கார்த்திகை தீபம்: தீபாவின் பையில் வைர நெக்லஸ், கார்த்திக் சொன்ன வார்த்தை.. பரமேஸ்வரி பாட்டி எடுத்த முடிவு

Karthigai Deepam TV Serial Online: தீபாவின் பையில் வைர நெக்லஸ், கார்த்திக் சொன்ன வார்த்தை.. பரமேஸ்வரி பாட்டி எடுத்த முடிவு - கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்   

Written by - Vijaya Lakshmi | Last Updated : Nov 3, 2023, 05:04 PM IST
  • கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்.
  • கார்த்திக் சொன்ன வார்த்தை.. பரமேஸ்வரி பாட்டி எடுத்த முடிவு
  • தீபாவின் பையில் வைர நெக்லஸ்.
கார்த்திகை தீபம்: தீபாவின் பையில் வைர நெக்லஸ், கார்த்திக் சொன்ன வார்த்தை.. பரமேஸ்வரி பாட்டி எடுத்த முடிவு title=

தொலைக்காட்சி சீரியல்கள் நம் பலரது வாழ்வோடு பின்னிப்பிணைந்து இருக்கும் அம்சமாக உள்ளன. தினசரி தொடராக வரும் டிவி சீரியல்களுக்கும், அவற்றில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கும் சினிமா பிரபலங்களையே மிஞ்சும் அளவுக்கு கூட ரசிகர் பட்டாளம் உள்ளது. அப்படி பல ரசிகர்கள் விரும்பி பார்க்கும் சீரியல்களில் ஒன்று தான் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தின்தோறும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

தீபாவின் பையில் வைர நெக்லஸ், கார்த்திக் சொன்ன வார்த்தை.. பரமேஸ்வரி பாட்டி எடுத்த முடிவு - கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட் 

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். வாரத்தின் ஏழு நாட்களும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலில் இன்று நடக்கப்போவது என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

அதாவது நேற்றைய எபிசோடில் மலர் மற்றும் ஐஸ்வர்யா என இருவரும் சேர்ந்து திட்டம் போட்டு நெக்லஸை திருடி தீபாவின் பேக்கில் வைத்து நெக்லஸை காணவில்லை என கிளப்பி விட்ட நிலையில் இன்று தீபாவின் பேக்கில் நெக்லஸ் இருப்பதை பார்த்து அனைவரும் அதிர்ச்சி அடைகிறார்கள். 

மேலும் படிக்க | பிக்பாஸ் 7: எவிக்ட் ஆன யுகேந்திரன்-வினுஷாவிற்கு கிடைத்த சம்பளம் எவ்வளவு தெரியுமா?

இருந்தாலும் கார்த்திக் தீபாவை விட்டுக் கொடுக்காமல் இதை தீபா எடுத்து இருக்க மாட்டாங்க யார் எடுத்தாங்க என்பதை நான் வெளிப்படையாக சொல்றதுனால இந்த குடும்பத்துக்கு தான் அவமானம் அதனால நான் அதை சொல்ல விரும்பல என்று சொல்கிறான். 

பரமேஸ்வரி பாட்டியும் அந்த நெக்லஸ தீபாவுக்கு கொடுக்கணும்னு தான் இருந்தேன் அதுவே தீபா கிட்ட போய் சேர்ந்துடுச்சு ஒன்னும் பிரச்சனை இல்ல என்று சொல்லிவிடுகிறார். பிறகு தீபா இது நெக்லஸ் அபிராமி அம்மா கையால எனக்கு கொடுக்கணும் என்று ஆசையை சொல்ல அபிராமி வேறு வழி இல்லாமல் அதை தீபாவுக்கு போட்டு விடுகிறாள். 

பிறகு பெட் ரூமுக்கு வந்த கார்த்திக் மற்றும் தீபா என இருவரும் நெக்லஸ் குறித்து பேச அபிராமி அந்த வழியாக வருகிறாள்.இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

மேலும் படிக்க | பிக்பாஸ் நிகழ்ச்சியில் அதிகம் சம்பளம் வாங்கும் ‘அந்த’ பாேட்டியாளர் யார்?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News