அமுதாவும் அன்னலட்சுமியும்: அமுதாவுக்கு அதிர்ச்சி கொடுத்த குழந்தையின் அம்மா.. வடிவேலு செய்த சதி

அமுதாவுக்கு அதிர்ச்சி கொடுத்த குழந்தையின் அம்மா.. வடிவேலு செய்த சதி - அமுதாவும் அன்னலட்சுமியும் இன்றைய எபிசோட் அப்டேட் 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Sep 21, 2023, 02:01 PM IST
  • ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அமுதாவும் அன்னலட்சுமியும்.
  • சீரியலில் இன்றைய எபிசோடில் அமுதா பிராது கொடுத்ததாக தண்டோரா போட பின்னர் பஞ்சாயத்து கூடுகிறது.
  • அமுதா குழந்தையின் அம்மா வீட்டிற்கு மீண்டும் செல்கிறாள்.
அமுதாவும் அன்னலட்சுமியும்: அமுதாவுக்கு அதிர்ச்சி கொடுத்த குழந்தையின் அம்மா.. வடிவேலு செய்த சதி title=

அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியல் அப்டேட்: தொலைக்காட்சி சீரியல்கள் நம் பலரது வாழ்வோடு பின்னிப்பிணைந்து இருக்கும் அம்சமாக உள்ளன. தினசரி தொடராக வரும் டிவி சீரியல்களுக்கும், அவற்றில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கும் சினிமா பிரபலங்களையே மிஞ்சும் அளவுக்கு கூட ரசிகர் பட்டாளம் உள்ளது. அப்படி பல ரசிகர்கள் விரும்பி பார்க்கும் சீரியல்களில் ஒன்றுதான் ‘அமுதாவும் அன்னலட்சுமியும்' சீரியல்.

அமுதாவும் அன்னலட்சுமியும்: இன்றைய எபிசோட்

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அமுதாவும் அன்னலட்சுமியும். இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் அமுதா பிராது கொடுத்ததாக தண்டோரா போட பின்னர் பஞ்சாயத்து கூடுகிறது. அன்னலட்சுமி மாயா பஞ்சாயத்தை ஏமாற்றி தங்கள் வீட்டில் இருப்பதாக சொல்கிறாள். 

அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியலின் இன்றைய எபிசோடில், பஞ்சாயத்தார் ஆதாரம் கேக்க, அமுதா குழந்தையின் அம்மாவுடன் வருகிறாள். அமுதா இந்த அம்மா தான் குழந்தையோட அம்மா என சொல்ல, பஞ்சாயத்தார் அந்த பெண்ணிடம் நான் தான் அம்மா என சொல்ல அனைவரும் சந்தோஷம் அடைகின்றனர். மாயா அவங்க தான் அம்மா ஆனா பெத்த அம்மா நான் தான், நான் நர்ஸ் வேலை பார்க்குறதனால குழந்தையை பார்த்துக்க அவங்களை வேலைக்கு வச்சுகிட்டேன் என சொல்ல, பஞ்சாயத்தார் அந்த பெண்ணிடம் மாயா சொல்றது உண்மையா என கேக்க, அந்த பெண் ஆமாம் என சொல்ல, அமுதா, அன்னம், மாணிக்கம், செந்தில் ஷாக் ஆகின்றனர். 

பழனி பஞ்சாயத்துக்கு வர, ப்ளாஷ் கட்டில் பழனி அந்த பெண்ணை மிரட்டி உண்மையை சொன்னால் குழந்தையை கொன்று விடுவதாக சொல்கிறான். பஞ்சாயத்தார் அமுதாவிடம் இன்னொரு தடவை தப்பா பிராது குடுத்தா மாயவுக்கும் செந்திலுக்கும் கல்யாணம் என சொல்ல அமுதா குழந்தையின் அம்மா வீட்டிற்கு மீண்டும் செல்கிறாள். அந்த பெண் அமுதாவிடம் தன் இரு குழந்தைகளையும் கொன்று விடுவதாக மிரட்டியதால் வேறு வழி இல்லாமல் பொய் சொன்னதாக சொல்கிறாள். 

மேலும் படிக்க | ‘மார்க் ஆண்டனி’ வசூல் விவரம்: வெளியான நான்கே நாட்களில் 50 கோடி கலெக்ஷன்

இங்கே அன்னலட்சுமி ஜோசியரை வீட்டுக்கு வர வைத்து அமுதாவுக்கும் செந்திலுக்கும் முதல் இரவு நடத்த நேரம் குறித்து குடுக்குமாறு கேட்க ஜோசியர் இன்றைக்கே நல்ல நாள் என சொல்ல மாணிக்கம் பூக்கள் வைத்து ரூமை ரெடி பண்ணுகிறார். 

அமுதா வீட்டிற்கு வர அன்னலட்சுமி அமுதாவிடம் உனக்கும் செந்திலுக்கும் இன்னைக்க்கு சாந்தி முகூர்த்தம் என சொல்ல. நீ தான் என் மருமக, எனக்கு ரெண்டு பேரப் பிள்ளைகளை பெத்து குடு என சொல்ல அமுதா அத்தை இப்படி பண்ணுனா நாம தோத்து போயிட்டோம்னு அர்த்தம் என சொல்கிறாள். செந்தில் எனக்கு தான் சொந்தம்னு நிரூபிச்ச பிறகு எங்களுக்கு இதை எல்லாம் வச்சிக்க லாம் என சொல்கிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியலை ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

அமுதாவும் அன்னலட்சுமியும்: சீரியலை எங்கு பார்ப்பது

அமுதவும் அன்னலட்சுமியும் சீரியல் 2022 ஆம் ஆண்டு முதல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. இது தவிர, டிஜிட்டல் தளமான ZEE5 -லும் இது ஸ்ட்ரீம் செய்யப்படுகின்றது.

மேலும் படிக்க | ஒரு வழியா தொப்பியை கழட்டிய சிவகார்த்திகேயன்.. புதிய லுக்கில் செம மாஸ்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News