தொல்லை செய்யாதீர்கள்... தற்கொலை செய்துகொண்ட நடிகை - பாலிவுட்டில் பரபரப்பு

பாலிவுட் நடிகை அகன்ஷா மோகன் தற்கொலை செய்துகொண்ட விவகாரம் பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Written by - க. விக்ரம் | Last Updated : Oct 1, 2022, 06:04 PM IST
  • அகன்ஷா பாலிவுட் நடிகை ஆவார்
  • தமிழிலும் அவர் நடித்திருக்கிறார்
  • மும்பை ஹோட்டலில் அவர் தற்கொலை செய்துகொண்டார்
 தொல்லை செய்யாதீர்கள்... தற்கொலை செய்துகொண்ட நடிகை - பாலிவுட்டில் பரபரப்பு title=

திரைத்துறையில் இருப்பவர்களுக்கு என்ன கவலை என்று பலர் பேசுவதுண்டு. ஆனால் அவர்களும் சாதாரண வாழ்க்கையைத்தான் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள் என அவர்களுக்கு மட்டுமே தெரியும். அதனால்தான் திரைத்துறையிலும் தற்கொலை நிகழ்கின்றன. குறிப்பாக பாலிவுட்டில் சுஷாந்த் சிங் தற்கொலை பெரும் விவாதத்தை கிளப்பின. ஆனாலும் தற்கொலைகள் நின்றபாடில்லை. தற்போது மீண்டும் ஒரு இளம் நடிகை தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்.

அகன்ஷா மோகன் என்பவர் மாடலிங் துறையில் பணியாற்றிவந்தார். இவர் கடந்த 16ஆம் தேதி ரிலீஸ் ஆன சியா என்ற படத்தில் ஷிபெய்ல் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தமிழிலும் 9 திருடர்கள் என்ற படத்தில் நடித்துள்ள இவர் சில விளம்பரங்களிலும் நடித்துள்ளார்.

இவர் மும்பை அந்தேரியில் ஒரு ஹோட்டலில் தங்கி இருந்த அகன்ஷா மோகன் தனது அறையில் உள்ள மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். ஹோட்டலில் தங்கி இருந்த அகன்ஷா  நேற்று வெகு நேரமாகியும் தனது அறையில் இருந்து வெளியே வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த ஹோட்டல் ஊழியர்கள் இது குறித்து காவல் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். 

மேலும் படிக்க | முதல் நாளே 100 கோடி அருகில் - பொன்னியின் செல்வன் மெகா வசூல்

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த காவல் துறையினர் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்று பார்த்தனர். அங்குள்ள ஒரு அறையில் அகன்ஷா தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதனை தொடர்ந்து அவரது உடலை மீட்ட காவல் துறையினர் உடற்கூராய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனையடுத்து அந்த இடத்தை சோதனையிட்ட காவல் துறையினருக்கு கடிதம் ஒன்று சிக்கியது. 

அந்தக் கடிதத்தில், “என்னை மன்னிக்கவும். நான் மகிழ்ச்சியாக இல்லை. எனக்கு அமைதி மட்டுமே தேவை.எனது மரணத்திற்கு யாரும் காரணமல்ல, யாரையும் தொல்லை செய்ய வேண்டாம்” என எழுதப்பட்டிருந்தது. இளம் நடிகை தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க | ஆடம்பரமான விருந்துதான் ஆனாலும்... பொன்னியின் செல்வனுக்கு முதல் நெகட்டிவ் ரிவ்யூ கொடுத்த நடிகை

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEata

Trending News