மீனாட்சி பொண்ணுங்க: ரங்கநாயகி செய்த சதி.. பூஜாவை திணற விட்ட ஷக்தி, நடந்தது என்ன?

Meenakshi Ponnunga TV Serial Online: ரங்கநாயகி செய்த சதி.. பூஜாவை திணற விட்ட ஷக்தி, நடந்தது என்ன? மீனாட்சி பொண்ணுங்க இன்றைய எபிசோட் அப்டேட் 

Written by - Vijaya Lakshmi | Last Updated : Dec 19, 2023, 02:53 PM IST
  • மீனாட்சி பொண்ணுங்க இன்றைய எபிசோட் அப்டேட்
  • திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது.
  • இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
மீனாட்சி பொண்ணுங்க: ரங்கநாயகி செய்த சதி.. பூஜாவை திணற விட்ட ஷக்தி, நடந்தது என்ன? title=

மீனாட்சி பொண்ணுங்க இன்றைய எபிசோட் அப்டேட் : ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் மீனாட்சி பொண்ணுங்க. தமிழ் தொலைக்காட்சிகளின் பிரபலமான தொடர்களுள் மிகவும் பிரபலமான ஒன்றாக விளங்குவது, மீனாட்சி பொண்ணுங்க. ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் இந்த தொடருக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. ரசிகர்களின் மனங்களில் மிகவும் நல்ல இடத்தை இத்தொடர் பிடித்துள்ளது. மங்கையர் மட்டுமே நிறைந்த ஒரு குடும்பத்தையும் அவர்களின் வாழ்க்கையை சுற்றி நடக்கும் கதைதான் இந்த தொடரின் மையக்கருவாகும். தமிழ் ரசிகர்கள் பலரை கவர்ந்துள்ள மீனாட்சி பொண்ணுங்க சீரியலில் சின்னத்திரை பிரபலங்களான மோக்‌ஷிதா பாய், ஸ்ரீரஞ்சினி ஆகியோர் நடித்துள்ளனர். இத்தொடர், தற்போது பல எதிர்பாராத விறுவிறுப்பான ட்விஸ்டுகளுடன் ஒளிபரப்பாகி வருகிறது. பலரது மனதை கவர்ந்துள்ள இந்த தொடரில் இன்று பல சுவாரஸ்யமான விஷயங்கள் நடக்க உள்ளன. அவை என்னென்ன தெரியுமா? தொடர்ந்து படியுங்கள். 

மீனாட்சி பொண்ணுங்க இன்றைய எபிசோட்:
தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் மீனாட்சி பொண்ணுங்க, இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் ரங்கநாயகி யமுனா வாழ்க்கையில் விளையாடி சக்தியை பழிவாங்க பிளான் போட்ட நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

மேலும் படிக்க | வெறும் இரண்டே படம்.. கோடிகளில் சம்பளத்தை வாங்கும் நடிகை மிருணாள்

அதாவது, கார்த்திக் நடந்து வந்து கொண்டிருக்க, பிரியா என்னும் ஒரு பெண் அவன் மீது தெரியாமல் ஸ்கூட்டியை மோதி விடுகிறாள். வண்டி ஸ்டார்ட் ஆகவில்லை என சொல்ல கார்த்திக் அவளுக்கு உதவி செய்கிறான். அப்போது யமுனாவிடம் இருந்து போன் வர, பிரியா போனை அட்டெண்ட் செய்து பேசிவிட்டு, கார்த்திக் பிஸியாக இருக்கிறார் என்று சொல்லி கட் செய்து விடுகிறாள். கார்த்திக் போனில் வேறு ஒரு பெண் குரலை கேட்கும் யமுனா அதிர்ச்சியாகிறாள். ரங்கநாயகி பிரியாவிடம், நான் சொல்வது போல் அனைத்தும் நடக்க வேண்டும் என்று சொல்ல, பிரியாவும் சம்மதிக்கிறாள்.

இதனை தொடர்ந்து சக்தி பூஜாவை எரிச்சலாக்க அவளது அறையில் மூன்று சித்தாள்களைத் தங்க வைக்கிறாள். அவர்கள் இரவெல்லாம் பாட்டுப்பாடி பூஜாவையும், சரளாவையும் தூங்கவிடாமல் பாடாய் படுத்துகிறார்கள். மறுநாள் காலையில் பூஜா ரங்கநாயகியிடம் இதைச் சொல்கிறாள். ஆனால் அப்படி ஒன்று நடக்கவே இல்லை என்று சக்தி சொல்கிறாள். பூஜா இதை நிரூபிப்பதற்காக தன் அறைக்கு ரங்கநாயகியை அழைத்துச் செல்கிறாள். அங்கே சித்தாள்கள் தங்கியதற்கான தடயமே அங்கே இல்லை. இதனால் பூஜா அதிர்ச்சி அடைகிறாள். 

இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய மீனாட்சி பொண்ணுங்க சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

மேலும் படிக்க | சரிகமபா Li'l Champs டைட்டில் ஜெயித்த கில்மிஷாவின் பரிசு தொகை இவ்வளவா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News