கர்நாடகா தேர்தல் 2018: ஓட்டு போட்டால் தோசை, காபி இலவசம்!

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் முதல் முறையாக வாக்களிப்பவர்கள் தங்களது மை தடவிய கையை காட்டினால் மசால் தோசை, காபி இலவசமாக வழங்கப்படும் என பெங்களூருவில் உள்ள ஹோட்டல் ஒன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Last Updated : May 12, 2018, 11:57 AM IST
கர்நாடகா தேர்தல் 2018: ஓட்டு போட்டால் தோசை, காபி இலவசம்! title=

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் முதல் முறையாக வாக்களிப்பவர்கள் தங்களது மை தடவிய கையை காட்டினால் மசால் தோசை, காபி இலவசமாக வழங்கப்படும் என பெங்களூருவில் உள்ள ஹோட்டல் ஒன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள கர்நாடக சட்டசபை தேர்தலுக்கான வாக்கு பதிவு இன்று 7 மணி அளவில் தொடங்க மாலை 6 மணிவரை நடைபெற உள்ளது.

இந்த தேர்தலில் ஆட்சியை கைப்பற்றும் முயற்சியில் பாரதிய ஜனதா கட்சியும், ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள காங்கிரஸ் கட்சியும், ஆட்சியில் பங்குபெறும் நோக்கில் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி செயல்படுவதால், கர்நாடக தேர்தலில் மும்முனை போட்டி ஏற்பட்டு உள்ளது. 

இந்த தேர்தலில் மொத்தம் 4.98 கோடிக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். இதில் ஆண் வாக்காளர்கள் சுமார் 2.52 கோடி, பெண் வாக்காளர்கள் சுமார் 2.44 கோடி ஆகும். மொத்தம் 4,552 திருநங்கைகள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். 

இந்த தேர்தலை ஒட்டி மாநிலம் முழுக்க 55,600 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு, 3.5 லட்சம் பணியாளர்கள் தேர்தல் பணியாற்றி வருகின்றனர்.

செல்போன் ஆப் மூலம் எந்த வாக்குசாவடியில் கூட்டம் அதிகம் உள்ளது என்பதை அறியவும் வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது. மொத்தம் 224 தொகுதிகள் கொண்ட கர்நாடகா சட்டசபைக்கு 222 தொகுதிகளுக்கு மட்டும் இன்று வாக்கு பதிவு நடைபெறுகிறது. மீதமுள்ள இரண்டு தொகுதிக்கும் வரும் 28 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 

பெங்களூரு ஜெயநகர் தொகுதி பாஜக வேட்பாளர் விஜயகுமார் மரணமடைந்துவிட்டதாலும், ஆர்.ஆர். நகர் தொகுதியில் பத்தாயிரம் வாக்களர் அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டதால் தேர்தல் நிறுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையொட்டி 222 தொகுதிகளுக்கான கர்நாடகா சட்டசபை தேர்தல் தொடங்கி தற்போது நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில் கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் முதல் முறை வாக்களிப்பவர்கள், மை தடவிய கையை காட்டினால் மசால் தோசை, காபி இலவசமாக வழங்கப்படும் என பெங்களூருவில் கிருஷ்ணராஜ் என்பவரின் ஹோட்டலில் தெரிவித்துள்ளது.  இதுகுறித்து பேசிய அவர் தான் எந்த கட்சியையையும் சார்ந்தவன் இல்லை என்றும் இளைஞர்களை வாக்களிக்க ஊக்குவிக்குவதற்காகவே இந்த முயற்சியை மேற்கொண்டதாக தெரிவித்தார்.

Trending News