இலங்கையில் உச்சம் தொட்ட பெட்ரோல் விலை; ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.450

Sri Lanka Crisis:பல மாதங்களாக பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்த இலங்கை அரசு, திவால் நிலையை அறிவித்தது. இலங்கை அரசு திவாலாகி விட்டதாக அந்நாட்டின் மத்திய வங்கி ஆளுநர் அறிவித்து இருப்பதாக தகவல்கள் வெளியாகின.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : May 24, 2022, 04:36 PM IST
  • பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்த இலங்கை அரசு, திவால் நிலையை அறிவித்தது.
  • இலங்கையில் அமுல்படுத்தப்பட்ட அவசரநிலையை அரசாங்கம் கடந்த சனிக்கிழமை நீக்கியது.
  • அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்களை கருத்தில் கொண்டு அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டது.
இலங்கையில் உச்சம் தொட்ட பெட்ரோல் விலை; ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.450 title=

அண்மையில் இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு, அத்தியாவசிய பொருட்களின் கடும் விலை உயர்வு, எரிபொருல் பற்றாக்குறை போன்றவற்றின் காரணமாக, தீவிரமடைந்த மக்கள் போராட்ட்டத்தை ஒடுக்கும் வகையில், ஆட்சி ஆதரவாளர்கள் போராட்டக்காரர்களை தாக்கினர். அதனை தொடர்ந்து வன்மூறை தீவிரமடைந்து  முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உட்பட பல தலைவர்களின் வீட்டிற்கு போராட்டக்காரர்கள் தீ வைத்தனர்.

அதையடுத்து மஹிந்தா ராஜபக்‌ஷே பதவி விலகி, அங்கு பின்னர் ஏற்பட்ட அரசியல் முன்னேற்றத்தில் ரனில் விக்ரமசிங்க பிரதமரானார்.  ஆனால், அவர் ராஜபக்சே குடும்பத்தை பாதுக்காக்கத் தான் பிரதமராகியுள்ளார் என அங்குள்ள பெரும்பாலான மக்கள் கருதுகின்றனர். 

மேலும் படிக்க | WISE: இங்கிலாந்தில் இருந்து இந்தியாவிற்கு பணம் அனுப்பும் மலிவான வழிமுறை

சில நாட்களுக்கு முன், பல மாதங்களாக பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்த இலங்கை அரசு, திவால் நிலையை அறிவித்தது. இலங்கை அரசு திவாலாகி விட்டதாக அந்நாட்டின் மத்திய வங்கி ஆளுநர் அறிவித்து இருப்பதாக தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில், இலங்கையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை மறுபரிசீலனை செய்து உயர்த்தியுள்ளதாக இலங்கை எரிசக்தி துறை அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நாடாளுமன்ற அமைச்சரவை ஒப்புதலுக்கு பிறகு, மறுசீரமைக்கப்பட்ட விலைப்பட்டியலை அமைச்சர் வெளியிட்டார். அதில்  பெட்ரோல் விலை ரூபாய் லிட்டருக்கு 450 ஆகவும், டீசல் விலை 445 ஆகவும் அதிகரித்துள்ளது.

முன்னதாக இலங்கையில் அமுல்படுத்தப்பட்ட அவசரநிலையை இலங்கை அரசாங்கம் கடந்த சனிக்கிழமை நீக்கியது. இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்களை கருத்தில் கொண்டு இரண்டு வாரங்களுக்கு முன்னர் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டது. 

இலங்கை பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது 1948ம் ஆண்டு பிரிட்டனிடம் இருந்து சுதந்திரம் பெற்றதில் இருந்து, முதல் முறையாக இலங்கை பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. அன்னியச் செலாவணி பற்றாக்குறையால், இறக்குமதி செய்யப்படும் உணவு தானியங்கள் மற்றும் எரிபொருளுக்கு பணம் செலுத்த முடியாமல் இந்த நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் அத்தியாவசியப் பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டு விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

மேலும் படிக்க | ஆஸ்திரேலியாவுக்கு தப்பி செல்ல முயன்ற 21 இலங்கையர்கள் கைது! 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News