Tamil Nadu Rain Update: தமிழகத்தில் பல பகுதிகளில் நேற்று காலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னையிலும் மழை வெளுத்து வாங்கி வரும் நிலையில், அடுத்த சில நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, சில நாட்களாக பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், தமிழகத்தில் மேலும் 10 நாட்களுக்கு கனமழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பசலனம் காரணமாக 9 மாவட்டங்களில் இன்று மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் அதிகமாகவே பெய்து வரும் மழையின் அளவால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. தொடர் மழை காரணமாக பல கிராமங்கள் துண்டிக்கப்பட்டுள்ளன. பல ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் குடியிருப்பு பகுதிகளை நீர் சூழ்ந்துள்ளதோடு பல வீடுகளில் மழை நீரும் புகுந்தது.
வங்கக்கடல் பகுதியில் புதிதாக காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளது. அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் தொடர்ந்து மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.