செண்ட்-ஆஃப் கொடுத்த பள்ளி, குலுங்கி அழுத டீச்சர்: கண்கலங்கும் இணையவாசிகள்

Emotional Viral Video: ஒரு ஆங்கில ஆசிரியர் 50 ஆண்டுகள் கற்பித்து ஓய்வு பெற்றார். அவருக்கு பிரியாவிடை அளிக்க ஒட்டுமொத்த பள்ளியும் ஒன்றுகூடியது. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jun 6, 2022, 11:47 AM IST
  • இணைய உலகம் ஒரு வேடிக்கையான உலகம்.
  • சமூக ஊடகங்களில் பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகின்றன.
  • தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
செண்ட்-ஆஃப் கொடுத்த பள்ளி, குலுங்கி அழுத டீச்சர்: கண்கலங்கும் இணையவாசிகள் title=

வைரல் வீடியோ: இணைய உலகம் ஒரு வேடிக்கையான உலகம். இங்கு பல வித வீடியோக்களை நாம் தினமும் காண்கிறோம்.

இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. 

சமூக ஊடகங்களில் பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகின்றன. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 

ஆசிரியர்கள் நம் சமூகத்தின் முதுகெலும்பு. மற்றும் மாணவர்களின் வாழ்க்கையில் வழிகாட்டும் சக்திகளாக அவர்கள் திகழ்கிறார்கள். நல்ல ஆசிரியர்கள் ஒரு மாணவரின் வாழ்க்கையில் பலவித ஆக்கப்பூர்வமான மாற்றங்களை ஏற்படுத்துகிறார்கள். 

ஆனால் அப்படிப்பட்ட ஆசிரியர்கள் பணியிலிருந்து ஓய்வுபெறுவது அவர்களுக்கு மட்டுமல்லாமல், அவர்களது மாணவர்களுக்கும் வேதனையான, உணர்வுப்பூர்வமான தருணமாக பார்க்கப்படுகின்றது. இப்படிப்பட்ட ஒரு சம்பவத்தின் வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. 

ஒரு ஆங்கில ஆசிரியர் 50 ஆண்டுகள் கற்பித்து ஓய்வு பெற்றார். அவருக்கு பிரியாவிடை அளிக்க ஒட்டுமொத்த பள்ளியும் ஒன்றுகூடியது. வீடியோவில், ஆசிரியர் பள்ளி வளாகத்தில் நடந்து செல்வதை பார்க்க முடிகின்றது. மாணவர்களும் மற்ற ஆசிரியர்களும் அவரது பணி ஓய்வு நாளில் பிரியாவிடை அளிக்க வரிசையில் நிற்கிறார்கள். பள்ளிக் கட்டிடத்த்தில் அவர் நடந்துசெல்கையில், அனைவரும் அவரை பாராட்டி வழி அனுப்புகிறார்கள். 

மேலும் படிக்க | தில்லாலங்கடி கில்லாடி, திருதிருவென விழித்த போலீஸ்: வீடியோ பார்த்தா சிரிக்காம இருக்க முடியாது 

இந்த வீடியோவை அவரது மகள் கேத்தரின் இன்ஸ்டாகிராமில் வெள்ளிக்கிழமை பகிர்ந்துள்ளார். அதில் அவர், “ நீங்கள் ஒரு முழுமையான சிறந்த ஆசிரியை... பணி ஓய்வுக்கு வாழ்த்துக்கள், அம்மா!!" என்று எழுதியுள்ளார். 

“இந்த உயர்நிலைப் பள்ளியில் 50 ஆண்டுகளாக என் அம்மா கற்பித்தார். ஆங்கில ஆசிரியையாக அவர் தனது பணியை தொடங்கியபோது அவருக்கு வயது 22. இன்று இந்த பள்ளியில் அவரது கடைசி நாள். அவருக்கு முழு பள்ளியும் அன்பான முறையில் பிரியாவிடையை அளித்தது” என்று அவர் மேலும் எழுதியுள்ளார். 

ஆசிரியரின் உணர்வுப்பூர்வமான பிரியாவிடை வீடியோவை இங்கே காணலாம்: 

இந்த வீடியோ வைரலாகி, இணையத்தில் பலரது மனதையும் கவர்ந்துள்ளது. ஒரு பயனர், “ஆஹா.... இந்த வீடியோ மிகவும் நன்றாக உள்ளது.” என்று எழுதியுள்ளார். 

மற்றொரு பயனர், “உங்கள் தாய் அனைவரது வாழ்விலும் ஆக்கப்பூர்வமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளார் என்பது தெரிகிறது” என்று கூறியுள்ளர். மற்றொருவர், “அருமையான தருணம். அவர் ஆசிரியராக பணிபுரிந்து பலருக்கு நல்வழி காட்டியுள்ளார். பல நல்ல உள்ளங்களை சம்பாதித்துள்ளார்.” என்று கமெண்ட் செய்துள்ளார். 

இந்த வீடியோ இணையவாசிகளை உணர்ச்சிவசப்படுத்தியுள்ளது. மேலும் இதைப் பார்த்து தங்களுக்கு கண்களில் கண்ணீர் வந்ததாகவும் பலர் கமெண்ட் செய்துள்ளனர்.

மேலும் படிக்க | என்னடா இது சூனா பானாவுக்கு வந்த சோதனை - பந்தை கவ்வ திணறும் நாய்க்குட்டியின் வைரல் வீடியோ 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News