அண்ணா சீரியல்: ஷண்முகத்தால் சக்ஸஸான வைகுண்டம் பிளான்.. பரணி எடுத்த முடிவு

ஷண்முகத்தால் சக்ஸஸான வைகுண்டம் பிளான்.. பரணி எடுத்த முடிவு - அண்ணா சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட் 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Dec 19, 2023, 12:15 PM IST
  • ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா.
  • மந்திரவாதி ஒருவரை சந்திக்க கிளம்பி செல்கிறார் வைகுண்டம்.
  • அண்ணா சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்.
அண்ணா சீரியல்: ஷண்முகத்தால் சக்ஸஸான வைகுண்டம் பிளான்.. பரணி எடுத்த முடிவு title=

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் முத்துப்பாண்டி சண்முகத்தை தர்மகத்தா தேர்தலில் நிற்க கூடாது என்று மிரட்ட பரணி அவன் நின்னு ஜெயிப்பான் என்று சவால் விட்ட நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

அதாவது, வைகுண்டம் ஷண்முகத்தையும் பரணியையும் எப்படியாவது சேர்த்து வைக்க வேண்டும், அவர்கள் பிரிந்து விட கூடாது என்பதற்காக மந்திரவாதி ஒருவரை சந்திக்க கிளம்பி செல்கிறார். அப்போது அந்த மந்திரவாதி நீ எதுக்காக வந்திருக்கேன்னு என்று தெரியும், உன் பிள்ளையும் மருமகளையும் சேர்த்து வைக்கணும் அதானே என்று கேட்க வைகுண்டம் ஆச்சரியப்பட்டு நிற்கிறார். 

நீ நினைக்கிறது கண்டிப்பாக நடக்கும் என்று சொல்லி கயிறை கொடுத்து நான்கு நாளைக்குள் இதனை அவங்க ரெண்டு பேர் கையிலையும் கட்டிடு என்று சொல்லி அனுப்புகிறார். அதை கொண்டு வந்து மகள்களிடம் கொடுத்து இதை எப்படியாவது பரணி கையில் கட்டிடுங்க, அப்போ தான் உங்க அண்ணனும் அவளும் பிரியாமல் இருப்பாங்க என்று சொல்ல ரத்னா பரணிக்கு இது மேல எல்லாம் நம்பிக்கை கிடையாது, அவ கட்ட மாட்டாள் என்று சொல்ல வைகுண்டம் எப்படியாவது கட்ட வைங்க என்று சொல்ல தங்கைகள் ஓகே சொல்கின்றனர்.

மேலும் படிக்க | ரஜினியை மிஞ்சிய கமல் படம்! ரீ-ரிலீஸில் அதிக வசூல் குவித்த ஆளவந்தான்!

பிறகு பரணியிடம் சாமி கயிறு என்று கட்டி கொள்ள சொல்ல பரணி அதெல்லாம் எனக்கு நம்பிக்கை இல்லை, கட்ட மாட்டேன் என்று சொல்ல இங்க பாரு எல்லாரும் கட்டி இருக்கோம் என்று நான்கு தங்கைகளும் கையை காட்ட பரணி சரி இப்போ கட்டிக்கிட்டு நைட் கழட்டி வச்சிடலாம் என்று முடிவெடுத்து கட்டி கொள்ள எல்லாரும் சந்தோசப்படுகின்றனர். 

நைட் எல்லாரும் ஒன்றாக உட்கார்ந்து சாப்பிடும் போது ஷண்முகம் பரணி கையில் இருக்கும் கயிறை பார்த்து விட்டு உனக்கு இது நல்லாவே இல்ல கழட்டி விடு என்று சொல்ல பரணி நானே நைட் கழட்டி விடலாம் என்று தான் இருந்தேன், நான் நீ இப்படி சொன்ன பிறகு எப்பவும் இந்த கயிறு என் கையில் தான் இருக்கும் என பதில் கொடுக்க வைகுண்டம் சந்தோசப்படுகிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

மேலும் படிக்க | Best Actress 2023: த்ரிஷா to சமந்தா-2023ஆம் ஆண்டின் சிறந்த நடிகை யார்?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News