பலமுறை கடித்த பாம்பு.. மீண்டும் மீண்டும் சீண்டிய வாலிபர் - Viral Video

Snake Attack Video: எந்த ஒரு உயிரினத்தையும் துன்புறுத்தவோ, சீண்டவோக் கூடாது. ஆனால் ஒருவர் பாம்பை மீண்டும் மீண்டும் சீண்டுகிறார். அதற்கு பாம்பு கொடுத்த பதில் என்ன? வீடியோவில் பார்க்கவும்.

Written by - Shiva Murugesan | Last Updated : Aug 23, 2022, 01:16 PM IST
  • பாம்புகளை பொம்மைகளாக நினைத்து விளையாடுகிறார்கள்.
  • எந்த ஒரு உயிரினத்தையும் துன்புறுத்தவோ, சீண்டவோக் கூடாது.
  • கை முழுவதும் ரத்தக்கரையாக மாறுகிறது- வீடியோ பாருங்கள்.
பலமுறை கடித்த பாம்பு.. மீண்டும் மீண்டும் சீண்டிய வாலிபர் - Viral Video title=

பாம்பு வீடியோ: இந்த உலகில் மிகவும் ஆபத்தான உயிரினங்களில் பாம்புகள் அடங்கும். பாம்பு என்றாலே பலர் அலறியடித்து ஓடுவார்கள். பாம்பைக் கண்டால் படையும் நடுங்கும் என்பார்கள். எனவேதான் பாம்புகளிடம் இருந்து தூரமாக இருங்கள் என்று பெரியவர்கள் எப்போதும் நமக்கு அறிவுறுத்துவது உண்டு. பாம்பு என்றவுடனே பயமும் பதற்றமும் ஏற்படும். ஆனால் சிலர் பாம்புகளை கண்டு அஞ்சுவது இல்லை. சிலர் பொம்மைகளாக நினைத்து விளையாடத் தொடங்குகிறார்கள். அப்படிப்பட்டவர்கள் குறித்து அறிந்துக்கொள்ள இந்த காணொளியை அவசியம் பார்க்கவும். இந்த வீடியோவைப் பார்த்து மக்கள் தங்கள் தூக்கத்தை இழந்துள்ளனர். ஏனென்றால், அந்த வீடியோவில் ஒரு நபரை பாம்பு ஒன்று பயங்கரமாக தாக்கும் காட்சி இடம் பெற்றுள்ளது. நபரை பாம்பு கடிப்பதை பார்த்தால் கண்டிப்பாக உடல் நடுங்கும்.

தண்ணீர் பாம்பை பிடிக்க ஒருவர் தொடர்ந்து முயற்சி செய்து கொண்டிருப்பதை வீடியோவில் காணலாம். அந்த விஷ ஜந்து மனிதனுக்குக் கற்றுத் தரும் பாடம், அவன் வாழ்நாள் முழுவதும் நினைவில் நிற்கும். இந்த பாடத்தை அவர் மறக்கவே மாட்டார். யாராக இருந்தாலும், எந்த ஒரு உயிரினத்தையும் துன்புறுத்தவோ, சீண்டவோக் கூடாது. ஆனால் இங்கு ஒருவர் பாம்பை சீண்டுகிறார். அதற்கு பாம்பு கொடுத்த பதில் என்ன என்பதை வீடியோவில் பார்க்கவும்.தற்போது இந்த பாம்பு வீடியோ வைரலாகி வருகிறது.

 

மேலும் படிக்க: விளையாட்டு விபரீதமானது: நபரை பதம் பார்த்த பாம்பு: வீடியோ வைரல்

சாலையில் ஊர்ந்து செல்லும் பாம்பை பார்த்தவுடன் அந்த நபர் அதை சீண்டுவதை வீடியோவில் காணலாம். அந்த பாம்பை தன் கைகளால் பிடிக்க அந்த நபர் முயற்சிக்கிறார். அவரின் செயல் பாம்புக்கு கோபத்தை ஏற்படுத்துகிறது. அதன் பிறகு, அந்த பாம்பு அந்த நபரின் கையையில் கடிக்கிறது. பாம்பு கடித்ததால் அந்த நபரின் கையில் ரத்தம் வருவதை பார்க்கலாம். பாம்பு கடித்தவுடன், அந்த நபர் பயந்து பிறகு, அமைதியாக இருப்பார், மருத்துவமனை செல்வார் என நினைத்தால், அந்த நபர் மீண்டும் பாம்பை பிடிக்க முயற்சிக்கிறார். இதையடுத்து பாம்பு மீண்டும் தாக்குகிறது. இந்த முறை விரல்களில் பாம்பு கடிக்கிறது. கை முழுவதும் ரத்தக்கரையாக மாறுகிறது. இந்த வீடியோ world_of_snakes_ என்ற இன்ஸ்டாகிராம் கணக்கில் பகிரப்பட்டுள்ளது. இந்த வீடியோவும் சமூக வலைதள பயன்பாட்டாளர்களால் அதிகம் விரும்பப்பட்டு வருகிறது. 

மேலும் படிக்க: மலைப்பாம்புக்கு ஒரு மரியாதை வேண்டாம்? இப்படியா கொஞ்சறது: ஷாக்கிங் வைரல் வீடியோ

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News