திமுக ஆட்சியில் கொலை..கற்பழிப்பு அதிகரிப்பு - சசிகலா சரமாரி குற்றச்சாட்டு

15 மாத திமுக ஆட்சியில் தமிழக மக்களுக்கு எந்த திட்டங்களும் செயல்படுத்தவில்லை. கொலை கொள்ளை கற்பழிப்பு மட்டுமே நடைபெறுவதாக சசிகலா குற்றம்சாட்டியுள்ளார். 

Written by - S.Karthikeyan | Last Updated : Sep 13, 2022, 08:47 AM IST
  • சேலம் மாவட்டத்தில் சசிகலா சுற்றுப் பயணம்
  • அதிமுக ஒற்றிணைய வேண்டும் என விருப்பம்
  • தமிழகத்தில் மக்கள் விரோத ஆட்சி நடைபெறுகிறது
திமுக ஆட்சியில் கொலை..கற்பழிப்பு அதிகரிப்பு - சசிகலா சரமாரி குற்றச்சாட்டு  title=

சேலம் மாவட்டத்திற்கு புரட்சிப் பயணம் மேற்கொண்ட சசிகலா, சேலம் மற்றும் ஆத்தூர் பகுதியில் பொதுமக்களை சந்தித்தார். அப்போது, கட்சி தொண்டர்கள் பட்டாசுகள் வெடித்து  அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் பேசிய சசிகலா, "அதிமுகவில் ஒரே குடும்பமாய் அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும். வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெறும். திமுக அரசு பதினைந்து மாத கால ஆட்சியில் மக்களுக்கு பயனளிக்கும் வகையில் எந்த திட்டங்களும் இதுவரை நிறைவேற்றப்படவில்லை. தமிழகத்தில் விலைவாசி உயர்வு அதிகரித்து வருகிறது. திமுகவை சார்ந்த அமைச்சர்கள் மேடைக்கு மேடை நாங்கள் 15 மாத கால ஆட்சியில் இதை செய்தோம் அதை செய்தோம் என வசனங்களை நாள்தோறும் கூறி வருகின்றனர்.

மேலும் படிக்க | இபிஎஸ்-க்கு தான் சாவி... ஒரே போடாக போட்ட உச்சநீதிமன்றம்...

 அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்கள் அனைத்தும் திமுக ஆட்சியில் மூடு விழா செய்ததுதான் திமுக அரசின் சாதனையாக உள்ளது. தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை வழிப்பறி கட்டப்பஞ்சாயத்து போன்ற சட்டத்துக்கு புறம்பான செயல்கள் மட்டும் நடைபெற்று வருகிறது. திமுகவினர் செய்யும் அராஜகங்கள் அனைத்தும் செய்தித்தாள்களின் தொலைக்காட்சியில் தினமும் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளது. பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலை திமுக ஆட்சியில் உள்ளது. பல்வேறு போதைப் பொருட்களின் ஆதிக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது மிகவும் கவலை அளிக்கிறது. பள்ளி கல்லூரிகளில் அருகிலேயே போதைப் பொருட்கள் தடையின்றி விற்பனை செய்யப்படுகிறது.

இப்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் மக்கள் விரோத ஆட்சியை தமிழக மக்கள் தள்ளி வைக்க தயாராக கொண்டிருக்கின்றனர். ஆத்தூர் மக்களின் பிரதான கோரிக்கையான வசிஷ்ட நதியினை இணைத்து விவசாயிகள் பாசன வசதிகள் பெரும்வகையில் ராமநாயக்கன்பாளையத்தில் கல்லாறு  தடுப்பணை கட்ட வேண்டும். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் தொழிற்பேட்டை ஆத்தூர் பகுதியில் அமைக்க வேண்டும். அரசு மகளிர் கல்லூரி அரசு பாலிடெக்னிக் அமைக்க இப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருக்கிறது. இதை உடனடியாக இந்த திமுக அரசு நிறைவேற்றி தர வேண்டும். விரைவில் அதிமுக ஆட்சி அமையும்" எனக் கூறினார். 

மேலும் படிக்க | நியாயப்படுத்த முயற்சிக்காதீர்கள் - தமிழக அரசை கண்டித்த இந்திய கம்யூனிஸ்ட்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News