நினைத்தேன் வந்தாய் அப்டேட்: மனோகரியுடன் கைதான எழில்.. கல்யாண விஷயத்தில் எடுத்த அதிர்ச்சி முடிவு

Ninaithen Vandhai Today's Episode Update: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் நினைத்தேன் வந்தாய்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jun 25, 2024, 11:31 AM IST
  • நினைத்தேன் வந்தாய் : இன்றைய எபிசோட்
  • கண் கலங்கும் மனோகரி.
  • கண்ணீர் விட்டு நாடகம் போடும் மனோகரி.
நினைத்தேன் வந்தாய் அப்டேட்: மனோகரியுடன் கைதான எழில்.. கல்யாண விஷயத்தில் எடுத்த அதிர்ச்சி முடிவு title=

தொலைக்காட்சி சீரியல்கள் நம் பலரது வாழ்வோடு பின்னிப்பிணைந்து இருக்கும் அம்சமாக உள்ளன. தினசரி தொடராக வரும் டிவி சீரியல்களுக்கும், அவற்றில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கும் சினிமா பிரபலங்களையே மிஞ்சும் அளவுக்கு கூட ரசிகர் பட்டாளம் உள்ளது. அப்படி பல ரசிகர்கள் விரும்பி பார்க்கும் சீரியல்களில் ஒன்றுதான் ‘நினைத்தேன் வந்தாய்’ சீரியல்.

நினைத்தேன் வந்தாய் : இன்றைய எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் நினைத்தேன் வந்தாய். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் எழில் மனோகரியை பார்க்க ஹோட்டலுக்கு வந்திருக்க போலீசும் ஹோட்டலுக்குள் நுழைந்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

கண் கலங்கும் மனோகரி

அதாவது, மனோகரி எழிலை கட்டி பிடித்தபடி கண் கலங்கி கொண்டிருக்க எழில் ஆறுதல் சொல்லி கொண்டிருக்க ரூமுக்குள் நுழைந்த போலீஸ் இவர்களை தவறான கேஸில் கைது செய்து அழைத்து செல்கின்றனர். மீடியாக்களும் மொத்தமாக அங்கு கூடி விட இவர்கள் குறித்த செய்தி தீயாக பரவுகிறது. 

கண்ணீர் விட்டு நாடகம் போடும் மனோகரி

பிறகு போலீஸ் ஸ்டேஷன் சென்ற இவர்கள் பேசி புரிய வைத்து விட்டு வீட்டிற்கு திரும்பி வருகின்றனர், அப்போது கனகவல்லி என்னாச்சு என்று கேட்க மனோகரி எல்லாம் என்னால் தான், என்னை மன்னிச்சிருங்க எழில் என்று கண்ணீர் விட்டு நாடகம் போடுகிறாள். இனிமே நான் இங்க இருக்க மாட்டேன் என்று டிராமா போட்டு மேலே கிளம்ப எழில் மனோகரி நானே உன்னை கல்யாணம் பண்ணிக்கிறேன் என்று வாக்கு கொடுக்க அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். 

இதனை தொடர்ந்து கனகவல்லி எழில் நீ என்னப்ப சொல்ற என்று கேள்வி கேட்க ஆமாம் மா, நான் யோசித்து தான் சொல்றேன் என்று பதில் சொல்கிறான், இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய நினைத்தேன் வந்தாய் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

மேலும் படிக்க | கோட் பாடல்: பவதாரிணியின் ஏஐ குரலில் பாடல் உருவானது எப்படி?

காணத்தவறாதீர்கள்

இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய நினைத்தேன் வந்தாய் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

நினைத்தேன் வந்தாய்: சீரியலை எங்கு பார்ப்பது?

நினைத்தேன் வந்தாய் சீரியல் 2024 ஆம் ஆண்டு முதல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. இது தவிர, டிஜிட்டல் தளமான ZEE5 -லும் இது ஸ்ட்ரீம் செய்யப்படுகின்றது. 

மேலும் படிக்க | ‘கோட்’ படத்தின் பட்ஜெட் மட்டும் இத்தனை கோடியா? வாயை பிளக்க வைக்கும் தொகை..

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News