மீண்டும் ஒரே படத்தில் இணையும் நயன்தாரா மற்றும் சமந்தா?

நயன்தாரா மற்றும் சமந்தா இருவரும் இணைந்து நடித்த 'காத்துவாக்குல ரெண்டு காதல்' திரைப்படம் சமீபத்தில் வெளியானது.  

Written by - RK Spark | Last Updated : Jun 9, 2022, 11:47 AM IST
  • காத்துவாக்குல ரெண்டு காதல் படம் சமீபத்தில் வெளியானது.
  • நயன்தாரா தற்போது ஷாருக்கான் படத்தில் நடித்து வருகிறார்.
  • அடுத்ததாக மலையாள படத்தில் நடிக்க உள்ளார்.
மீண்டும் ஒரே படத்தில் இணையும் நயன்தாரா மற்றும் சமந்தா? title=

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளான நயன்தாரா, சமந்தா மற்றும் வித்யாபாலன் ஆகியோர் மலையாள திரைப்படத்தில் ஒன்றாக நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.  இந்த மூன்று நடிகைகளும் ஒன்றாகும் இணையும் படத்தை ஷாஜி கைலாஷ் இயங்குவதாகவும் கூறப்படுகிறது.  இருப்பினும் இவர்கள் நடிப்பது குறித்த எவ்வித அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.  இந்த படத்தின் தலைப்பு 'பிங்க்' போலீஸ் என்று வைக்க இருப்பதாகவும், இதுகுறித்து இந்த மூன்று நடிகைகளுடன் படக்குழு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும் படிக்க | நயன்-விக்னேஷ் ஜோடி! களைகட்டும் கல்யாண கொண்டாட்டம்!

நயன்தாரா, வித்யாபாலன் மற்றும் சமந்தா ஆகிய மூன்று பேருக்கும் தனித்தனியே ரசிகர்கள் பட்டாளம் உள்ளது, தற்போது வெளியாகி உள்ள செய்திகள் உண்மையாக இருக்கும்பட்சத்தில் இவர்கள் ஒன்றிணைந்து நடிக்கும் படம் நல்ல வரவேற்பை என்று எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியான 'காத்துவாக்குல ரெண்டு காதல்' படத்தில் நயன்தாரா மற்றும் சமந்தா இருவரும் இணைந்து நடித்து இருந்தனர்.  இந்த படத்தில் இருவரின் நடிப்பும் நல்ல வரவேற்பை பெற்றதோடு, படமும் வெற்றிபெற்றது.  இந்த திட்டத்தில் வித்யாபாலன் நடிக்க ஒப்புக்கொண்டால் மலையாளத்தில் அவருக்கு இது இரண்டாவது படமாக அமையும்.  ஏற்கனவே 2011ல் அவர் மலையாளத்தில் சந்தோஷ் சிவன் இயக்கத்தில் வெளியான 'உறுமி' படத்தில் நடித்திருந்தார்.

இந்த படத்திற்கான கதையை இந்துகோபன் வடிவமைத்து வருவதாகவும், படம் உருவாக்குவதற்கான பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.  இயக்குனர் ஷாஜி கைலாஷின் தற்போதைய பணிகளை பொறுத்தவரையிலும் ப்ரித்திவிராஜை வைத்து 'கடுவா' என்கிற படத்தை இயக்கிவருகிறார். அடுத்ததாக மோகன்லாலுடன் இணைந்து 'அலோன்' என்கிற படத்தின் பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார்.  நயன்தாராவை பொறுத்தவரை அட்லீ இயக்கும் 'ஜவான்' படத்தில் ஷாரூக்கானுடன் ஜோடியாக நடிப்பதாக கூறப்படுகிறது, அதோடு இன்றைய தினம் அவரது நீண்ட நாள் காதலனான விக்னேஷ் சிவனை கரம் பிடித்துள்ளார்.  மேலும் சமந்தா விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து 'குஷி' படத்தில் நடித்து வருகிறார்.

மேலும் படிக்க | 1 லட்சம் பேருக்கு கல்யாண விருந்தளிக்கும் நயன்தாரா-விக்னேஷ் சிவன்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News