நாகப்பாம்பை வெச்சு செய்யும் குரங்கு: பீதியுடன் பார்க்கும் நெட்டிசன்ஸ்.. வைரல் விடியோ

Viral Video: சமீபத்தில் இணையத்தில் பகிரப்பட்டுள்ள ஒரு வீடியோவில் குரங்கு செய்யும் ஒரு வேலை அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது. இதை பார்த்தால் நம் கண்களை நம்மாலேயே நம்ப முடியவில்லை.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Nov 14, 2023, 09:59 AM IST
  • இந்த வீடியோ சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் d_shrestha10 என்ற பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது.
  • வெளியிடப்பட்டதிலிருந்து இது வைரலாக பரவி வருகிறது.
  • இதற்கு இதுவரை 67,000 -க்கும் மேற்பட்ட லைக்குகளும் லட்சக்கணக்கான வியூஸ்களும் கிடைத்துள்ளன.
நாகப்பாம்பை வெச்சு செய்யும் குரங்கு: பீதியுடன் பார்க்கும் நெட்டிசன்ஸ்.. வைரல் விடியோ title=

வைரல் வீடியோ: மனித வாழ்க்கை பல வித இறுக்கங்களையும் பிரச்சனைகளையும் கொண்டது. தினம் தினம் பல வித இன்னல்களையும் சவால்களையும் சந்திக்கும் நாம் இவற்றிலிருந்து சிறிதளவு நிவாரணம் கிடைத்தாலும் நிம்மதி அடைகிறோம். சில விஷயங்கள் அவ்வப்போது நம்மை திசை திருப்பி நமக்கு ஒரு மாறுதலை அளிக்கின்றன. அத்தகைய விஷயங்களில் சமூக ஊடகங்களுக்கு ஒரு முக்கிய பங்குண்டு. இங்கு பகிரப்படும் விஷயங்களும், புகைப்படங்களும், வீடியோக்களும் நம்மை நம் அன்றாட இறுக்கங்களிலிருந்து திசை திருப்புகின்றன. 

சமூக ஊடகங்களில் விலங்கு வீடியோக்கள் பலரால் விரும்பி பார்க்கப்படுகின்றன. மனிதர்கள் விலங்குகளின் அருகில் சென்று பார்க்க முடியாத பல விஷயங்களை நாம் இவற்றின் மூலம் காண்கிறோம். இணையத்தில் வேடிக்கையான மற்றும் ஆச்சரியமான வீடியோக்கள் பல உள்ளன. நாய், பூனை, குரங்கு, பாம்பு ஆகிய விலங்குகளின் வீடியோக்களை இணயவாசிகள் விரும்பி பார்க்கிறார்கள். இவற்றில் குரங்குகளின் வீடியோகளுக்கு தனி மவுசு உள்ளது என்றே கூறாலாம். இவை செய்யும் குறும்புகளும் கோமாளித்தனங்களும் மக்களை கவரும் வண்ணம் இருக்கின்றன.

சமீபத்தில் இணையத்தில் பகிரப்பட்டுள்ள ஒரு வீடியோவிலும் குரங்கு செய்யும் ஒரு வேலை அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது. இதை பார்த்தால் நம் கண்களை நம்மாலேயே நம்ப முடியவில்லை. பாம்பு என்றாலே மனிதர்கள் மட்டுமல்லாமல் விலங்குகளும் அச்சப்படுவதுண்டு. அதுவும், நாகப்பாம்பு என்றால் கேட்கவே வேண்டாம். ஆனால், இந்த வீடியோவில் முற்றிலும் மாறுபட்ட ஒரு காட்சியை நாம் காண முடிகின்றது. 

குரங்கு ஒன்று பொம்மையுடன் விளையாடுவது போல நாகப்பாம்புடன் விளையாடுவதை வீடியோவில் காண முடிகின்றது. நாகப்பாம்பு அதன் விஷம் மற்றும் மிரட்டும் சீற்றம் காரணமாக உலகின் மிக ஆபத்தான பாம்புகளில் ஒன்றாக கருதப்படுகின்றது. ஆனால், இந்த வீடியோவில் நடக்கும் விஷயமோ நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது. 

பாம்பை பாடாய் படுத்திய குரங்கு

ஒரு மரத்தில் உச்சியில் குரங்கு அமர்ந்திருக்க, பாம்பு ஒன்று மரத்தின் மீது ஏறிக்கொண்டு இருக்கின்றது. பாம்பை பார்த்த குரங்கு அதை நோக்கி வந்து பாம்பின் வாலைப் பிடித்து அதை ஒரு பொம்மை போல சுழற்றுகிறது. ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், குரங்கு வாலை பிடித்ததும் நாகப்பாம்பிற்கு கோவம் வரவில்லை. அது மிகவும் அமைதியாக இருந்து, குரங்கின் குறும்புகளை பொறுத்துக் கொள்வது போல் தெரிகிறது. குரங்கு பாம்பின் வாலை சுற்றி வளைத்து தன் இஷ்டத்திற்கு செய்கிறது. ஒரு கட்டத்தில் அது பாம்பின் வாலை தன் வாயால் கடிக்கவும் முயல்கிறது. 

நம்ப முடியாத அந்த வீடியோவை இங்கே காணலாம்:

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Dev Shrestha (@d_shrestha10)

மேலும் படிக்க | காளை மாட்டுடன் பைக்கில் டபுள்ஸ் போன ஆசாமி.... கொஞ்சம் ஓவர் தான் இல்லையா..!!

வீடியோ இணையத்தில் வைரல் ஆனது

இந்த வீடியோ சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் d_shrestha10 என்ற பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. வெளியிடப்பட்டதிலிருந்து இது வைரலாக பரவி வருகிறது. இதற்கு இதுவரை 67,000 -க்கும் மேற்பட்ட லைக்குகளும் லட்சக்கணக்கான வியூஸ்களும் கிடைத்துள்ளன. இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அளித்து வருகிறார்கள்.

'இந்த வீடியோவை பார்க்க மிகவும் ஆச்சரியமாக உள்ளது' என ஒரு பயனர் எழுதியுள்ளார். 'இந்த வீடியொவில் நடக்கும் விஷயங்களை நம்ப முடியவில்லை' என மற்றொருவர் கூறியுள்ளார். 'இந்த வீடியோவில் பாம்பு பொறுமையாய் இருப்பதால் குரங்கு தப்பித்தது. இல்லையென்றால் குரங்கு பாம்பிடம் சிக்கியிருக்கும்' என ஒரு பயனர் தெரிவித்துள்ளார்.

சிலர் இந்த வீடியோ மிகவும் வேடிக்கையானது என்றும், சிலர் இந்த வீடியோ மிகவும் ஆபத்தானது என்றும் கூறியுள்ளனர். இந்த வீடியோ மிகவும் அதிர்ச்சியளிக்கிறது என்று வனவிலங்கு நிபுணர்கள் கூறுகின்றனர். நாகப்பாம்பு ஒரு விஷப்பாம்பு என்றும், குரங்கைக் கடித்திருந்தால் குரங்கு இறந்திருக்கலாம் என்றும் அவர்கள் கூறியுள்ளனர். இருப்பினும், இந்த வீடியோவில் நாகப்பாம்பு குரங்கின் செயல்களை பொறுத்துக்கொண்டது, அதை கடிக்கவில்லை. யாரோ வீடியோ பதிவு செய்வதற்காக இதைச் செய்ததாகத் தெரிகிறது. வன விலங்குகளிடம் இதுபோன்று நடந்து கொள்ள வேண்டாம் என வனவிலங்கு நிபுணர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

(பொறுப்புத் துறப்பு: இந்த பதிவில் பகிரப்பட்டுள்ள வீடியோவும், கொடுக்கப்பட்டுள்ள தகவல்களும் சமூக ஊடகங்களிலிருந்து எடுக்கப்பட்டவை. இவற்றை ஜீ தமிழ் நியூஸ் எந்த விதத்திலும் பரிந்துரைக்கவில்லை.)

மேலும் படிக்க | கணக்கெல்லாம் எனக்கு கடலைமிட்டாய் மாதிரி: இணையத்தை வாய் பிளக்க வைத்த நாய், வைரல் வீடியோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News