7th Pay Commission: டி.ஏ உயர்வையடுத்து ஊழியர்களுக்கு கிடைத்த மற்றொரு பம்பர் பரிசு

அகவிலைப்படி, அகவிலை நிவாரணம் மற்றும் எச்.ஆர்.ஏ ஆகியவற்றில் ஏற்பட்டுள்ள அதிகரிப்பால், ஊழியர்களின் ஊதியத்தில் பெரிய அளவிலான உயர்வு இருக்கும்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jul 19, 2021, 01:26 PM IST
  • நரேந்திர மோடி தலைமையிலான அரசு மத்திய அரசு ஊழியர்களின் வீட்டு வாடகை கொடுப்பனவை அதிகரித்துள்ளது.
  • ஊழியர்களின் அகவிலைப்படி தற்போது 28 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.
  • அரசு ஊழியர்களின் சம்பளத்தில் பெரிய அதிகரிப்பு இருக்கும்.
7th Pay Commission: டி.ஏ உயர்வையடுத்து ஊழியர்களுக்கு கிடைத்த மற்றொரு பம்பர் பரிசு title=

7th Pay Commission Latest News: சமீபத்தில் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு மத்திய அரசு ஒரு மிகப் பெரிய நல்ல செய்தியை அளித்தது. 11% அகவிலைப்படி உயர்த்தப்பட்டு ஊழியர்களின் மொத்த அகவிலைப்படி 17 சதவீதத்திலிருந்து 28 சதவிகிதமாக அதிகரித்தது. ஜூலை 1 முதல் இந்த மாற்றம் நடைமுறைக்கு வரும். தற்போது மத்திய அரசு ஊழியர்களுக்கான மற்றொரு பம்பர் செய்தியை மத்திய அரசு அறிவித்துள்ளது.

மத்திய அரசு வீட்டு வாடகை கொடுப்பனவை (House Rent Allowance) அதிகரிக்கிறது

நரேந்திர மோடி தலைமையிலான அரசு மத்திய அரசு ஊழியர்களின் வீட்டு வாடகை கொடுப்பனவில் (HRA) உயர்வை அறிவித்துள்ளது. இதைத் தொடர்ந்து, ஊழியர்கள் திருத்தப்பட்ட விகிதங்களின்படி, அடுத்த மாதத்திலிருந்து, அதாவது ஆகஸ்ட் 2021 முதல் அதிகரித்த HRA-ஐப் பெறுவார்கள்.

அரசு ஊழியர்களுக்கு இரட்டை மகிழ்ச்சி

இதன் மூலம், அரசு ஊழியர்களின் (Central Government Employees) சம்பளம் மற்றும் ஓய்வூதியதாரர்களின் ஓய்வூதியம் ஆகியவை கணிசமாக உயர்த்தப்பட்டுள்ளன. ஊழியர்களின் அகவிலைப்படி 25 சதவீதத்தை தாண்டியுள்ளதால் HRA உயர்த்தப்பட்டுள்ளது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

ALSO READ: 7th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களுக்கு ஏமாற்றம், இதுதான் காரணம்

HRA அதிகரிப்பு கணக்கீடு

அரசாங்கத்தின் உத்தரவின்படி, மத்திய அரசு ஊழியர்களின் வீட்டு வாடகை கொடுப்பனவு (HRA) பின்வரும் முறையில் கணக்கிடப்படும். ‘X’ வகை நகரங்களில் வசிப்பவர்களுக்கு இந்த உயர்வு 27 சதவீதமாக இருக்கும். இதேபோல், ‘Y’ மற்றும் ‘Z’ பிரிவுகளில் வசிப்பவர்களுக்கு முறையே 18 சதவீதம் மற்றும் 9 சதவீதம் உயர்வு இருக்கும்.

X, Y, மற்றும் Z வகை நகரங்கள் 

50 லட்சத்துக்கும் அதிகமான மக்கள்தொகை கொண்ட நகரங்கள் X வகை நகரங்களாகும். Y மற்றும் Z வகை நகரங்கள் முறையே 5 லட்சத்துக்கும் அதிகமான மக்கள்தொகை மற்றும் ஐந்து லட்சத்துக்கும் குறைவான மக்கள்தொகை கொண்ட நகரங்களாகும்.

அகவில்லைப்படி அதிகரிப்பு 

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுவோருக்கான அகவிலைப்படி (Dearness Allowance) மற்றும் அகவிலை நிவாரணம் (Dearness Relief) ஆகியவற்றை ஜூலை 1, 2021 முதல் உயர்த்தியுள்ளதாக மத்திய அரசு கடந்த வாரம் அறிவித்தது. அகவிலைப்படி தற்போது 28 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. டிஏ 50 சதவீதத்தை கடக்கும்போது, HRA விகிதங்களும் முறையே 30%, 20% மற்றும் 10% ஆக திருத்தப்படும்.

அரசு ஊழியர்களின் சம்பளத்தில் பெரிய அதிகரிப்பு

அரசாங்கத்தின் இந்த நடவடிக்கை சுமார் 48.34 லட்சம் மத்திய அரசு ஊழியர்களுக்கும் 65.26 லட்சம் ஓய்வூதியதாரர்களுக்கும் பயனளிக்கும். அகவிலைப்படி, அகவிலை நிவாரணம் மற்றும் எச்.ஆர்.ஏ ஆகியவற்றில் ஏற்பட்டுள்ள அதிகரிப்பால், ஊழியர்களின் ஊதியத்தில் பெரிய அளவிலான உயர்வு இருக்கும்.

ALSO READ: அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி அதிகரிப்பு; எவ்வளவு சம்பளம் கிடைக்கும்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News