NPS: பட்ஜெட் அறிவிப்புக்குப் பிறகு பணியாளர்களுக்கு ரூ.4800 மிச்சம், கணக்கீடு இதோ

ஊழியர்களுக்கு ஓய்வூதியத்தில் வரி விலக்கு கிடைக்கும். அதே நேரத்தில், NPS இல் மத்திய மற்றும் மாநிலத்தின் பங்களிப்பு இனி 14% ஆக இருக்கும்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Feb 2, 2022, 05:38 PM IST
  • அரசு ஊழியர்களுக்கான என்பிஎஸ் திட்டத்தில் வரி விலக்கு வரம்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
  • இப்போது 10%-க்கு பதிலாக 14% என்பிஎஸ் பங்களிப்பாக வழங்கப்படும்
  • நிறுவன வரியை 18 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக குறைக்க முன்மொழியப்பட்டுள்ளது: நிதியமைச்சர்
NPS: பட்ஜெட் அறிவிப்புக்குப் பிறகு பணியாளர்களுக்கு ரூ.4800 மிச்சம், கணக்கீடு இதோ title=

Budget 2022 Updates: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று நாடாளுமன்றத்தில் இந்த நிதியாண்டுக்கான நாட்டின் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அதில் அவர் சம்பளம் பெறும் வகுப்பினருக்கான பெரிய அறிவிப்புகளை வெளியிட்டார். 

வருமான வரி தாக்கல் (ITR Filing) குறித்து நிதியமைச்சர் கூறுகையில், இனி திருத்தப்பட்ட வரியை தாக்கல் செய்வதற்கான அவகாசம் 2 ஆண்டுகளாக நீட்டிக்கப்படும் என்று தெரிவித்தார். ஒரு பெரிய அறிவிப்பை வெளியிட்ட ​​நிதியமைச்சர், NPS இல் இப்போது 10% க்கு பதிலாக, 14% பங்களிப்பு வழங்கப்படும் என்று கூறினார். இது பணியாளரின் சம்பளம் மற்றும் வரி விலக்குகளை எவ்வாறு பாதிக்கும் என்பதை இந்த பதிவில் காணலாம். 

புதிய அறிவிப்புக்குப் பிறகு வரிச் சேமிப்பு எவ்வளவு இருக்கும்

அரசின் பட்ஜெட் அறிவிப்பு ஊழியருக்கு வழங்கப்படும் வரிவிலக்கை எப்படி பாதிக்கும் என்பதை தெரிந்துகொள்ளலாம். உதாரணமாக, ஒரு ஊழியரின் அடிப்படை சம்பளம் மற்றும் அகவிலைப்படி சேர்ந்து 50 ஆயிரம் ரூபாயாக இருந்து, NPS இல் அவரது பங்களிப்பு 10 சதவிகிதம் அதாவது 5 ஆயிரம் ரூபாயாக உள்ளது என்று வைத்துக்கொள்வோம்.

ALSO READ | காசோலை கட்டண முறையில் பெரிய மாற்றம்: தெரிந்து கொள்வது மிக அவசியம்

இப்போது இதற்குப் பிறகு, அரசின் பங்களிப்பு ரூ. 7,000 ஆக இருக்கும். ஒரு ஊழியர் 20 சதவீத வரி வரம்பிற்குள் வந்தால், இதுவரை நிறுவனம் அளிக்கும் 10 சதவீதம், அதாவது 5 ஆயிரம் ரூபாய்க்கு மட்டுமே வரி விலக்கு அளிக்கப்பட்டது. மீதமுள்ள ரூ.2,000க்கு 20 சதவீதம் அதாவது ரூ.400 வரி அளிக்க வெண்டி இருந்தது. ஆனால் இப்போது நிதியமைச்சரின் புதிய அறிவிப்புக்குப் பிறகு, ஊழியர்கள் முழு 14 சதவீதத்திலும் வரி விலக்கு கோர முடியும். இதனால் ஒவ்வொரு மாதமும் 400 ரூபாய் சேமிக்க முடியும். 

அரசு ஊழியர்களுக்கு NPS வரி விலக்கு அதிகரிக்கப்பட்டுள்ளது

இப்போது 10%-க்கு பதிலாக 14% என்பிஎஸ் (NPS) பங்களிப்பாக வழங்கப்படும் என்று நிதியமைச்சர் தெரிவித்தார். அதாவது, அரசு ஊழியர்களுக்கான என்பிஎஸ் திட்டத்தில் வரி விலக்கு வரம்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனுடன் புதிய வரி சீர்திருத்தம் கொண்டுவரும் திட்டத்தையும் நிதியமைச்சர் அறிவித்தார். ஊழியர்களுக்கும் ஓய்வூதியத்தில் வரி விலக்கு கிடைக்கும். அதே நேரத்தில், NPS இல் மத்திய மற்றும் மாநிலத்தின் பங்களிப்பு இனி 14% ஆக இருக்கும்.

கார்ப்பரேட் வரியை குறைக்கும் திட்டம்

நிறுவன வரியை 18 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக குறைக்க முன்மொழியப்பட்டுள்ளதாக பட்ஜெட் (Budget 2022) உரையின் போது நிதியமைச்சர் தெரிவித்தார். இதன் மூலம் கூடுதல் கட்டணம் 12 சதவீதத்தில் இருந்து 7 சதவீதமாக குறைக்கப்படும். கூட்டுறவு நிறுவனங்களும் ஊக்குவிக்கப்படும்.

ALSO READ | 7th Pay Commission சூப்பர் செய்தி: இந்த ஊழியர்களின் அகவிலைப்படியில் 14% அதிகரிப்பு!!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News