படுக்கையறையில் இந்த 5 தவறுகளை செய்தால்... மேரேஜில் டேமேஜ் நிச்சயம் - முக்கியமா புது தம்பதிகளுக்கு!

Relationship Tips: படுக்கையறையில் நீங்கள் இந்த ஐந்து தவறுகளை செய்யும்பட்சத்தில், உங்களின் திருமண உறவில் விரிசல் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. 

Written by - Sudharsan G | Last Updated : Aug 5, 2024, 01:57 PM IST
  • உடல் ரீதியிலான நெருக்கமும், மன ரீதியிலான நெருக்கமும் திருமணத்தில் தேவை.
  • பார்ட்னர் உடன் நிதானமாக நேரம் செலவழிக்கும் அறை, படுக்கையறை தான்.
  • அங்கு நீங்கள் சில தவறுகளை செய்யக்கூடாது.
படுக்கையறையில் இந்த 5 தவறுகளை செய்தால்... மேரேஜில் டேமேஜ் நிச்சயம் - முக்கியமா புது தம்பதிகளுக்கு!

Relationship Tips In Tamil: திருமண உறவு வலுவாக இருக்க படுக்கை அறையும் ஒரு முக்கிய பங்கை வகிக்கும். உடல் ரீதியான நெருக்கம் மட்டுமின்றி படுக்கை அறையில் மன ரீதியிலான நெருக்கத்தை உண்டாக்கினால் மட்டுமே அந்த திருமண பந்தம் என்பது ஆரோக்கியமான ஒன்றாக வலுபெறும். படுக்கை அறை சூழலை அமைதியாக மற்றும் நிதானமாகவும் வைத்திருப்பது என்பது தம்பதிகளை திருமண உறவில் மகிழ்ச்சியாக வைத்திருக்கும் எனலாம். 

Add Zee News as a Preferred Source

இரவில் படுக்கையில் இருக்கும் போது, அன்றைய நாளில் நடந்தவற்றை குறித்து பேசுவது, புரளி பேசுவது, உங்கள் இருவருக்கும் பிடித்தவை பிடிக்காதவை குறித்து பேசுவது ஆகிய செயல்பாடுகள் திருமண உறவில் அவசியமாகும். இந்த உங்கள் திருமண உறவில் புரிதலையும், பரஸ்பர நம்பிக்கையையும் உருவாக்கும். இருவருக்கும் இடையே உருவாகும் அந்த ஆழமான பந்தத்தை அந்த படுக்கையறை சூழலே உருவாக்கும் எனவும் கூறலாம்.

அப்படியிருக்கையில், அந்த படுக்கையறை சூழலை கெடுக்கும் விதமான செயல்பாடுகளில் நீங்கள் ஈடுபட்டால் உங்கள் திருமண பந்தம் பாதிக்கப்படலாம் என்பதையும் நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். சில விஷயங்களை நீங்கள் வேண்டுமென்று செய்ய மாட்டீர்கள், தெரியாமல் செய்தாலும் தவறு தவறுதான். எனவே, படுக்கையறையில் இந்த சில தவறுகளை தெரியாமல் கூட செய்துவிடாதீர்கள். அந்த தவறுகள் என்னென்ன என்பது குறித்து இங்கு காணலாம். 

மேலும் படிக்க | இந்த 7 விஷயங்களை கவனிச்சீங்கங்கனா, காதலரா இருந்தாலும் பிரிந்துவிடுங்கள்..!

இந்த 5 தவறுகள்

- மொபைல் நோண்டுவது: இந்த காலகட்டத்தில் இதுதான் மிகப்பெரிய பிரச்னை. படுக்கையறையில் வந்து மொபைலில் ரீல்ஸ் பார்ப்பது, சமூக வலைதளங்களை பார்ப்பது, கேம்ஸ் விளையாடுவது, லேப்டாப்பில் அலுவலக வேலை பார்ப்பது ஆகிய தவிர்க்கப்பட வேண்டியதாகும். இவை உங்கள் இணையரை கோபத்திற்கு உள்ளாக்குவது மட்டுமின்றி, இதுபோன்ற மின்னணு சாதனங்களில் இருந்து வெளிவரும் வெளிச்சம் உங்கள் தூக்கத்தை கெடுக்கும். படுக்கையறையில் நிம்மதியான தூக்கம் இல்லை என்றால் திருமணம் பந்தம் பிரச்னையாகிவிடும். 

- வேறு வேறு இடத்தில் தூங்குவது: குழந்தை பிறக்காத போது இணையர்கள் வேறு வேறு இடங்களில் தூங்குவது மிகப்பெரிய பிரச்னையாகும். எனவே அதனை தவிர்க்கவும். குழந்தை பிறந்த பின்னரும் கூட இருவரும் வேறு வேறு இடங்களில் தூங்க வேண்டும் என அர்த்தம் இல்லை. பேசிக்கொண்டும், சில கொஞ்சல் உடனும் ஒரே இடத்தில் தூங்குவதே உறவை நீடிக்கச் செய்யும் ரகசியமாகும். 

- வேறு வேறு நேரத்தில் தூங்குவது: அதாவது, இது ஒவ்வொருவருக்கும் மாறுபடும் என்றாலும் இதிலும் நீங்கள் கவனம் செலுத்த வேண்டும். தொடர்ச்சியாக நீங்கள் ஒரு நேரத்திலும், உங்கள் இணையர் ஒரு நேரத்திலும் தூங்கச் சென்றால் அது உறவில் விரிசலை ஏற்படுத்தும். உங்களுக்கு இடையேயான உரையாடல் குறைந்து, உறவில் வெற்றிடம் உருவாகும். இந்த வெற்றிடம் அதிகமாக அதிகமாக பிரச்னையும் அதிகமாகும். எனவே, முடிந்தவரையில் இருவரும் ஒரே நேரத்தில் தூங்கி, ஒரே நேரத்தில் எழுந்திருக்க முயற்சியுங்கள். 

- சுத்தமின்மை: சிலருக்கு தூங்கும்போது கூட சுத்தமாக இருக்க வேண்டும் என தோன்றும். அப்படியான சூழலில், வியர்வை நாற்றத்துடன் நீங்கள் தூங்கச் சென்றால் உங்கள் இணையருக்கு அது பிடிக்காமல் கூட போக வாய்ப்புள்ளது. இதனால் உங்கள் இருவருக்குமான நெருக்கம் குறைந்து, உடல் ரீதியிலான நெருக்கத்திலும் பாதிப்பு ஏற்படும். திருமண பந்தமும் பாதிக்கும். 

- உடல் ரீதியான அரவணைப்பு: நீங்கள் தூங்கும்போது உங்கள் இணையருடன் சௌகரியமான முறையில் உடல் ரீதியான அரவணைப்பு என்பது அவசியம். கட்டியணைத்து உறங்குவது, கால், கைகளை மற்றொருவர் மேல் வலிக்காத வகையில் வைத்து தூங்குவது உள்ளிட்ட பல முறைகள் இதில் உள்ளன. ஆனால், இவற்றை தவிர்த்தீர்கள் என்றால் அதுவும் மிகப்பெரிய பிரச்னை ஆகும்.

(பொறுப்பு துறப்பு: இவை அனைத்தும் பொதுவான தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்டது. எனவே, இதனை பின்பற்றும் முன் இதுகுறித்த நிபுணரை சந்தித்து ஆலோசனை மேற்கொள்ள வேண்டும். இதற்கு Zee News பொறுப்பேற்காது)

மேலும் படிக்க | ஒவ்வொரு பெண்ணும் இந்த பொருட்களை எப்போதும் கையில் வைத்திருக்க வேண்டும்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Sudharsan G

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.

...Read More

Trending News