7th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களுக்கு ஹோலி பரிசு, அறிவிப்பு எப்போது?

7th Pay Commission:மத்திய அரசு ஊழியர்கள் அகவிலைப்படியும் அகவிலை நிவாரணமும் 4% உயரும் என எதிர்பார்க்கின்றனர். இது அறிவிக்கப்பட்டால், மத்திய அரசு ஊழியர்களுக்கான புதிய டிஏ விகிதம் 42% ஆக உயரும்.  

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Mar 4, 2023, 05:34 PM IST
  • மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி எப்போது உயர்த்தப்படும்?
  • இந்த முறை எவ்வளவு டிஏ உயர்வு எதிர்பார்க்கப்படுகிறது?
  • 7வது ஊதியக் குழு: கடந்த டிஏ உயர்வு விவரங்கள் என்ன?
7th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களுக்கு ஹோலி பரிசு, அறிவிப்பு எப்போது? title=

7வது ஊதியக்கமிஷன்-டிஏ உயர்வு: இந்த ஆண்டு ஹோலி பண்டிகை, ஊதிய உயர்வுடன் மத்திய அரசு ஊழியர்களுக்கு மேலும் வண்ணங்களை கொண்டு வரும். ஹோலிக்குப் பிறகு அரசு ஊழியர்களின் அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணம் உயர்த்தப்படும் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பான அறிவிப்பு மார்ச் 8 ஆம் தேதி எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், மத்திய அரசு டிஏ உயர்வு அறிவிப்பின் சரியான தேதியை அதிகாரப்பூர்வமாக இன்னும் உறுதிப்படுத்தவில்லை. ஆகையால், இது தொடர்பான அதிகாரப்பூர்வ உத்தரவு வெளியாகும் வரை மத்திய அரசு ஊழியர்கள் காத்திருக்க வேண்டும்.

மார்ச் 1 ஆம் தேதி நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு, மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணம் குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. இந்தக் கூட்டத்தில் 4 சதவீதம் அகவிலைப்படியை உயர்த்துவதற்கான முடிவிற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதாக வட்டாரங்கள் தெரிவித்தன. 

சம்பளம் உயர்த்தப்பட்டால், 2023-ம் ஆண்டு மத்திய அரசு ஊழியர்களுக்கான முதல் அகவிலைப்படி உயர்வு இதுவாக இருக்கும். அகவிலைப்படி உயர்வு தவிர, அதே நாளில் அரசு அகவிலை நிவாரணத்தையும் உயர்த்தும். 

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி எப்போது உயர்த்தப்படும்?

பல்வேறு ஊடகங்கள் பல செய்திகளை வெளியிட்டும், அரசாங்கத்திடம் இருந்து டிஏ / டிஆர் உயர்வு அறிவிப்பு தேதியில் அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் எதுவும் வரவில்லை. இருப்பினும், ஹோலி பண்டிகைக்கு பிறகு மத்திய அரசு அகவிலைப்படி உயர்வு பற்றி அறிவிக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க | 7th Pay Commission: 18 மாத டிஏ நிலுவைத் தொகை கிடைக்கவுள்ளதா? முக்கிய அப்டேட் இதோ

இந்த முறை எவ்வளவு டிஏ உயர்வு எதிர்பார்க்கப்படுகிறது?

மத்திய அரசு ஊழியர்கள் அகவிலைப்படியும் அகவிலை நிவாரணமும் 4% உயரும் என எதிர்பார்க்கின்றனர். இது அறிவிக்கப்பட்டால், மத்திய அரசு ஊழியர்களுக்கான புதிய டிஏ விகிதம் 42% ஆக உயரும்.

7வது ஊதியக் குழு: கடந்த டிஏ உயர்வு விவரங்கள் 

மத்திய அரசு அக்டோபர் 3, 2022 அன்று அதிகாரப்பூர்வ உத்தரவை வெளியிட்டு அகவிலைப்படியை உயர்த்தியது. அகவிலைப்படியானது 2022 ஜூலை 1 முதல் அடிப்படை ஊதியத்தில் 34% இலிருந்து 38% ஆக உயர்த்தப்பட்டது. மத்திய அரசு ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலை நிவாரணம் 34% லிருந்து 38% ஆக உயர்த்தப்பட்டது.

டிஏ கணக்கீட்டிற்கான அடிப்படை சம்பளம் 7வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் இருக்கும் என்பதை ஊழியர்கள் கவனிக்க வேண்டும். அதிகரித்து வரும் பணவீக்கத்தின் காரணமாக அவர்களின் சம்பளம்/ஓய்வூதிய வருமானத்தின் மதிப்பில் ஏற்படும் வித்தியாசத்தை ஈடுகட்ட, ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகபிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணத்தை மத்திய அரசு வழங்குகிறது.

மேலும் படிக்க | 7th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களின் ஊதியத்தில் பம்பர் உயர்வு, கணக்கீடு இதோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

 

 

Trending News