மாதவன் தலைசிறந்த இயக்குநர் - ராக்கெட்ரிக்கு சூப்பர் ஸ்டார் பாராட்டு

ராக்கெட்ரி படம் மூலம் மாதவன் தலைசிறந்த இயக்குநர் என்பதை நிரூபித்துவிட்டாரென்று ரஜினிகாந்த் பாராட்டு தெரிவித்துள்ளார்.

Written by - க. விக்ரம் | Last Updated : Jul 4, 2022, 12:48 PM IST
  • ராக்கெட்ரி படம் சில நாள்களுக்கு முன்பு வெளியானது
  • படத்தை இயக்கி நம்பி நாராயணனாக மாதவன் நடித்திருந்தார்
மாதவன் தலைசிறந்த இயக்குநர் - ராக்கெட்ரிக்கு சூப்பர் ஸ்டார் பாராட்டு title=

நடிகர் மாதவன் இயக்குநர் அவதாரம் எடுத்திருக்கும் படம் ராக்கெட்ரி. நாட்டின் ரகசியங்களை பாகிஸ்தானுக்கு விற்றுவிட்டதாக போலி புகார் அளிக்கப்பட்டும் சிறையில் அடைக்கப்பட்ட நம்பி நாராயணனின் வாழ்க்கையை தழுவி படம் எடுக்கப்பட்டிருக்கிறது.

நம்பி நாரயணனாக மாதவன், அவரது மனைவியாக சிம்ரன் நடித்திருக்கும் இப்படத்தில் சூர்யா கெஸ்ட் ரோலில் நடித்திருக்கிறார். சாம் சி.எஸ். இசையமைத்திருக்கிறார்.

மேலும் படிக்க | அடேங்கப்பா ஒரு எபிசோடுக்கு மாகாபா மற்றும் பிரியங்கா வாங்கும் சம்பளம் இவ்வளவா

அதேபோல் ஹிந்தி பதிப்பில் ஷாருக்கான் கெஸ்ட் ரோலில் நடித்திருக்கிறார். இருவரும் சம்பளமே வாங்காமல் நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Maddy

மிகப்பெரும் எதிர்பார்ப்போடு பான் இந்தியா படமாக வெளியான ராக்கெட்ரி ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை பெற்றுவருகிறது. அதேசமயம், ராக்கெட் பற்றி மாதவன் எந்த வித சமரசமும் செய்யாமல் எடுத்திருக்கிறார். ஆனால் ராக்கெட் தொழில்நுட்பத்தையும், அறிவியலையும் இன்னமும் ரசிகர்களுக்கு புரியும்படி எடுத்திருக்கலாம் என்றும் பேச்சு எழுந்திருக்கிறது.

அதுமட்டுமின்றி, நம்பி நாராயணன் நடத்திய சட்டப்போராட்டம் பற்றி படத்தில் காட்சிகள் இல்லாததும் படத்திற்கு மைனஸ் என்று விமர்சகர்கள் கூறுகின்றனர். இயக்கத்தில் மாதவனிடம் சிலை மைனஸ்கள் இருந்தாலும் நடிப்பில் எந்தவித குறையும் இல்லை என பலரும் பாராட்டிவருகின்றனர்.

 

அந்தவகையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ராக்கெட்ரி படத்துக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “ராக்கெட்ரி திரைப்படம் - அனைவரும் கட்டாயம் பார்க்க வேண்டும் - குறிப்பாக இளைஞர்கள்.

Nambi

நம் நாட்டின் விண்வெளி ஆராய்ச்சி வளர்ச்சிக்காக பல துன்பங்களுக்கு உள்ளாகி, தியாகங்கள் செய்து அரும்பாடுபட்ட பத்ம பூஷன் நம்பி நாராயணின் வரலாறை மிகத் தத்ரூபமாக நடித்து படமாக்கி, இயக்குநராக தனது முதல் படத்திலேயே தலை சிறந்த இயக்குநர்களுக்கு இணையாக தானும் என்பதை நிரூபித்திருக்கிறார் மாதவன். இப்படி ஒரு திரைப்படத்தைக் கொடுத்ததற்காக அவருக்கு என்னுடைய நன்றிகளும், பாராட்டுகளும்” என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் படிக்க | சுப்ரமணியபுரம் - சுயநலங்களால் ரத்தத்தில் நனைந்த பூமி

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News