ஹிப்ஹாப் ஆதி வீட்டின் மீது கல்வீசி தாக்குதல்; இருவர் கைது, நடந்தது என்ன

குடிபோதையில் ஹிப்ஹாப் தமிழா ஆதி வீட்டின் மீது கல் வீசி தாக்குதல் நடத்திய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Apr 27, 2022, 08:35 AM IST
  • ஹிப்ஹாப் தமிழா ஆதி வீட்டில் தாக்குதல்
  • இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்
  • ஹிப்ஹாப் தமிழா ஆதி வீட்டின் கதவு சேதம்
ஹிப்ஹாப் ஆதி வீட்டின் மீது கல்வீசி தாக்குதல்; இருவர் கைது, நடந்தது என்ன title=

இசையமைப்பாளர், பாடகர், நடிகர், பாடலாசிரியர் என பன்முகத் திறமைகளை கொண்டவர் ஹிப்ஹாப் ஆதி. துவக்கத்தில் இசையமைப்பாளராக தனது திரைப்பயணத்தை துவங்கிய இவர் தற்போது நடிகராகவும் கோலிவுட்டில் வலம்வந்துக் கொண்டிருக்கிறார். தயாரிப்பாளராகவும் மாறி தனது படங்களை தயாரித்தும் வருகிறார். மற்ற தயாரிப்புகளிலும் நடித்து வருகிறார்.

கடந்த 2012 ஆம் ஆண்டில் வெளிவந்த ஹிப்ஹாப் தமிழாவின் 'ஹிப்ஹாப் தமிழன்' ஆல்பம் மூலம் தமிழுலகத்திற்கு 'ஹிப்ஹாப்' எனும் புதிய வகை இசையை அறிமுகப்படுத்திய பெருமை திங்க் மியூசிக்கிற்கு உண்டு. இந்தியாவின் முதல் தமிழ் ஹிப்ஹாப் ஆல்பம் அதுதான். இதையடுத்து ஹிப்ஹாப் என்பது ஆதியின் அடையாளமாக மாறியது. இந்த ஆல்பத்தின் மூலம் பிரபலமான ஆதி, தொடர்ந்து சுந்தர் சியின் ஆம்பள இசைமைத்துள்ள அவர், மீசைய முறுக்கு, நட்பே துணை, நான் சிரித்தால், அன்பறிவு உள்ளிட்ட திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

மேலும் படிக்க | Meera Mithun Case: மீரா மிதுன் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை

Hip-Hop Tamizha's next film to be a black comedy, script work underway

இந்நிலையில் சென்னை கிழக்கு கடற்கரை சாலை, பனையூர் சீ கிளிப் அவென்யூ 5-வது டிரைவ் தெருவில் வசித்து வருகிறார் ஹிப்ஹாப் தமிழா ஆதி. அதன்படி இவரது வீட்டின் கதவில் மர்ம நபர்கள் சிலர் குடிபோதையில் கற்களை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் ஹிப்பாப் தமிழா ஆதி வீட்டின் கதவு சேதமானது. எதிர் வீட்டில் வசிப்பவர்கள் இதனை கண்டு காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தெரிவித்துள்ளனர். போலீசாரை கணடதும் மர்ம நபர்கள் காரை எடுத்துக் கொண்டு தப்பிச் சென்றனர். 

பின்னர் போலீசார் நிகழ்விடத்திற்கு சென்று சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது அங்கு வந்த காரின் பதிவெண்ணை கண்டுபிடித்தனர். அதை வைத்து காரின் உரிமையாளரான அஜய் வாண்டையாரின் வீட்டிற்கு சென்று போலீசார் விசாரித்தனர்.

இந்த விசாரணையில் அவர்கள் அஜய் வாண்டையாரின் ஆக்டிங் டிரைவர் என்பது தெரியவந்தது. பின்னர் வடபழனியை சேர்ந்த பிரேம்குமார் (24), மதுரையை சேர்ந்த அர்ஜீன் (24), ஆகிய இருவரையும் கைது செய்த கானத்தூர் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். 

மேலும் படிக்க | Meera Mithun Arrest Latest News: ஜாமீன் கேட்டு கதறும் மீரா மிதுன்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News