தோஹாவில் 8 இந்திய கடற்படை முன்னாள் அதிகாரிகள் கைது!

இந்திய கடற்படையில் இருந்து ஓய்வு பெற்ற 8 அதிகாரிகள் தற்போது கத்தாரின் தோஹாவில் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். முன்னாள் அதிகாரிகள் எதற்காக காவலில் வைக்கப்பட்டுள்ளனர் என்பது குறித்த தகவல்கள் கிடைக்கவில்லை.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Oct 27, 2022, 01:34 PM IST
  • பாதுகாப்பு தொடர்பான பணியில் ஈடுபட்டுள்ள நிறுவனம்.
  • முன்னாள் கடற்படை அதிகாரி காவலில் வைக்கப்பட்டுள்ள காரணம்.
  • வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி தரப்பிலும் எதுவும் கூறப்படவில்லை.
தோஹாவில் 8 இந்திய கடற்படை முன்னாள் அதிகாரிகள் கைது! title=

கத்தார் எமிரி கடற்படைக்கு பயிற்சி மற்றும் பிற சேவைகளை வழங்கும் நிறுவனத்துடன் கத்தாரில் பணிபுரியும் எட்டு முன்னாள் இந்திய கடற்படை அதிகாரிகள் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். தோஹாவில் உள்ள இந்திய தூதரகம் இந்த சம்பவம் பற்றி அறிந்திருக்கிறது எனவும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 25) அன்று, மிது பார்கவா பதிவிட்ட ட்வீட் மூலம் அம்பலமானது. அவர் தனது ட்வீட் செய்தியில், "அனைவரும் தோஹாவில் 57 நாட்கள் சட்டவிரோதமாக காவலில் உள்ளனர்." பிரதமர் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கர், பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சர் ஹர்தீப் பூரி உட்பட பல அமைச்சர்கள் இந்த பதிவில் டாக் செய்யப்பட்டுள்ளனர்.

பாதுகாப்பு தொடர்பான பணியில் ஈடுபட்டுள்ள நிறுவனம் 

முன்னாள் கடற்படை அதிகாரி தஹ்ரா குளோபல் டெக்னாலஜிஸ் அண்ட் கன்சல்டன்சி சர்வீசஸ் என்ற நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். கத்தாரின் பாதுகாப்பு மற்றும் பிற அரசு நிறுவனங்களின் உள்ளூர் வணிகப் பங்குதாரராகவும், பாதுகாப்பு உபகரண செயல்பாடு மற்றும் பராமரிப்பில் முக்கிய பங்கு வகிக்கும் நிறுவனமாகவும் இந்நிறுவனம் செயல்படுகிறது. நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி, காமிஸ் அல் அஜ்மி, ராயல் ஓமன் விமானப்படையின் ஸ்க்ராட்ரான் தலைவராக இருந்து ஓய்வு பெற்றவர்.

ஜனாதிபதியால் கௌரவிக்கப்பட்ட பூர்ணேந்து திவாரி

ஊடக அறிக்கைகளின்படி, தடுத்து வைக்கப்பட்டுள்ள எட்டு இந்தியர்களில் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் கமாண்டர் பூர்ணேந்து திவாரியும் (ஓய்வு பெற்றவர்) ஒருவர். 2019 ஆம் ஆண்டு இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திடம் இருந்து வெள்நாடு வாழ் இந்தியர்களுக்கான விருதைப் பெற்றார். அவர் இந்திய கடற்படையில் பணியாற்றியபோது, ​​பெரிய போர்க்கப்பலுக்கு தலைமை தாங்கியதாக நிறுவனத்தின் இணையதளத்தில் உள்ள அவரது சுயவிவரம் கூறுகிறது.

மேலும் படிக்க | திமுக ஆட்சியில் கொலை..கற்பழிப்பு அதிகரிப்பு - சசிகலா சரமாரி குற்றச்சாட்டு

முன்னாள் கடற்படை அதிகாரி காவலில் வைக்கப்பட்டுள்ள காரணம்

முன்னாள் இந்திய கடற்படை முன்னாள் அதிகாரிகள் எதற்காக காவலில் வைக்கப்பட்டுள்ளனர் என்பது குறித்து இதுவரை எந்த தகவலும் இல்லை. இந்த விவகாரத்தில் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி தரப்பிலும் எதுவும் கூறப்படவில்லை. நிறுவனத்தின் இணையதளத்தில் கொடுக்கப்பட்ட எண்களுக்கு அழைப்பு விடுத்தபோது, ​​எந்த பதிலும் கிடைக்கவில்லை என இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

நிறுவனத்தை பாராட்டிய இந்திய மிஷன்

நிறுவனம் தனது சுவாரஸ்யமான சான்றுகளை இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. அதன் பணிகளை தோஹாவில் உள்ள இந்திய தூதரகம் பாராட்டிள்ளது. கத்தார் தற்காப்புப் படைகளின் திறன் மற்றும் திறன்களை உருவாக்க நிறுவனம் சிறப்பான பணிகளைச் செய்து வருவதாக, இந்திய தூதர் தீபக் மிட்டல் தெரிவித்துள்ளார். "நட்பு நாடுகளுடன் கூட்டுசேர்வதற்கும் எங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வதற்கும் இந்தியத் தலைமையின் தொலை நோக்குப் பார்வைக்கு நீங்கள் சாட்சியாக இருக்கிறீர்கள்" என்று அவர் பாராட்டியுள்ளார். அதே நேரத்தில், இந்தியாவின் பாதுகாப்பு திறன்களை திறம்பட வெளிப்படுத்தியதற்காக நிறுவனத்தின் பணிகளைப் பாராட்டிய முந்தைய தூதர் பெரியசாமி குமரன், இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பிற்கான புதிய வாய்ப்புகளை நிறுவனம் உருவாக்கியுள்ளது என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | முன்னாள் அமைச்சர்களின் வீடுகளில் நடக்கும் சோதனைகள் பழிவாங்கும் நடவடிக்கைகள்: ஆர்.பி.உதயகுமார்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News