புது துணிகளில் சாயம் போகாமல் துவைப்பது எப்படி?

Washing Tips: புதிய துணிகளை துவைக்கும் முன்பு சில விஷயங்களை பின்பற்றுவது அவசியம்.  இவை துணிகளை நீண்ட நாட்கள் சாயம் போகாமல் இருக்க உதவுகிறது.  

Written by - RK Spark | Last Updated : Nov 13, 2023, 07:41 AM IST
  • புது துணிகளை ட்ரையரில் போட கூடாது.
  • வினிகர் பயன்படுத்தி துவைப்பது நல்லது.
  • அதிக நேரம் வெயிலில் காயப்போடுவதை தவிர்க்கவும்.
புது துணிகளில் சாயம் போகாமல் துவைப்பது எப்படி? title=

பண்டிகை காலங்களில் நாம் அனைவரும் புது துணிகளை வாங்கி அணிகிறோம்.  மேலும், புதிதாக எடுத்த துணிகளை நாம் கவனமாக பார்த்து கொள்வோம்.  ஏதேனும் விசேஷ நாட்கள் வந்தால் மட்டுமே அதனை எடுத்து பயன்படுத்துவோம்.  இப்படி புதிய துணிகளை பாதுகாப்பாக பார்த்து கொள்ளும் முன்பு, அவற்றில் சாயம் போகாமல் இருப்பதும் அவசியம்.  புது துணிகளில் சாயம் போவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது.   இந்த குறிப்பிட்ட பிரச்சனையின் கோபத்தை நாம் அனைவரும் நம் வாழ்வில் ஒரு முறையாவது சந்தித்திருக்கிறோம். இதை விட பெரிய வலி எதுவும் இல்லை என்று எளிதாக சொல்லலாம். எனவே, துவைக்கும் முன்பு சில விஷயங்களை பின்பற்றுவது நல்லது.  

மேலும் படிக்க | ஈஸியா உடல் எடை குறைக்கணுமா? அப்போ இந்த டிப்ஸ் ட்ரை பண்ணுங்க

புது துணிகளை துவைக்கும் முன், உள்ளே திருப்பு துவைக்கவும்.  இப்படி திருப்புவது, துவைக்கும் போது அவற்றை பாதுகாக்கும் மற்றும் நீண்ட நாட்கள் புதியதாக இருக்கும். இது துணியிலிருந்து சாயம் வெளியேறுவதைத் தடுக்கிறது. ஜீன்ஸ், சட்டை, டீ சர்ட் மங்காமல் தடுக்க இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.  மேலும், புதிய ஜீன்ஸ் பேண்ட்களை அதிக நேரம் வெயிலில் போடுவதை தவிர்க்கவும்.  புதிய துணிகள் எவ்வளவு அதிகமாக துவைக்கப்படுகிறதோ அவ்வளவு வேகமாக மங்கிவிடும். சுகாதாரத்திற்காக அடிக்கடி துணிகளை துவைப்பதன் முக்கியத்துவத்தை நாம் அனைவரும் அறிந்திருக்கிறோம், ஆனால் துணிகளை அடிக்கடி துவைப்பது அவற்றை பழையதாக மாற்றும்.

முடிந்தவரை புதிய துணிகளை தனியாக துவையுங்கள்.  ஏனெனில், மற்ற ஆடைகளுடன் சேர்த்து துவைக்கும் போது, அதில் இருக்கும் வண்ணங்கள் கூட ஒட்டிக்கொள்ளும் அபாயம் உள்ளது.  இதனால், அவற்றை அடுத்தமுறை பயன்படுத்த முடியாமலும், போகலாம்.  துணிகளை துவைக்க சரியான சோப்பு பயன்படுத்துவது அவசியம்.  வாஷிங் மிஷினில் துணிகளை துவைத்தால், சரியான சோப்பு பவுடர் அல்லது லிக்குவிட் பயன்படுத்துவது அவசியம்.  மேலும், துணிகளை நேரடி சூரிய ஒளியில் படும்படி காயவைத்தால், அவற்றின் வண்ணங்கள் எளிதில் வெளுத்துவிடும். உங்கள் ஆடைகளை நிழலில் வைப்பது ஆடைகள் மங்காமல் தடுக்க உதவும்.  அதிக வண்ணங்கள் இருக்கும் துணிகளை தனியாகவே துவையுங்கள்.  எவ்வளவு விலை கொடுத்து துணிகளை வாங்கி இருந்தாலும், முதல் சலவையில் அவற்றில் இருந்து வண்ணங்கள் மற்ற துணிகளில் ஒட்டி கொள்ளும்.

வினிகர்: சமயலறையில் இருக்கும் பொதுவான பொருள் வினிகர். துணிகளை துவைக்கும் முன்பு, ​​ஒரு கப் வினிகரை சேர்க்கவும், இது துணிகளில் நிறங்களை அப்படியே வைத்திருக்க உதவும்.  மேலும் துவைக்கும் போது உப்பு சேர்ப்பதும் துணிகளுக்கு உதவும்.

குளிர்ந்த நீர்: வாஷிங் மிஷினில் புதிய துணிகளை போடும் முன், அவற்றை 15 நிமிடங்கள் குளிர்ந்த நீரில் தனித்தனியாக ஊற வைத்து துவைக்கவும். இது வண்ணங்கள் மங்காமல் இருக்க உதவுகிறது.

ட்ரையர்: முடிந்த வரை ட்ரையர் பயன்படுத்துவதை தவிர்த்து, கையில் புழிந்து காயவைக்கவும்.  இவை துணிகளை நீண்ட நாட்கள் சாயம் போகாமல் பார்த்து கொள்ளும்.

மேலும், புதிய ஆடைகளை அணிவதற்கு முன்பு துவைக்கலாமா? வேண்டாமா? என்ற சந்தேகம் சிலருக்கு இருக்கும். இருப்பினும் இவற்றிற்கு பலரிடமும் மாற்று கருத்துக்கள் உள்ளன.  இது குறித்து நிபுணர்கள் கூறுகையில், ரிஸ்க் எடுக்க வேண்டியது உங்களுடையது. ஆனால் உங்கள் புதிய ஆடைகளை அணிவதற்கு முன்பு அவற்றை துவைப்பது நல்லது.  இதற்கான முக்கிய காரணம்,  ஆடைகளில் இரசாயனங்கள் அதிகளவு இருக்கலாம், இவை தீங்கு விளைவிக்கும் என்று கூறுகின்றனர்.

மேலும் படிக்க | 1 மாதுளை பல பலன்கள்.. வியக்க வைக்கும் மாதுளை ஜூஸின் நன்மைகள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News