தமிழகத்தில் 14 பொருட்களுக்கு தடை; நாளை முதல் அமல்!

கைப்பை, தேநீர் குவளை உள்ளிட்ட 14 பிளாஸ்டிக் பொருட்கள் மீதான தடை நாளை முதல் தமிழகத்தில் அமுலுக்கு வருகிறது!

Last Updated : Dec 31, 2018, 10:48 AM IST
தமிழகத்தில் 14 பொருட்களுக்கு தடை; நாளை முதல் அமல்! title=

கைப்பை, தேநீர் குவளை உள்ளிட்ட 14 பிளாஸ்டிக் பொருட்கள் மீதான தடை நாளை முதல் தமிழகத்தில் அமுலுக்கு வருகிறது!

நாளை (ஜனவரி 1) முதல் தமிழகத்தில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்படவுள்ள நிலையில், தற்போது பயன்பாட்டில் இருக்கும் பிளாஸ்டிக் பொருட்களை திரும்ப்பெறல் மையங்களில் திருப்பியளித்து வருகின்றனர்.

சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை உணர்ந்து, நாளை முதல் தமிழகத்தில் 50 மைக்ரானுக்கு குறைந்த பிளாஸ்டிக் பொருட்கள், பைகளை விற்பதற்போது, இருப்பு வைப்பதற்கோ தடை விதிக்கப்பட்டுள்ளது. இயற்கை சூழலை பாதிக்கும் பிளாஸ்டிக் பயன்பாட்டை கட்டுப்படுத்து ஒரு முயற்சியாக இந்த தடை உத்தர்வு பிரப்பிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பின் படி பால், தயிர், எண்ணெய், மருத்துவ பொருட்கள் உறைகள் தவிர, தடிமன் வேறுபாடின்றி மக்காத பிளாஸ்டிக் பொருட்களான பிளாஸ்டிக் தாள், பிளாஸ்டிக் தட்டு, பிளாஸ்டிக் தேநீர் குவளை, பிளாஸ்டிக் தண்ணீர் குவளை, பிளாஸ்டிக் தண்ணீர் பாக்கெட், பிளாஸ் டிக் உறிஞ்சி குழல், பிளாஸ்டிக் கைப்பை, பிளாஸ்டிக் கொடி உள்பட 14 பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

முன்பிருந்தே தமிழகத்தில் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த கூடாது என அரசு எச்சரித்து வந்த போதிலும் அதன் பயன்பாடு குறைந்தபாடில்லை. குறிப்பாக சாலையோர கடைகள், பூ, பழக்கடைகள், தினசரி / வாரச்சந்தைகள், டீக்கடை, மெஸ், ஓட்டல்களில் இதன் பயன்பாடு அதிகரித்துள்ளது.

மாநகராட்சி சுகாதாரத்துறையினர் அவ்வப்போது ஆய்வு நடத்தி, பறிமுதல் செய்தாலும் மாற்றங்கள் நிகழவில்லை. இதன் காரணமாக பிளாஸ்டிக் பொருள் தயாரிப்பாளர்கள், விற்பனையாளர்களுக்கு அபராதம் விதிக்க, தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

இதன்படி நாளை (ஜனவரி 1) முதல், தடை செய்த பிளாஸ்டிக் பொருட்களை விற்றாலோ, இருப்பு வைத்திருந்தாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா? என்பதை கண்காணிக்க, தமிழகம் முழுவதும் 10,000 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த குழுவினர் மண்டல மற்றும் வார்டு வாரியாக சோதனையில் ஈடுபட்டு நடவடிக்கை எடுப்பார்கள்.

முதல்கட்டமாக, அபராதம் விதிக்கப்படும். தொடர்ந்து ஒரே தவறை மீண்டும் செய்தால், தொழில் உரிமம் ரத்து செய்யப்படும். உரிமம் இன்றி கடை நடத்தினால், 'சீல்' வைக்கப்படும். 

சென்னை மாநகராட்சியை பொறுத்தவரை, தடை செய்யப்பட்ட 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களை பொதுமக்கள், வியாபாரிகள் யாரேனும் வைத்திருந்தால், தாங்கள் வசிக்கும் பகுதிக்கு உட்பட்ட வார்டு அலுவலகங்களில் ஒப்படைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இன்று மாலை வரை இந்த பொருட்களை எடுத்துச் சென்று வழங்கவும் கால அவகாசம் வழங்கப்பட்டு இருக்கிறது. நாளை முதல் பிளாஸ்டிக் பொருட்களை விநியோகம் செய்யும் மக்கள் மீது சட்டம் பாயும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வியாபாரிகளுக்கு மட்டும் அல்ல, பொதுமக்களுக்கும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தும் பட்சத்தில், அபராதம் விதிக்கப்படும். வரும் 1-ஆம் தேதி முதல் அமுலுக்கு வரும் தடை உத்தரவு, பொதுமக்களை மீண்டும் மஞ்சப்பை எனும் துணிப்பை பக்கம் திரும்ப வைத்துள்ளது.

Trending News