ஒரு படத்தில் 3 ஜாம்பவான்கள்... ஒட்டுமொத்த திரையுலகிலும் பலத்த எதிர்பார்ப்பு - அப்டேட் இதோ!

பாகுபலி, ஆர்ஆர்ஆர் உள்ளிட்ட படங்களின் கதாசிரியர் விஜயேந்திர பிரசாத், கிச்சா சுதீப் உடன் இணையும் படத்தின் அப்டேட் வெளியாகி உள்ளது. 

Written by - Sudharsan G | Last Updated : Sep 3, 2023, 10:40 AM IST
  • இத்திரைப்படம் பல கோடி ரூபாய் மதிப்பில் தயாராக உள்ளது.
  • நேற்று கிச்சா சுதீப் அவரது பிறந்தநாளை கொண்டாடினார்.
  • நேற்றைய தினம் இத்திரைப்படம் குறித்த அப்டேட் வெளியானது.
ஒரு படத்தில் 3 ஜாம்பவான்கள்... ஒட்டுமொத்த திரையுலகிலும் பலத்த எதிர்பார்ப்பு - அப்டேட் இதோ! title=

மிஸ்டர் பெர்ஃபெக்ட், ஸ்டைலிஷ் ஹீரோ மற்றும் பான் இந்திய நட்சத்திரம் என்றழைக்கப்படும் கன்னட நடிகரான கிச்சா சுதீப் அவரின் பிறந்தநாளை நேற்று (செப். 2) கொண்டாடினார். அந்த வகையில், கிச்சா சுதீப்பின் பிறந்தநாளை முன்னிட்டு அவரின் ரசிகர்களுக்கு மட்டுமின்றி, இந்திய திரையுலக ரசிகர்களுக்கே ஒரு மிகப்பெரிய அப்டேட் வந்துள்ளது.

திரைக்கதை மேற்பார்வை

மகதீரா (தமிழில் மாவீரன் - ராம்சரண்), பாகுபலி, ஆர்ஆர்ஆர் போன்ற வெற்றிப் படங்களின் கதாசிரியர்,  திரைக்கதை வித்தகர், பான் இந்தியா என்ற கருத்தை முதன் முதலில் உருவாக்கியவராக அறியப்படும் வி. விஜயேந்திர பிரசாத் கிச்சா சுதீப்பின் அடுத்த படத்தின் திரைக்கதையை மேற்பார்வையிடுகிறார். புகழ்பெற்ற கன்னட நிறுவனமான ஆர்.சி.ஸ்டுடியோவின் தயாரிப்பில் பிரமாண்டமாக உருவாகவுள்ள இந்த பான் இந்தியப் படத்தில் நாயகனாக ஸ்டைலீஷ் ஸ்டார் கிச்சா சுதீப் நடிக்கிறார். இப்படத்தினை இயக்குநர்  ஆர்.சந்துரு இயக்க உள்ளார்.

3 ஜாம்பவான்கள்

இந்த மூன்று ஜாம்பவான்களும் இணைந்து உருவாக்கும் இந்தப் படத்திற்காக ஒட்டுமொத்த இந்திய திரையுலக ரசிகர்களிடையே பலத்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இப்படம் இந்த வருடத்தின் மெகா ஹிட் படமாக அமையும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. ஆர்.சி. ஸ்டுடியோஸ் கர்நாடகாவில் ஒரு புகழ்பெற்ற தயாரிப்பு நிறுவனமாக அறியப்படுகிறது. 

மேலும் படிக்க | ரஜினிகாந்த் to லோகேஷ் கனகராஜ்..பட வெற்றிக்காக கார்களை பரிசாக வாங்கிய பிரபலங்கள்..!

டைட்டில் வெளியீடு

இந்நிறுவனத்தின்  தயாரிப்பில், இந்த ஆண்டு 5 பெரிய படங்கள் திரைக்கு வர உள்ளது. அதுமட்டுமின்றி, இயக்குநர் ஆர் சந்துரு இதுவரை பணியாற்றிய படங்கள் மிக ஸ்பெஷலானதாக  இருக்கும். அந்த வகையில்,  இந்தப் படமும் பல சிறப்புகளை கொண்டதாக இருக்கும். கிச்சா சுதீப்பின் பிறந்தநாளை கொண்டாடும் வகையில், ரசிகர்களுக்கு பிரத்யேக விருந்தாக இப்படத்தின் டைட்டிலை வெளியிட ஆர்.சி. ஸ்டுடியோஸ்  நிறுவனம் திட்டமிட்டுள்ளது. 

விஜயேந்திர பிரசாத் திரைக்கதை மேற்பார்வை, கிச்சா சுதீப் நடிப்பு மற்றும் இயக்குநர் ஆர்.சந்துருவின் இயக்கம் என இந்த மூன்று ஜாம்பவான்கள் இணைந்து உருவாக்க உள்ள திரைப்படத்திற்காக ஒட்டு மொத்தத் திரையுலகமும் வெகு ஆவலுடன்  எதிர்பார்த்துக்  காத்திருக்கிறது. திரைக்கதை ஆசிரியர் விஜயேந்திர பிரசாத் 25க்கும் மேற்பட்ட படங்களுக்கு கதை எழுதியுள்ளார், அவை அனைத்துமே வணிக ரீதியாக மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளன. 

மதிப்புமிக்க ஆந்திரா அரசின் நந்தி விருது மற்றும் ஃபிலிம்பேர் விருதுகளை வென்றுள்ளார். ஆர்சி ஸ்டுடியோஸ் இந்தப் படத்தில் பல கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளது. இப்படம் பான் இந்தியா கான்செப்ட்டை உடைத்து, உலகளாவிய திரைப்படத் தரத்தில், இதுவரை இல்லாத வகையில் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகும் இந்திய படமாக இருக்கும். 

இதன் மூலம் உலகளாவிய வகையில் திறமையான மற்றும் வளர்ந்து வரும் இளம் திறமைகளுக்கு  ஆர்சி ஸ்டுடியோஸ் வாய்ப்புகளை வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மூன்று ஜாம்பவான்களும் ஒன்றிணைவது திரைத்துறையின் எதிர்கால வளர்ச்சிக்கு மிகப்பெரிய அளவில் உதவும் என்றும் தெரிகிறது. கிச்சா சுதீப்புடன் இணைந்து ஆர்சி ஸ்டுடியோஸ் நிறுவனம் ஒரு படத்தைத் தயாரிப்பது அவரது பிறந்தநாளில்  உறுதியாகியுள்ளது.

மேலும் படிக்க | ஜெயிலர் படம் ஓடிடியில் வெளியீடு! எந்த தளத்தில் எப்படி பார்க்கலாம்? முழு விவரம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News