மருத்துவமனையில் புகுந்த 5 அடி நீளம் பாம்பு; பதற வைக்கும் வைரல் வீடியோ

Snake Viral Video: அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 5 அடி நீளம் கொண்ட பாம்பு புகுந்ததால் பரபரப்பானது.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Jun 21, 2022, 08:40 AM IST
  • 5 அடி நீளமுள்ள பாம்பு மருத்துவமனையில் நுழைந்ததால் பரபரப்பு.
  • தற்போதும் ஒரு வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
  • சமூக ஊடகங்களில் பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல்.
மருத்துவமனையில் புகுந்த 5 அடி நீளம் பாம்பு; பதற வைக்கும் வைரல் வீடியோ title=

வைரல் வீடியோ: இணைய உலகம் ஒரு வேடிக்கையான உலகம். இங்கு பல வித வீடியோக்களை நாம் தினமும் காண்கிறோம்.

இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. 

மேலும் படிக்க | கழுகிடம் சிக்கி பாடாய்படும் பாம்பு தப்பித்ததா: வைரல் வீடியோ

சமூக ஊடகங்களில் பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகின்றன. சமீப காலங்களில் விலங்குகளின் வீடியோக்கள் பட்டையை கிளப்பி வருகின்றன. தற்போதும் ஒரு அதிர்ச்சியான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 

அந்த வகையில், திருவண்ணாமலை நகரின் புறவழிச்சாலையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள இரத்த பரிசோதனை நிலையம் அருகே பாம்பு புகுந்ததால் மருத்துவர்கள், மருத்துவ செவிலியர்கள் மற்றும் நோயாளிகள் அலறியடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர். அதன்படி இந்த சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் அந்த பாம்பை இலாவகமாக இடுக்கி மூலம் பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர், இதனால் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் சுமார் ஒரு மணி நேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சுற்றி முள் புதர்களும், மரம் செடி கொடிகளும் சூழ்ந்துள்ளதால் அதிக அளவில் பாம்புகள் வளர்ந்து அடிக்கடி மருத்துவமனை வளாகத்திற்குள் நுழைந்து வருவது வழக்கமாக தொடர்ந்து நீடித்து வருகிறது. 

இந்நிலையில் இரவு சரியாக 9 மணியளவில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள்ள இரத்தப் பரிசோதனை நிலையம் அருகே சுமார் 5 அடி நீளமுள்ள நல்ல பாம்பு உள்ளே நுழைந்ததால் என்ன செய்வது என்று அறியாமல் மருத்துவர்களும் செவிலியர்களும் மற்றும் நோயாளிகளும் நல்ல பாம்பை கண்டு அலறி அடித்துக் கொண்டு ஓடி உள்ளனர்.  

பின்னர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை சார்பில் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்ததன் அடிப்படையில் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து இடிக்கி மூலம் நல்ல பாம்பை லாவகமாக பிடித்து பின்னர் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர், இந்த சம்பவத்தால் மருத்துவமனை வளாகம் முழுவதும் சுமார் ஒரு மணிநேரத்திற்கும் மேலாக பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் படிக்க | மணிக்கணக்கில் ஓடிவந்த சிறுத்தைக்கு காத்திருந்து அல்வா கொடுத்த மான் - வைரல் வீடியோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News