7th Pay Commission: 18 மாத டிஏ நிலுவைத் தொகை கிடைக்கவுள்ளதா? முக்கிய அப்டேட் இதோ

7th Pay Commission: 4 சதவீதம் அகவிலைப்படியை உயர்த்துவதற்கான முடிவிற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதாக வட்டாரங்கள் தெரிவித்தன. ஆனால், ஹோலி பண்டிகைக்கு முன்னதாக பிரதமர் மோடி இது குறித்து அறிவிப்பார் என கூறப்படுகின்றது.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Mar 3, 2023, 06:48 PM IST
  • மத்திய ஊழியர்களும் அவர்களது அமைப்புகளும் அகவிலைப்படி அரியர் தொகையை கோரி வருகின்றனர்.
  • கடந்த காலங்களில் அரசும் இது குறித்து தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியிருந்தது.
  • 18 மாத டிஏ பாக்கிகள் குறித்து அரசாங்கம் சில நல்ல செய்திகளை வெளியிடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
7th Pay Commission: 18 மாத டிஏ நிலுவைத் தொகை கிடைக்கவுள்ளதா? முக்கிய அப்டேட் இதோ  title=

7வது ஊதியக்கமிஷன் டிஏ உயர்வு: மத்திய அரசு ஊழியர்களுக்கு முக்கிய செய்தி. இந்த நல்ல செய்தி மத்திய ஊழியர்களின் 18 மாத அகவிலைப்படி அரியர் தொகை தொடர்பானது. மார்ச் 1 ஆம் தேதி நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு, மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணம் குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. இந்தக் கூட்டத்தில் 4 சதவீதம் அகவிலைப்படியை உயர்த்துவதற்கான முடிவிற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதாக வட்டாரங்கள் தெரிவித்தன. ஆனால், ஹோலி பண்டிகைக்கு முன்னதாக பிரதமர் மோடி இது குறித்து அறிவிப்பார் என கூறப்படுகின்றது.

டிஏ நிலுவைத் தொகை குறித்து இதுவரை எந்த அறிவிப்பும் இல்லை

தற்போது ஜனவரி முதல் அமலில் இருக்கும் டிஏவை சிறிது காலத்திற்கு அரசாங்கம் ஒத்திவைக்கலாம் என்று அமைச்சரவைக் கூட்டத்துடன் தொடர்புடைய வட்டாரங்கள் கூறுகின்றன. அதனால்தான் இது தொடர்பாக இதுவரை எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. இம்முறை மத்திய அரசு ஊழியர்களின் 18 மாத நிலுவைத் தொகையை வழங்குவதற்கான அறிவிப்பை அரசு வெளியிடலாம் என ஊழியர் அமைப்புகள் எதிர்பார்த்துள்ளன. கொரோனா காலத்தில் முடக்கப்பட்ட 18 மாத அகவிலைப்படி நிலுவைத் தொகையை வழங்க வேண்டும் என மத்திய அரசு ஊழியர்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். கொரோனா காலத்தில் அரசு ஊழியர்களுக்கு ஜனவரி 2020 முதல் ஜூன் 2021 வரை அகவிலைப்படி வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க | 7th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களின் ஊதியத்தில் பம்பர் உயர்வு, கணக்கீடு இதோ 

தற்போது ஊழியர்களுக்கு 38 சதவீத டிஏ வழங்கப்படுகிறது

மத்திய ஊழியர்களும் அவர்களது அமைப்புகளும் அகவிலைப்படி அரியர் தொகையை கோரி வருகின்றனர். கடந்த காலங்களில் அரசும் இது குறித்து தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியிருந்தது. தற்போது ஊழியர்களுக்கு 38 சதவீத டிஏ அடிப்படையில் பணம் கிடைக்கிறது. இது ஜனவரி முதல் 4 சதவீதம் முதல் 42 சதவீதம் வரை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அது இன்னும் அறிவிக்கப்படாததால், ஹோலிக்கு முன்னதாக, 18 மாத டிஏ பாக்கிகள் குறித்து அரசாங்கம் சில நல்ல செய்திகளை வெளியிடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்தில், மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி, ஊழியர் அமைப்புகள் தொடர்ந்து 18 மாத நிலுவைத் தொகையை வழங்க கோரிக்கை விடுத்து வருவதாக கூறியிருந்தார். கொரோனா தொற்றுநோய் காரணமாக அகவிலைப்படியின் மூன்று தவணைகளை அரசு வெளியிடுவதில்லை. கொரோனா காலத்தில் விதிக்கப்பட்ட லாக்டவுன் காரணமாக அரசாங்கம் நிதி நெருக்கடியை எதிர்கொண்டதால் அப்போது அகவிலைப்படி நிறுத்தப்பட்டது. தற்போது நிலைமை சீராகியுள்ளதால், முடக்கப்பட்ட காலத்துக்கான அகவிலைப்படி நிலுவைத் தொகையை அரசு வழங்க வேண்டும் என ஊழியர்கள் கூறி வருகின்றனர். 

மேலும் படிக்க | 7th Pay Commission: ஊழியர்களுக்கு ஜாக்பாட்!! 4% அகவிலைப்படி அதிகரிப்பு!!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

 

Trending News