ஜானகிக்கு செக்மேட்! சீனு, மாயாவால் வந்த பிரச்சனை..சந்தியா ராகம் அப்டேட்!

Sandhya Ragam Serial Update Today : ஜானகிக்கு ரகுராம் வைத்த செக்மேட்.. சீனு மாயா நெருக்கத்தால் வெடித்த பிரச்சனை - சந்தியா ராகம் இன்றைய எபிசோட் அப்டேட்   

Written by - Yuvashree | Last Updated : May 27, 2024, 03:15 PM IST
  • சந்தியா ராகம் தொடரில் ட்விஸ்ட்
  • ஜானகிக்கு செக்மேட்
  • இன்று நடக்கப்போவது என்ன?
ஜானகிக்கு செக்மேட்! சீனு, மாயாவால் வந்த பிரச்சனை..சந்தியா ராகம் அப்டேட்! title=

Sandhya Ragam Serial Update Today : தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினந்தோறும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சந்தியா ராகம். இந்த சீரியலில் நேற்றைய எபிசோடி‌ல் மாயா சொன்ன விஷயங்களால் ஜானகிக்கு சந்தியா செய்து கொடுத்த சத்தியத்தை காப்பாற்றிய விஷயம் தெரிய வந்தது.  இந்த நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

அதாவது ஜானகி ரகுராமிற்காக சாப்பிடாமல் காத்திருந்து அப்படியே மேஜை மீது தூங்கி விட லேட்டாக வரும் ரகுராம் நீ சாப்பிட்டியா என்று கேட்க ஜானகி நீங்க சாப்பிடாம எப்படி நான் சாப்பிடுவேன் என்று சொல்லி சாப்பாடு பரிமாற போக ரகுராம் அவளை உட்கார வைத்து சாப்பாடு பரிமாறி சாப்பிட வைக்கிறான்.

Sandhyaragam

அடுத்து ரகுராம் ஜானகிக்காக வாங்கி வந்த மல்லி பூவை எடுத்துக் கொடுக்க அதை அவன் ஆசையோடு வாங்க போக ரகுராமே அவளது தலையில் வைத்து விட ஜானகியின் சந்தோஷம் பல மடங்காக பெருகுகிறது. 

Sandhyaragam

அடுத்து மறுநாள் போஸ்ட் ஆபீஸ் இருந்து போன் வந்திருப்பதாக ஜானகியிடம் வந்து சொல்கின்றனர். மேலும் சந்தியா போன் பண்ணி இருப்பதாக சொல்ல ஜானகி நடந்தது அனைத்தையும் மறந்து ஓடிப்போய் போனை எடுக்க பின்னாடியே வந்த ரகுராம் ஜானகி இந்த குடும்பத்தோட கௌரவம் தான். நம்மள அவமானப்படுத்திட்டு போனவள் நமக்கு வேண்டாம் எனக்கு நீ மனைவியா செய்ய வேண்டிய முதல் கடமை சந்தியாவிடம் பேசாமல் இருப்பது தான் என்று சொல்ல ஜானகி போனை கட் செய்துவிட்டு கிளம்பி வருகிறாள். இத்துடன் ஃப்ளாஷ் கட் முடிவடைகிறது.

மேலும் படிக்க | இதயம் சீரியல்: கோபமாக வந்த ரத்னம்.. சாரதாவுக்கு ஷாக், கண் கலங்கும் ஆதி

Sandhyaragam

அதன் பிறகு மாயாவுக்கு கையில் அடிபட்டு சாப்பிடாமல் இருக்க சீனு அவளுக்கு ஊட்டி விட இதைப் பார்த்த சாரு பெரிய சண்டை இழுக்க சிவராமன் சீனுவுக்கு ஆதரவாக பேசுகிறார். அவன் தனத்துக்கு அடிபட்டு இருந்தாலும் இப்படித்தான் ஊட்டி விட்டிருப்பான். எங்க குடும்பத்துல இதெல்லாம் தப்பு கிடையாது நீங்க தேவையில்லாம பிரச்சனை பண்ணாதீங்க என்று சொல்லி லிங்கத்தை ஆப் பண்ண அவன் கோபத்தில் நாளைக்கு நடக்கும் திருவிழாவில் சிவராமனை எதையாவது செய்ய வேண்டும் என்று முடிவு எடுக்கிறான். 
 
இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய சந்தியா ராகம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

மேலும் படிக்க | பஞ்சாயத்தில் பட்டய கிளப்பிய பரணி.. சௌந்தரபாண்டிக்கு வந்த ஆப்பு - அண்ணா சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News