வெள்ளத்தில் மூழ்கிய பிக்பாஸ் வீடு..பிக்பாஸ் நிகழ்ச்சி தொடருமா?

பிரபலமான ரியாலிட்டி ஷோ, பிக் பாஸ் தமிழ் சீசன் 4 அதன் பிரமாண்டமான துவக்கத்திலிருந்து 50 நாட்களுக்கு மேலாக வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது.

Last Updated : Nov 26, 2020, 04:23 PM IST
வெள்ளத்தில் மூழ்கிய பிக்பாஸ் வீடு..பிக்பாஸ் நிகழ்ச்சி தொடருமா? title=

பிரபலமான ரியாலிட்டி ஷோ, பிக் பாஸ் தமிழ் சீசன் 4 அதன் பிரமாண்டமான துவக்கத்திலிருந்து 50 நாட்களுக்கு மேலாக வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் இதுவரை இரண்டு வைல்டு கார்டு என்ட்ரி நடந்து அதில் ஒருதர் எலிமிநெட் செய்யப்பட்டார். 

பிக் பாஸ் (Bigg Boss Tamilபோட்டியில் தற்போது ரியோ ராஜ் (Rio Raj), பாலாஜி முருகதாஸ் (Balaji), ஆஜித், ஜித்தன் ரமேஷ், ஆரி, அனு மோகன், அனிதா சம்பத் (Anitha Sambath), அறந்தாங்கி நிஷா, ஷிவானி, கேப்ரியல்லா, சனம் ஷெட்டி, ரேகா, ரம்யா பாண்டியன், சோம், சம்யுக்தா உள்ளிட்டோர் விளையாடி வருகின்றனர். தற்போது வரை இதில் ரேகா, சுரேஷ் சக்ரவர்த்தி, வேல்முருகன் மற்றும் சுசித்ரா ஆகியோர் வெளியேற்றப்பட்டுள்ளார்கள். மேலும் இந்த வார நாமினேஷன் இல் மொத்தம் 7 போட்டியாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். சோம், பாலாஜி, ஆரி, ஜீத்தன் ரமேஷ், சம்யுக்தா, சனம் ஷெட்டி மற்றும் நிஷா ஆகியார் இந்த வாரம் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர். 

 

ALSO READ | வாயை திறந்தா ஒரே கலீஜ்.....சம்யுக்தா-சனம் தாறுமாறு மோதல்!

இந்நிலையில் தற்போது தமிழகத்தில் நிவர் புயல் தாக்குதலை அடுத்து சென்னையின் அனைத்து பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது. சென்னையின் பல பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. மேலும் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து நேற்று இரவு சுமார் 9 ஆயிரம் கன அடி வினாடிக்கு திறந்துவிடப்பட்டது.செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து ஒரு சில கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள ஈவிபி ஸ்டுடியோவில் தான் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கான செட் போடப்பட்டுள்ளது.

அந்தவகையில் செம்பரம்பாக்கம் ஏரியில் (Chembarambakkam Lake) தண்ணீர் திறந்து விட்டதும் இந்த ஸ்டூடியோ முழுவதுமே வெள்ளத்தால் சூழ்ந்துவிட்டதாகவும், பிக்பாஸ் வீட்டில் கூட தண்ணீர் புகுந்து விட்டதாகவும் இதனால் போட்டியாளர்கள் கடும் அச்சத்துடன் இருந்ததாகவும் கூறப்படுகிறது. மேலும் அவர்கள் அனைவரும் பாதுகாப்பாக பூந்தமல்லியில் உள்ள ஸ்டார் ஹோட்டலில் நேற்று இரவு தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் தற்போது மழை நின்று விட்டதை அடுத்து வெள்ள நீரை வெளியேற்றும் பணி தீவிரமாக நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது. 

இதற்கிடையில் நேற்று ஒளிபரப்ப வேண்டிய பல காட்சிகள் எடிட் செய்யப்பட்டு அவை இன்று ஒளிபரப்ப இருப்பதாகவும் இன்று இரவுக்குள் பிக்பாஸ் போட்டியாளர்கள் அனைவரும் மீண்டும் வீட்டிற்கு செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

ALSO READ | பிக் பாஸ் தமிழ் 4 அப்டேட்: ரியோவை ரவுண்டு கட்டி சண்டை போட்ட சனம்-அனிதா!

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News