UP: தண்ணீர் எடுக்க சென்ற சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த கொடூரம்...

தண்ணீர் எடுப்பதற்காக கிராமத்தில் உள்ள கை பம்ப்க்கு சென்ற சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த கொடூரர்கள்! 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Nov 20, 2018, 12:53 PM IST
UP: தண்ணீர் எடுக்க சென்ற சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த கொடூரம்... title=

தண்ணீர் எடுப்பதற்காக கிராமத்தில் உள்ள கை பம்ப்க்கு சென்ற சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த கொடூரர்கள்! 

உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள ஒரு குட்கிராமத்தில் 16 வயது சிறுமி தண்ணீர் எடுப்பதற்காக அருகில் உள்ள கை பம்ப்க்கு சென்றுள்ளார். அப்போது, அவரை அந்த சிறுமியை அப்பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் அவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இதையடுத்து, வீடுதிரும்பிய அந்த சிறுமி தனது குடும்பத்தினரிடம் நடந்த சம்பவங்கள் குறித்து தெரிவித்துள்ளார். இதையடுத்து சிறுமியின் பெற்றோர் காவல்துறையில் புகார் தெரிவித்துள்ளனர். இந்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் குறித்த முதற்கட்ட விசாரணையில், சிறுமி தண்ணீர் எடுப்பதகாக சென்ற பொது இவரை பின் தொடர்ந்து வந்த ஒரு இளைஞர் அருகில் இருந்த ஒரு அறைக்கு இழுத்து சென்று அவரை பலாத்காரம் செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.  

இதையடுத்து, நேற்று அந்த இளைஞர் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் சம்பந்தப்பட்ட பிரிவுகளின் கீழ் பாலியல் குற்றங்கள் (POCSO) சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அந்த இளைஞரை கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

Trending News