Skin Care: பளபளப்பான சருமம் பெற செலவே இல்லாத பாட்டி வைத்தியம்!

Skin Care: வெயில் மற்றும் மழை காலத்தில் சருமம் அதிக பாதிப்படையும். எனவே இந்த காலகட்டத்தில் சில எளிய வீட்டு வைத்தியங்கள் மூலம் ஒளிரும் சருமத்தை பெறலாம்.

Written by - RK Spark | Last Updated : Jul 8, 2024, 03:41 PM IST
  • சருமத்திற்கு சில வீட்டு வைத்தியங்களை பின்பற்றலாம்.
  • இவை பக்கவிளைவுகளை ஏற்படுத்துவதில்லை.
  • முகத்திற்கு இயற்கையான பளபளப்பை தருகின்றன.
Skin Care: பளபளப்பான சருமம் பெற செலவே இல்லாத பாட்டி வைத்தியம்! title=

Skin Care: உடலில் உள்ள ஹீட் காரணமாக ஒரு சிலருக்கு முகத்தில் பருக்கள் மற்றும் புள்ளிகள் ஏற்படலாம். முகத்தை பளபளப்பாக வைத்து கொள்ள ஆண் மற்றும் பெண் என இருவரும் பலவகையான பொருட்களை முகத்தில் பயன்படுத்துகின்றனர். உடல் ஆரோக்கியத்திற்கு எவ்வளவு கவனம் செலுத்துகிறோமோ, அதே அளவிற்கு சரும பாதுகாப்பிற்கும் கவனம் செலுத்த வேண்டும். தற்போது வெயில் காலம் முடிந்து மழைக்காலம் தொடங்கி உள்ள நிலையில் சருமத்திற்கு கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான தோல் அமைப்பு இருக்கும். அதற்கு ஏற்றார் போல சருமத்தை பராமரிக்க வேண்டும்.

மேலும் படிக்க | பலூன் போன்ற உடலை பக்குவமா குறைக்க உதவும் பூண்டு: இப்படி சாப்பிடுங்க போதும்

கடைகளில் தோல் தொடர்பான பல செயற்கை தயாரிப்புகள் உள்ளன. எனவே அவற்றில் உங்கள் சருமத்திற்கு பயனளிக்கும் பொருட்களை பயன்படுத்துவது நல்லது. சில சமயங்களில் இந்த பொருட்கள் சருமத்திற்கு ஆபத்தானவையாக கூட இருக்கலாம். எனவே பாரம்பரிய முறைப்படி உள்ள சில சரும பாதுகாப்பு பொருட்கள் உங்களுக்கு பயனளிக்கலாம். இயற்கையாக கிடைக்கும் இந்த பொருட்கள் சருமத்திற்கு நல்ல பளபளப்பைக் கொடுக்கின்றன. மேலும் எந்தவித பக்கவிளைவுகளையும் ஏற்படுத்துவதில்லை. பருக்கள் மற்றும் கரும்புள்ளிகள் போன்ற பிரச்சனைகளை சரி செய்கின்றன.

இயற்கை சரும பராமரிப்பு

துளசி இலைகள்: துளசி செடி பொதுவாக வீடுகளிலும் வளர்க்கப்படுகிறது. இவற்றில் பல மூலிகை அம்சங்கள் நிறைந்துள்ளது. துளசி இலைகளை தொடர்ந்து முகத்திற்கு தடவி வந்தால் பல நன்மைகள் கிடைக்கிறது. வயதான தோற்றத்தை வரவிடாமல் தடுக்கின்றன. மேலும் தோல் சம்பந்தமான பிரச்சினைகளை துளசி செடி தடுக்கிறது. நீங்களும் பளபளப்பான சருமம் பெற துளசி இலைகளை ரோஸ் வாட்டரில் ஊறவைத்து, அதனை பேஸ்ட் போல அரைத்து முகத்திற்கு தடவவும். தொடர்ந்து இதனை செய்து வந்தால் முகம் பொலிவு கிடைக்கும்.

மஞ்சள்: பல ஆண்டுகளாக பெண்கள் முகத்திற்கு மஞ்சள் பயன்படுத்தி வருகின்றனர். மஞ்சள் அலர்ஜி எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளது. ஆண்கள், பெண்கள் இருவரும் முகத்திற்கு மஞ்சளை பயன்படுத்தலாம். முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகளை நீக்க பாலில் மஞ்சளை கலந்து முகத்திற்கு தடவலாம். பிறகு சிறிது நேரம் மசாஜ் செய்தால் சருமத்தில் படிந்துள்ள தூசி, அழுக்கு நீங்கும். இதனை தினசரி செய்து வந்தால் முகத்திற்கு கூடுதல் பொலிவு கிடைக்கும். மேலும் முகப்பரு மற்றும் பருக்களில் இருந்தும் விடுதலை கிடைக்கிறது.

ஆரஞ்சு தோல்கள்: ஆரஞ்சு தோலில் வைட்டமின் சி நிறைந்துள்ளது. இவை சருமத்திற்கு கூடுதல் நன்மைகளை தருகின்றன. சரும பளபளப்பிற்கு ஆரஞ்சு தோலை வெயிலில் காயவைத்து, பிறகு அரைத்து பொடி போல மாற்றி கொள்ளவும். குளிப்பதற்கு முன்பு இந்த பொடியை உளுந்து மாவுடன் கலந்து முகத்தில் தடவி சிறிது நேரம் ஊறவைக்கவும். பிறகு சாதாரண தண்ணீரில் முகத்தை கழுவினால் நல்ல பளபளப்பு கிடைக்கும்.

(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை)

மேலும் படிக்க | இந்த உணவுகள் கொல்ஸ்ட்ராலை வேகமாக அதிகரிக்கும், ஜாக்கிரதை!! டாக்டரின் அட்வைஸ்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News