8th Pay Commission:வருகிறதா அடுத்த ஊதியக்கமிஷன்? அப்டேட் இதோ

8th Pay Commission: தங்களுக்கான 8வது ஊதியக்குழுவிற்கான அறிவிப்பை வெளியிடுமாறு ஊழியர் அமைப்புகள் கோரி வருகின்றன. இது மட்டுமின்றி, கடந்த 7-வது மத்திய ஊதியக் குழுவில், ஊழியர்களுக்கு மிகக் குறைவான ஊதிய உயர்வுதான் கிடைத்தது. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Feb 26, 2023, 03:05 PM IST
  • சுமார் 8 ஆண்டுகளுக்கு முன்பு அமல்படுத்தப்பட்ட ஏழாவது ஊதியக் குழுவின் மூலம் ஊழியர்களுக்கு பல வகையான சலுகைகள் வழங்கப்பட்டன.
  • இதன்படி, அரசு ஊழியர்களின் அகவிலைப்படி 6 மாதங்களுக்கு ஒருமுறை மாற்றி அமைக்கப்படும்.
  • இதனால், அரசு ஊழியர்களின் சம்பளம் தானாக அதிகரித்து வந்தது.
8th Pay Commission:வருகிறதா அடுத்த ஊதியக்கமிஷன்? அப்டேட் இதோ title=

8வது ஊதியக் குழு புதுப்பிப்பு: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்ரவரி 1 ஆம் தேதி நாட்டின் பொது பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அடுத்த ஆண்டு நாட்டில் நாடாளுமன்ற பொதுத் தேர்தல்கள் நடக்கவுள்ளன. இந்த தேர்தல்களில் மத்திய ஊழியர்களின் நிலைப்பாடு மிகவும் முக்கியமானது. இந்த வகுப்பை கவர்ந்திழுக்க அரசாங்கம் பல வித நடவடிக்கைகளை எடுக்கும் என்று பொருளாதார நிபுணர்கள் கருதுகிறார்கள். அடுத்த நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக மத்திய அரசு ஊழியர்களின் சம்பள உயர்வு தொடர்பான முக்கிய அறிவிப்பை வெளியிடும் என்று கூறப்படுகிறது. இந்த அறிவிப்பு பட்ஜெட்டிலேயே வரும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.

சம்பள உயர்வு மற்றும் புதிய முறை

தங்களுக்கான 8வது ஊதியக்குழுவிற்கான அறிவிப்பை வெளியிடுமாறு ஊழியர் அமைப்புகள் கோரி வருகின்றன. இது மட்டுமின்றி, கடந்த 7-வது மத்திய ஊதியக் குழுவில், ஊழியர்களுக்கு மிகக் குறைவான ஊதிய உயர்வுதான் கிடைத்தது. இருப்பினும் ஊழியர்களுக்கு ஒரு தானியங்கி முறையை உருவாக்க அரசு ஆலோசித்து வருகிறது. இதன் காரணமாக ஒவ்வொரு ஆண்டும் ஊழியர்களின் சம்பளம் தானாகவே மாற்றியமைக்கப்படும். இதற்காக அரசாங்கம் விரைவில் ஒரு பெரிய அறிவிப்பை வெளியிடக்கூடும்.

மேலும் படிக்க | '7ஆவது ஊதியக்குழுவை அமல்படுத்துங்கள்' - மாபெரும் போராட்டத்தில் குதிக்கும் அரசு ஊழியர்கள்

அரசாங்கத்தின் நோக்கம்

அரசு ஊழியர்களுக்கு 8வது சம்பள கமிஷன் அறிவிப்பை விடுத்து, தனியார் நிறுவன ஊழியர்களைப் போல் அவர்களுக்கும் நல்ல வருமானம் கிடைக்க வேண்டும் என்பதே அரசின் எண்ணம். இதற்காக ஒரு குழுவை அமைப்பது குறித்து அரசு பரிசீலித்து வருகிறது. அரசு தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்துகையில், புதிய ஊதியக் குழு அமைப்பது தொடர்பான எந்த முன்மொழிவும் தற்போது பரிசீலனையில் இல்லை என்றும், அத்தகைய சூழ்நிலையில் புதிய ஊதியக் குழுவை அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் தற்போது குறைவாகவே தெரிகிறது என்றும் கூறியுள்ளது.

அகவிலைப்படி குறித்த அரசின் அணுகுமுறை

சுமார் 8 ஆண்டுகளுக்கு முன்பு அமல்படுத்தப்பட்ட ஏழாவது ஊதியக் குழுவின் மூலம் ஊழியர்களுக்கு பல வகையான சலுகைகள் வழங்கப்பட்டன. இதன்படி, அரசு ஊழியர்களின் அகவிலைப்படி 6 மாதங்களுக்கு ஒருமுறை மாற்றி அமைக்கப்படும். இதனால், அரசு ஊழியர்களின் சம்பளம் தானாக அதிகரித்து வந்தது. புதிய முறை அமலுக்கு வந்த பிறகு, தங்களின் அகவிலைப்படியில் தானியங்கி திருத்தம் முன்பு போல் தொடருமா அல்லது அதில் ஏதேனும் புதிய மாற்றம் வருமா என்பதுதான் தற்போது ஊழியர்களின் கேள்வியாக உள்ளது, இப்போது அனைவரின் கவனமும் இந்த விவகாரத்தில் உள்ளது.

மேலும் படிக்க | 8th Pay Commission: உதியக்குழு என்றால் என்ன? ஊழியர்களின் சம்பளம் எப்படி நிர்ணயிக்கப்படுகின்றது? 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

 

Trending News