ஒரு தமிழரை திருமணம் செய்து, தமிழ்நாட்டின் மருமகளாக வேண்டும் என ஆசை: ரஷ்மிகா மந்தனா

தான் ஒரு தமிழரை திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுவதாகவும், தமிழ்நாட்டின் மருமகளாக விரும்புவதாகவும் நேஷனல் கிரஷ் ரஷ்மிகா மந்தனா கூறியுள்ளார். 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : May 17, 2021, 04:33 PM IST
  • ரஷ்மிகா மந்தனாவின் கூற்றால் உல்லாசத்தில் தமிழ் ரசிகர்கள்.
  • நான் ஒரு தமிழரை மணக்க விரும்புகிறேன்-ரஷ்மிகா.
  • நான் தமிழ்நாட்டின் மருமகளாக ஆசைப்படுகிறேன்-ரஷ்மிகா.
ஒரு தமிழரை திருமணம் செய்து, தமிழ்நாட்டின் மருமகளாக வேண்டும் என ஆசை: ரஷ்மிகா மந்தனா title=

'நேஷனல் க்ரஷ்' அதாவது நாட்டில் பலரது கனவுக்கன்னியாக, பிடித்தமான நடிகையாக இருக்கும் ரஷ்மிகா மந்தனா, குறுகிய காலத்தில், பலரது அன்பை சம்பாதித்து விட்டார். கன்னட திரைப்படமான கிரிக் பார்ட்டி மூலம் 2016 ஆம் ஆண்டில் அறிமுகமான இவர் தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். 

ரஷ்மிகா சமீபத்தில் கார்த்தி நடித்த சுல்தான் (Sultan) படம் மூலம் தமிழில் அறிமுகமானார். இப்படத்தில் ரஷ்மிகா மந்தநா ஒரு கிராமத்து பெண் வேடத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பில், ரஷ்மிகா தமிழ்நாட்டின் கலாச்சாரத்தால் ஈர்க்கப்பட்டாக கூறப்படுகிறது. அது மட்டுமல்லாமல், அவர் ஒரு தமிழரை திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுவதாகவும் தற்போது கூறியுள்ளார். ரஷ்மிகா மந்தனாவின் இந்த கூற்றால் தமிழக ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

"நான் உண்மையில் தமிழக கலாச்சாரம், குறிப்பாக தமிழகத்தின் உணவால் மிகவும் ஈர்க்கப்பட்டேன். நான் தமிழ் உணவை மிகவும் நேசிக்கிறேன். மிகவும் சுவையான உணவு அது. நான் ஒரு தமிழரை மணந்து தமிழ்நாட்டின் மருமகளாக விரும்புகிறேன்" என்று ரஷ்மிகா மந்தனா (Rashmika Mandanna) அண்மையில் ஊடகங்களுடனான ஒரு சந்திப்பில் கூறினார். ஒரு தமிழரை மணக்க தான் விரும்புவதாகவும் அவர் இந்த சந்திப்பில் வெளிப்படையாகக் கூறினார். 

ALSO READ: Actor karthi கார்த்தி நடிப்பில் வெளியாகவுள்ள சுல்தான் திரைப்பட டிரெய்லர் வெளியாகி வைரல்

ரஷ்மிகா மந்தனாவின் சமீபத்திய இந்த கருத்துகள் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளன. 25 வயதான ரஷ்மிகா தற்போது முன்னணியில் உள்ள மிக பிரபலமான நடிகையாக உள்ளார். முன்னதாக, டியர் காம்ரேட் படத்தில் அவருடன் நடித்த விஜய் தேவரகொண்டாவுக்கும் (Vijay Devarakonda) அவருக்கும் இடையில் காதல் இருப்பதாக பல வதந்திகல் பரவ்ன. 

தனது இன்ஸ்டாகிராம் லைவ் அமர்வின் போது, ​​ரஷ்மிகா மந்தனா தனக்கு கிடைக்கும் அன்பிற்கும் ஆதரவுக்கும் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தார். "ஒவ்வொரு நாளும் உங்கள் அன்புதான் என்னைத் தொடர்ந்து வேலை செய்ய வைக்கிறது. உங்களது அன்பிற்கு நன்றி. பல நாட்களாக என்னால் உங்களையெல்லாம் சந்திக்க முடியவில்லை என நான் அறிவேன். தொடர்ச்சியாக நான் வேலை செய்து கொண்டிருப்பதால் என்னால், உங்களிடம் தொடர்ந்து தொடர்பில் இருக்க முடிவதில்லை. எனினும், வேலை பளு குறைந்து, எளிமையானவுடன் உங்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பேன்" என்று விளக்கமளித்தார் கீத கோவிந்தம் புகழ் நடிகை ரஷ்மிகா மந்தனா.

ALSO READ: வெளியானது சுல்தான் படத்தின் டீஸர்... எதிரிகளை அடித்து நொறுக்கும் கார்த்தி..!!!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News