இதயம் சீரியல்: கோபமாக வந்த ரத்னம்.. சாரதாவுக்கு ஷாக், கண் கலங்கும் ஆதி

Idhayam Today's Episode Update: கடந்த சனிக்கிழமை எபிசோடில் சாரதா ரத்னத்திற்கு போன் செய்து பாரதியை பெரிய ஸ்கூலில் சேர்க்கப் போவதாக சொன்னதும் ரத்னம் அது எப்படி நீங்க என்னை கேக்காமல் சேர்க்கலாம் என்று கோபப்பட்டு கிளம்பிய நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

Written by - Vijaya Lakshmi | Last Updated : May 27, 2024, 12:40 PM IST
  • கோபமாக வந்த ரத்னம்.. சாரதாவுக்கு ஷாக்.
  • கண் கலங்கும் ஆதி.
  • இதயம் சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்.
இதயம் சீரியல்: கோபமாக வந்த ரத்னம்.. சாரதாவுக்கு ஷாக், கண் கலங்கும் ஆதி title=

Idhayam Today's Episode Update: தொலைக்காட்சி சீரியல்கள் நம் பலரது வாழ்வோடு பின்னிப்பிணைந்து இருக்கும் அம்சமாக உள்ளன. தினசரி தொடராக வரும் டிவி சீரியல்களுக்கும், அவற்றில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கும் சினிமா பிரபலங்களையே மிஞ்சும் அளவுக்கு கூட ரசிகர் பட்டாளம் உள்ளது. அப்படி பல ரசிகர்கள் விரும்பி பார்க்கும் சீரியல்களில் ஒன்றுதான் ‘இதயம்’ சீரியல்.

இதயம் எபிசோட் அப்டேட்:

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் மதியம் 1.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் இதயம். இந்த சீரியலின் கடந்த சனிக்கிழமை எபிசோடில் சாரதா ரத்னத்திற்கு போன் செய்து பாரதியை பெரிய ஸ்கூலில் சேர்க்கப் போவதாக சொன்னதும் ரத்னம் அது எப்படி நீங்க என்னை கேக்காமல் சேர்க்கலாம் என்று கோபப்பட்டு கிளம்பிய நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

அதாவது, வீட்டில் சாரதா, அறிவு, ஏகாம்பரம் ஆகியோர் ரத்னம் வீட்டிற்கு வந்து சண்டை போடுவார், அதை வைத்து பிரச்சனை செய்யலாம் என்று பேசி கொண்டிருக்க ரத்னம் வீட்டிற்கு வருகிறார், அவர் வந்ததும் பாரதி சாரி மாமா குழந்தையை ஸ்கூலில் சேர்க்கிறது பத்தி நானே உங்ககிட்ட சொல்லியிருக்கணும் என்று மன்னிப்பு கேட்க ரத்னம் அதெல்லாம் ஒன்னும் பிரச்னை இல்ல.. யாருக்கும் அவ்வளவு சீக்கிரமாக அட்மிஷன் கிடைக்காத ஸ்கூல், அந்த ஸ்கூலில் தமிழ் படிக்கிறது நல்ல விஷயம் தானே என்று சொல்ல எல்லாரும் ஷாக் ஆகின்றனர். 

மேலும் படிக்க | GOAT படத்தில் விஜய்க்கு டபுள் மடங்கு சம்பளம்.. அப்போ மற்ற நடிகர்களின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

பிறகு எல்லாரும் ரூமிற்குள் சென்ற பிறகு மரகதம் என்னங்க நல்ல விஷயம்னு பேசுறீங்க என்று சத்தம் போட அவங்க சேர்க்கட்டும் அப்புறம் நம்ம குழந்தையை நாம கூட்டிட்டு வந்துடலாம் என்று சொல்கிறார். அடுத்து தமிழ் ஸ்கூலுக்கு கிளம்புவதால் டல்லாக இருக்க பாரதி குழந்தைக்கு ஆறுதல் சொல்ல பிறகு ஆதி, பாரதி, தமிழ் என்று மூவரும் கிளம்பி செல்கின்றனர். 

வழியில் ஆதி காரை நிறுத்தி விட்டு குழந்தையை பிரியா போகும் வருத்தத்தில் ஒரு மரத்தடியில் நின்று கண் கலங்குகிறான், இதையடுத்து பாரதியும் தமிழும் வந்து பார்க்க ஆதி அழுது கொண்டிருப்பதை பார்த்து ஷாக்காக ஆதி குழந்தையை பிரிந்து என்னால் இருக்க முடியாது என்று சொல்கிறான். ஆதி அழுவதை பார்த்து தமிழ் சிரித்து விட அதை பார்த்து பாரதியும் சிரிக்க இருவரும் சேர்ந்து ஆதியை கட்டி பிடித்து கொள்கின்றனர். 

மறுபக்கம் ரத்னம் வீட்டில் மணியும் தனமும் குழந்தை இல்லாததால் தமிழை கூட்டி வந்து நாமளே வளர்க்கலாம் என்று முடிவு செய்கின்றனர். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய இதயம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

மேலும் படிக்க | தயாராகிறது வருத்தப்படாத வாலிபர் சங்கம் 2! ஹீரோ சிவகார்த்திகேயன் இல்லை-வேறு யார்?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News