பிளான் போட்டு அட்டாக் செய்த பருந்தை பதற வைத்த பாம்பு: வைரல் வீடியோ

Viral Video: சமீப காலங்களில் பாம்புகளின் வீடியோக்கள் பட்டையைக் கிளப்பி வருகின்றன. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தை கலக்கி வருகின்றது.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Feb 22, 2022, 01:43 PM IST
  • இணைய உலகம் ஒரு வேடிக்கையான உலகம்.
  • இங்கு பல வித வீடியோக்களை நாம் தினமும் காண்கிறோம்.
  • தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தை கலக்கி வருகின்றது.
பிளான் போட்டு அட்டாக் செய்த பருந்தை பதற வைத்த பாம்பு: வைரல் வீடியோ title=

வைரல் வீடியோ: இணைய உலகம் ஒரு வேடிக்கையான உலகம். இங்கு பல வித வீடியோக்களை நாம் தினமும் காண்கிறோம்.

இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. 

சமூக ஊடகங்களில் பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகின்றன. சமீப காலங்களில் பாம்புகளின் வீடியோக்கள் பட்டையைக் கிளப்பி வருகின்றன. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தை கலக்கி வருகின்றது.

வானில் பறக்கும் பறவைகளில் பருந்து மிகவும் ஆபத்தான ஒன்றாகக் கருதப்படுகிறது. இது தனது நகங்களைக் கொண்டு தனது இரையைப் பிடித்து விட்டால், அந்த இரை அதன் பிடியில் இருந்து தப்பிப்பது மிகக்கடினம். ஆனால் இந்த ஆபத்தான பருந்தையும் ஒரு சிறிய பாம்பு தோற்கடித்து விடுகிறது. பருந்துக்கு உயிரைக் காப்பாற்றிக்கொள்வதே கடினமாகி விடுகிறது. 

தற்போது இப்படிப்பட்ட ஒரு வீடியோ இணைய உலகில் பரவி வருகிறது. இந்த வீடியோ பாம்புகள் மற்றும் கழுகுகள் தொடர்பானது. இந்த வீடியோவில் நடப்பதைப் பார்த்தால் மனம் பதபதைக்கிறது. இந்த வீடியோ வெளிவந்த உடனேயே ஆயிரக்கணக்கான முறை பார்க்கப்பட்டுள்ளது. மேலும் ஏராளமானோர் அதை லைக் செய்துள்ளனர்.

சிறிய பாம்பை எளிதில் இரையாக்கலாம் என தப்பு கணக்கு போட்ட பருந்து

சில நொடிகளே கொண்ட இந்த வீடியோவில், வானில் பறந்து கொண்டிருந்த பருந்து திடீரென சிறிய பாம்பு ஒன்றை காண்கிறது. சிறிய பாம்பை எளிதாக இரையாக்கி விடலாம் எனக் கருதி, பருந்து அதைப் பார்த்த உடனேயே தரையில் இறங்குகிறது. பின்னர் தனது ஆபத்தான நகங்களால் பாம்பை பிடிக்க முயல்கிறது. 

மேலும் படிக்க | கிளாஸா மலை ஏறி மாஸ் காட்டிய பாட்டியின் வைரல் வீடியோ 

வீடியோவில் இதற்குப் பிறகு காணப்படும் காட்சிகள் ஆச்சரியத்தை அளிக்கின்றன. பொதுவாக பருந்து பாம்பை எளிதாக தனது கட்டுப்பாட்டில் கொண்டுவந்துவிடும். ஆனால் இந்த வீடியோவில் அதற்கு மாறான விஷயங்கள் நடக்கின்றன. 

பருந்து பாம்பை அதன் நகங்களால் பிடித்தவுடன், பாம்பும் உடனடியாக பருந்தின் உடல் மீது முழுமையாக சுற்றிக்கொள்கிறது. பாம்புக்கும் பருந்துக்கும் இடையே கடுமையான சண்டை நடக்கின்றது. இறுதியில் பாம்பை கட்டுப்படுத்த முடியாமல் தோல்வியை ஏற்றுக்கொள்கிறது. 

வேட்டையாட வந்த பருந்தே தன் உயிரை காப்பாற்ற கஷ்டப்படும் நிலைமை அங்கு ஏற்படுகின்றது. பாம்பும் பருந்தும் தரையில் சண்டை இடுவதைப் பார்த்த ஒரு நபர் அங்கு வந்து பருந்தை பாம்பின் பிடியில் இருந்து காப்பாற்றுவதை வீடியோவில் காண முடிகின்றது. 

பாம்பு மற்றும் பருந்தின் சண்டை வீடியோவை இங்கே காணலாம்:

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by(@nature27_12)

இந்த வீடியோ எப்போது, ​​​​எங்கிருந்து எடுக்கப்பட்டது என்று தெரியவில்லை. ஆனால் கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் இது அதிகம் பார்க்கப்பட்டு வருகிறது. இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் nature27_12 என்ற பெயரில் பதிவேற்றப்பட்டுள்ளது. இந்த வீடியோவுக்கு மக்கள் பல வித கமெண்டுகளை அள்ளி வீசி வருகின்றனர். 

மேலும் படிக்க | சீறி பாய்ந்த காளையிடம் சிக்கிய மனிதர்! வைரலாகும் வீடியோ! 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News