஷோர் ட்வீட் செய்துள்ளார்.

தேர்தல் வியூக நிபுணர் என, கூறப்படும் பிரசாந்த் கிஷோர், 2014 மக்களவை தேர்தலில், பா.ஜ.க பெற்ற வெற்றியின் பின்னணியில் இருந்ததாக கூறப்பட்டது. பிரசாரம் எப்படி மேற்கொள்ள வேண்டும்; அதற்கான முறைகள் என்ன; எங்கே மேடையிட்டு எப்படி பேசுவது; சமூக வலைதளங்கள் மூலம் பிரசாரம் செய்வது போன்ற நுணுக்கங்களை, பா.ஜ.க சிறப்பாக செய்தது. 

கடந்த, 2015 ஆம் ஆண்டு நடந்த, பீஹார் சட்டசபை தேர்தலில், கிஷோரின் வியூகத்தால், ஐக்கிய ஜனதா தள தலைவர் நிதிஷ் குமார் மீண்டும் முதல்வர் ஆனார். இதற்கு பரிகாரமாக, 2018-ல், பிரசாந்த் கிஷோர், ஐக்கிய ஜனதா தள மாநில துணை தலைவராக நியமிக்கப்பட்டார். இந்நிலையில், பிரசாந்த கிஷோர் கட்சியை விட்டு வெளியேற முடிவு செய்ததாக தகவல் வெளியானது. இது தொடர்பாக முதல்வர் நிதிஷ்குமார் அளித்த பேட்டியில், ‛மத்திய அமைச்சரான அமித்ஷா கேட்டுக்கொண்டதன் பேரில் பிராசந்த் கிஷோரை கட்சியில் சேர்த்தோம். அவருக்கு கட்சியில் உயர் பொறுப்பும் அளிக்கப்பட்டது. அவர் கட்சியில் தொடர்ந்து இருப்பதும் வெளியேற இருப்பதும் தனிப்பட்ட முடிவு. விரும்பினால் அவர் கட்சியை விட்டு தாராளமாக விலகிக்கொள்ளலாம்.' இவ்வாறு நிதிஷ்குமார் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், பிரஷாந்த் கிஷோரை ஐக்கிய ஜனதா தளம் கட்சியில் இருந்து நீக்குவதாக நிதிஷ்குமார் அறிவித்துள்ளார். கட்சி விரோத செயல்பாடுகளில் ஈடுபட்டதால் அவர் கட்சியில் இருந்து நீக்கப்படுவதாகவும் நிதிஷ்குமார் விளக்கம் அளித்திருந்தார். கட்சியில் இருந்து நீக்கப்படுவதாக நிதிஷ்குமார் அறிவித்த சிறிது நேரத்திலேயே டுவீட் செய்திருந்த பிரசாந்த் கிஷோர், மிக்க நன்றி. நிதிஷ் குமார் தொடர்ந்து பீகார் முதல்வர் இருக்கையில் நீடித்திருக்க இறைவனை வேண்டுகிறேன். கடவுள் ஆசீர்வதிக்கட்டும் என குறிப்பிட்டுள்ளார். 

Trending News