King Cobra Attack: சுற்றுலா பயணிகள் மத்தியில் என்ட்ரியான ராஜநாகம்..! செம ஷாக் - வைரல் வீடியோ

கோவாவில் சுற்றுலா வந்த சுற்றுலா பயணிகள் ராஜ நாகத்தை பார்த்து திகைத்து போனார்கள். மிக அருகில் நின்று பார்த்தவர்கள் அதன் சீற்றத்தில் அச்சத்தின் உச்சத்துக்கே போனார்கள்.   

Written by - S.Karthikeyan | Last Updated : Apr 30, 2023, 07:59 AM IST
King Cobra Attack: சுற்றுலா பயணிகள் மத்தியில் என்ட்ரியான ராஜநாகம்..! செம ஷாக் - வைரல் வீடியோ  title=

கோவா சுற்றுலா 

கோடை தொடங்கிவிட்டதால் சுற்றுலா துறை களைக்கட்டிக் கொண்டிருக்கிறது. கோவில்கள் மற்றும் மலைப் பிரதேசங்களை நோக்கி மக்கள் படையெடுத்து சென்று கொண்டிருக்கிறார்கள். கோவாவுக்கும் மக்கள் அலை அலையாக சுற்றுலா சென்று கொண்டிருக்கின்றனர். அங்கு இருக்கும் இயற்கையின் ரம்யமான அழகு, கோவா கடற்கரை, உல்லாச விடுதிகள், சொகுசு கப்பல் பயணம், இரவு நேர கேளிக்கை நடனங்கள் எல்லாம் சுற்றுலா பயணிகளின் ஏக்கத்தை தணிக்கும் கேளிக்கைகளின் உச்சமாக இருப்பதால் மக்கள் அங்கு செல்வதை அதிகம் விரும்புகின்றனர்.

ராஜ நாகத்தின் என்ட்ரி 

அப்படி சென்றவர்களுக்கு திடீரென ஷாக் கொடுத்திருக்கிறது ஒரு ராஜநாகம். சுற்றுலா வந்தவர்கள் முன்பு திடீரென தோன்றியதால் அச்சத்தின் உச்சத்துக்கே சென்றார்கள். அதேநேரத்தில் மிக அருகில் ராஜ நாகத்தை பார்க்கும் வாய்ப்பை பெற்றதை நினைத்து பூரித்தும்போனார்கள். அப்போது எடுக்கப்பட்ட வீடியோவை தங்களின் சோஷியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்திருக்கின்றனர். 

மேலும் படிக்க | பிளே ஸ்கூல் டீச்சரை பழிவாங்கிய சுட்டிக் குழந்தை: செம காமெடி - வீடியோ

பாம்பின் வைரல் வீடியோ 

அந்த வீடியோவில் ஆளுயர இருக்கும் ராஜநாகம் புதருக்குள் சென்று தஞ்சமடைய பார்க்கிறது. அதனை அங்கிருப்பவர்கள் அனைவரும் சுற்றி நின்று வேடிக்கை பார்த்து கொண்டிருக்க, பாம்பு பிடிப்பதில் கை தேர்ந்தவர் அசால்டாக சென்று ராஜநாகத்தின் வாலைப் பிடித்து இழுக்கிறார். எதற்காக என்றால் அந்த பாம்பை பிடித்து மக்கள் நடமாட்டம் இல்லாத பகுதியில் விடுவதற்காக முயற்சி செய்கிறார். ஆனால் ராஜ நாகம் திடீரென திரும்பி அவரையே கொத்த செல்கிறது. இது சுற்றியிருந்த சுற்றுலா பயணிகளுக்கு செம ஷாக்கை கொடுக்கிறது. 

டிவிட்டரில் வைரலான ராஜநாகம்

இருந்தாலும் அவர் விடுவதாக இல்லை. ராஜ நாகத்தை சிறிது நேர முயற்சிக்கு பிறகு பையில் பாதுகாப்பான ஒரு பையில் போட்டுவிடுகிறார். ஆனால் அந்த பாம்பை பிடிப்பதற்குள் அவர் பட்டபாடு இருக்கிறதே. பார்ப்பவர்களுக்கு திகைப்பையூட்டும். ஒவ்வொரு நொடியும் மெதுமெதுவாக பாம்பின் அசைவுகளை கணித்து ராஜநாகத்தை பிடிக்கிறார். டிவிட்டரில் பகிரப்பட்டிருக்கும் இந்த வீடியோ மட்டும் சுமார் 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பார்வைகளை கடந்திருக்கிறது. மற்ற சமூக ஊடகங்களிலும் டிரெண்டிங் லிஸ்டில் இடம்பிடித்துவிட்டது.

மேலும் படிக்க | சில்மிஷம் செய்த குரங்கை முறைத்த பெண்: 'பளார்..' ஒரே அடி...வைரல் வீடியோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News