மவுத்வாஷ் மூலம் COVID-19 பரவலை குறைக்கலாம்: ஆய்வில் தகவல்!!

நாம் தினமும் மவுத்வாஷ் உபயோக்கிப்பாதான் மூலம் கொரோனா வைரஸ் பரவலை குறைக்கலாம் என்று புதிய ஆய்வு கூறுகிறது..!

Last Updated : Aug 13, 2020, 02:12 PM IST
மவுத்வாஷ் மூலம் COVID-19 பரவலை குறைக்கலாம்: ஆய்வில் தகவல்!! title=

நாம் தினமும் மவுத்வாஷ் உபயோக்கிப்பாதான் மூலம் கொரோனா வைரஸ் பரவலை குறைக்கலாம் என்று புதிய ஆய்வு கூறுகிறது..!

தீவிரமாக பரவிவரும் COVID-19 தொற்று நோயைக் கட்டுப்படுத்த உதவும் ஒரு தடுப்பூசியை உருவாக்கும் போட்டியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரமாக செயல்பாடு வருகிறது. கொரோனா பரவுவதை தடுக்க முகமூடி அணிதல் மற்றும் சமூக இடைவெளியை கடைபிடித்தல், அடிக்கடி சோப்பிட்டு கைகளை கழுவுதல் போன்ற நடவடிக்கைகளை நாம் கையாண்டு வருகிறோம். இந்நிலையில், ஒரு புதிய ஆய்வில், வணிக ரீதியாக கிடைக்கக்கூடிய மவுத்வாஷ்களை நாம் உபயோகிப்பதால் அவை நமது வாய் மற்றும் தொண்டையில் உள்ள வைரஸ் துகள்களின் அளவைக் குறைக்கும் என்பதால் கோவிட் -19 பரவலை கட்டுப்படுத்தும் என கண்டறியப்பட்டுள்ளது. 

தொற்று நோய்களின் ஜர்னலில் வெளியிடப்பட்ட இந்த ஆய்வில், கோவிட் -19 நோய்த்தொற்றுகளுக்கு சிகிச்சையளிக்க மவுத்வாஷ்கள் பொருத்தமானவை அல்ல என்றும் அவை SARS-CoV-2 என்ற வைரஸைப் பிடிப்பதில் இருந்து நம்மைப் பாதுகாக்காது என்றும் விரிவாகக் குறிப்பிடுகிறது. இருப்பினும், அவை பரவும் அபாயத்தைக் குறைக்கலாம்.

சில கொரோனா நோயாளிகளின் வாய் மற்றும் தொண்டையில் அதிக அளவு வைரஸ் துகள்கள் அல்லது வைரஸ் சுமை இருப்பதாக, ஜெர்மனியில் உள்ள 'ருர்' பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் (Ruhr University Bochum) தெரிவிக்கின்றனர். கொரோனா வைரஸ் பொதுவாக பாதிக்கப்பட்டவர் இருமும் போதும், தும்மும்போதும் அல்லது பேசும்போதும் நீர்துளிகள் வழியே மற்றவர்களுக்கு பரவுகிறது. ஆரோக்கியமான நபரின் மூக்கு, வாய் மற்றும் கண்ணீர் வழியே வைரஸ் தொற்று பரவுகிறது என்று அவர்கள் குறிப்பிடுகின்றனர்.

ALSO READ | கொரோனா காலத்தில் பொது கழிப்பறைகளை பயன்படுத்துவது பாதுகாப்பானதா?...

இவை "வாய்வழி துவைப்பது உமிழ்நீரின் வைரஸ் சுமையை குறைக்கும், இதனால் SARS-CoV-2 பரவுவதை குறைக்கக்கூடும் என்ற கருத்தை ஆதரிக்கிறது" என்று அவர்கள் கூறினர். இந்த ஆய்வின் நோக்கம், இதுபோன்ற பரவுதல்களின் அபாயத்தைக் குறைக்க உதவுவதோடு, பல் சிகிச்சைகளுக்கான நெறிமுறைகளை உருவாக்க உதவுவதும் ஆகும்.

சந்தையில் விற்கப்படும் பல்வேறு கலவையுடன் கூடிய எட்டு மவுத்வாஷ்களை சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. ஒவ்வொரு மவுத்வாஷையும், வைரஸ் துகள்கள் மற்றும் உமிழ்நீரை உருவாக்கும் பொருளுடனும் கலந்து, 30 வினாடிகள் குலுக்கிய பின், 'Vero E6' கலங்களில் சோதனை செய்யப்பட்டது. சோதனை செய்யப்பட்ட அனைத்து தயாரிப்புகளும், ஆரம்ப வைரஸ் எண்ணிக்கையை குறைத்துள்ளன. 

ஆனால், சில மவுத்வாஷ்கள், 30 விநாடிகளுக்கு பின் எந்த வைரசையும் கண்டறிய முடியாத அளவிற்கு வீரியம் இழந்துள்ளன. மவுத்வாஷ்கள் பயன்படுத்தி வாய் கொப்பளிப்பதால், உமிழ்நீரில் உள்ள வைரஸ் சுமையைக் குறைக்கும். இதனால், கொரோனா பரவுவதை குறுகிய காலத்திற்குக் குறைக்கலாம். ஆனால், கொரோனா வைரஸ் நோய்த்தொற்றுகளுக்கு சிகிச்சையளிக்க அல்லது கொரோனா தொற்று தாக்காமல் பாதுகாத்து கொள்ள, மவுத்வாஷ்கள் முற்றிலும் பொருத்தமானவை அல்ல. 

சோதனை செய்யப்பட்ட அனைத்து தயாரிப்புகளும் ஆரம்பத்தில் வைரஸ் எண்ணிக்கையை குறைத்தன. இருப்பினும், மருத்துவ நடைமுறையில் அதன் விளைவு மற்றும் அதன் காலம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.

ALSO READ | COVID-19 அறிகுறி தெரிய 8 நாட்கள் வரை ஆகலாம்... பகீர் கிளப்பும் ஆய்வாளர்கள்!!

"மவுத்வாஷ் மூலம் கர்ஜனை செய்வது உயிரணுக்களில் வைரஸ்கள் உற்பத்தியைத் தடுக்க முடியாது, ஆனால் குறுகிய காலத்தில் வைரஸ் சுமையை குறைக்கக்கூடும், அங்கு தொற்றுநோய்க்கான மிகப்பெரிய சாத்தியம் வரும் வாய்வழி குழி மற்றும் தொண்டையில். இது பல் மருத்துவர் அல்லது கோவிட் -19 நோயாளிகளின் மருத்துவ கவனிப்பு போன்ற சில சூழ்நிலைகளில் பயனுள்ளதாக இருக்கும்” என்று ருர் பல்கலைக்கழக போச்சத்தைச் சேர்ந்த ஆய்வு இணை ஆசிரியர் டோனி மீஸ்டர் விளக்கினார்.

SARS-CoV-2 இல் மவுத்வாஷ்களின் செயல்திறன் குறித்த மருத்துவ ஆய்வின் நோக்கத்தை அவர்கள் இப்போது மேலும் ஆராய்ந்து வருகின்றனர், இதன் போது நோயாளிகளிடமும் இதன் விளைவைக் கண்டறிய முடியுமா, அது எவ்வளவு காலம் நீடிக்கும் என்பதை விஞ்ஞானிகள் சோதிக்க விரும்புகிறார்கள்.

Trending News